ad

Saturday, August 14, 2010

இது உங்களுக்கு தோணலையா?

இன்றைய தினம் எதை பதிவிடுவதேன்று கொஞ்சம் ஆழமாக யோசித்து  பின்னர் நல்லதொரு விடயத்தை சொல்லலாம் போல இருந்துச்சு அதுதான் காலையிலேயே அள்ளிக்கட்டிக்கொண்டு வந்தாச்சு....

அதாவது இதுவரைக்கும் அடியேன் எழுதிய பதிவுகளுக்கு ( மொக்கைகளுக்கு ஹீ ஹீ.. ) நண்பர்களால் வழங்கப்பட்ட பின்னூட்டங்களில் எனக்கு ரொம்ப பிடிச்ச பின்னூட்டங்களை
தர போகிறேன் , பதிவுகள், பின்னூட்டங்கள் அனைத்துக்கும் இணைப்பும் கொடுத்துள்ளேன், முடிந்தால் மீண்டும் ஒருமுறை  பதிவுகளை பார்வை இடுங்கள் மறக்காமல் பின்னூட்டங்களையும் வோட்டுக்களையும் குத்த மறக்காதீங்க....

 "புத்திமான் பலவான் " -  

   டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said... மொட்டையடித்து   'தலைக்கனத்தை' குறைத்தா

 அடி ஆத்தி அப்படியா சங்கதி....!!!!!




சந்ரு said...
//**ஒவ்வொரு மணி நேரத்திற்கும் உலகம் முழுவதும் உள்ள வங்கிகளில் 22 ஆயிரம் காசோலைகள் தவறான வங்கி கணக்குகளில் "வரவு " வைக்கப் படுகிறதாமுன்கோ.......// நம்ம கணக்கிலும் வரவு வைத்துட்டாங்கன்னா... ???????????       அபிரகாம் லிங்கனும் நானும்..... ( 37 comments)



Ammu Madhu said...
எனக்கும் ரொம்ப கோவம் வரும்..யாரோ ஒருத்தங்க கோவத்தை கட்டுப்படுத்த யோகா பண்ண சொன்னாங்க..எனக்கு யோகா சொல்லி தந்த டீச்சருக்கே கோவம் வர வச்சுடோம்ல!!!:))) கொண்டாட்டமும் , "கொல்லும்"வாட்டமும். 

LOSHAN said... மனிதாபிமானத்தை தட்டியெழுப்பும் வரிகள்..

//இவர்களுக்கான " உணவு " கவசங்களை தயாரிக்க எத்தனை பேர் தயார்?????//
விடையில்லாத கேள்வி..

 

இந்திய நாட்டின் பிரிவினைக்கு நேரு காரணமா ?

 Robin said... முஸ்லிம்களுக்கு எதிராக மத வெறியர்கள் வெறுப்பை தூண்டியதும் அதனால் முஸ்லிம்களிடையே தோன்றிய அச்சமும் அந்த அச்சத்தை சுய லாபத்திற்காக பயன்படுத்திய ஜின்னா அண்ட் கோ-வும் தான் இந்தியா பிளவுபட காரணங்கள்.

"தலைவருக்கான " என் பகிரங்க மடல்....

வந்தியத்தேவன் said... நாட்டில் அதிகம் தலைவர்கள் இருக்கின்றார்கள் எந்த தலைவருக்கு கடிதம் என ஆவலுடன் வாசித்தால் கடைசியில் நம்ம அழுக்கடை நுளம்பாருக்கு கடிதம். அவரைச் சில நாட்கள் அமைதியாக இருக்கச் சொல்லவும்.  

 

புகைக்க போறீங்களா ? அப்ப நான் பொறுப்பில்ல !!!!

தேவன் மாயம் said... இதைவிட சிறப்பா புகையின் கொயுமையை சொல்ல முடியாது!!

 

என்னாத்த சொல்லுறது இத பற்றி.........




தேவன் மாயம் said...
காதல்.- "காதல் ஒரு எளிமையான பாடம்தான் ஆனால் அதில் - பல பேர் தோற்று போகிறார்கள்." இது ஒரு கவிஞனின் பார்வையில் // மிகச்சரிதான் !!

எழுத மறந்த கவிதைகள்......பாகம்-1
அக்பர் said... //நினைவுகள் குழந்தைகள் மாதிரி...
அழுத பின்புதான்உறங்குகின்றன...//

எப்படித்தான் தோணுதோ...
நல்ல வரிகள்.தொடர்ந்து எழுதுங்கள். 

 

எந்த கை உங்கள் நம்பிக்"கை" ?

 வண்ணத்துபூச்சியார் said... சுவாரசியமான தகவல்கள். நானு இரண்டு கையாலே தான் இந்த பின்னூட்டத்தை டைப் பண்ணினேன்.

நன்றி. 

  

இதுவல்லவோ தீர்ப்பு................




சி. கருணாகரசு said...
இததான் எங்க ஊருல...தவள தான் வாயால கெடும்முன்னு சொல்லுவாங்க.    "அது " போல வருமா?... Cable Sankar said... ஆட்டுக்கல்லில் அரைக்கப்பட்ட சட்னியின் சுவை என்ன தான் சூப்பர் மிக்ஸியில் அரைத்தாலும், அந்த அரைபடாத பருப்பும், திப்பி திப்பியான தேங்காயும் தோசையோடோ, இட்லியோடு உள்ளே போகும் போது கிடைக்கும் சுவை.. டிவைன். 

 

கள்ள நோட்டும் நல்ல நோட்டும் .....

ஜுர்கேன் க்ருகேர்..... said... நம்ம நாட்டுல தலைமை தேர்தல் அதிகாரியின் பெயரே வோட்டர் லிஸ்ட் ல இல்லையாம்.அப்படியிருக்க ரிசர்வ் பேங்க் கவர்னர் கிட்ட கள்ள நோட்டு இருந்தாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை.

 

"பணம் காய்க்கும் மரம்" !!!!!!

ஆயில்யன் said... //தலைப்பை பார்த்து நிறைய பிடுங்கலாம் என எண்ணி ஓடோடி வந்த நண்பர்கள்// வரவேற்பு பலமா இருக்கேன்னு ஆசை ஆசையா ஓடோடி வந்தேன் ஒண்ண்ணுமில்லையா !   அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

 

'பல் ஞானம்' பெற்று விட்டீர்களா.......??????

 Sinthu said... எனது நண்பி ஒருத்தி சொன்னால் தனக்கு ஞானப் பல் முளைப்பதாக, ஆனால் நான் நம்பல்ல... அடக் கடவுளே அது உண்மையா...? 

 

ஐயோ அப்பிடியா ?????

வால்பையன் said... உங்கள் வருத்தம் புரிகிறது!

உலகில் பழையன அழிதலும், புதியன புகுதலும் ஆண்டாண்டு காலமாய் நடந்து வருகிறது!இப்பொழுது தான் யாழ்பான தமிழ் என்ற ஒரு சீரிய தமிழ் மொழியின் கிளை அழிந்திருக்கிறது!இன்னும் கொஞ்சம் நாளில் கேரளாகாரனும், கர்நாடகாகாரனும் தண்ணீர் தராமல் தமிழ்நாடு என்பதையே வாழ தகுதியில்லாத நாடாக மாற்றிவிடுவான்!புலம் பெயர்ந்து நாடு நாடாக திரிவோம்!அங்க போய் தமிழ வளர்க்க போறேன்னு சொன்னா என்ன பண்ணுவான் தெரியுமுல்ல! நமது கேடு கெட்ட அரசியல் இருக்கும் வரை தமிழ்நாட்டோடு சேர்ந்து தமிழையும் மறக்க வேண்டியது தான்!,

 

தயவு செய்து இத பார்க்க வேணாம்.

 seemangani said... உங்க படமும் துக்கு போட்டுருக்க Comment 'ஸ் உம் நல்லக்கு...நண்பா....

 

 ====================================================

பார்த்தீங்கள் நண்பர்களே எனக்கு பிடித்த கருத்துரைகளை , இப்போ உங்களுக்கு பிடிச்ச மாதிரி உங்க கருத்துக்களை சொல்லிட்டு போங்க, ஒட்டு குத்துவீங்க அது எனக்கு தெரியும் ஏனென்றால் அது உங்கள் உரிமை , அதனை சரியாக பயன்படுத்துவீகள் எனக்கு நம்பிக்கை இருக்கு. ஹீ ஹீ.