ad

Sunday, May 24, 2009

'நச்'என்று ஒரு பதில் .....


சுவாமி விவேகானந்தர் அதிகமாக பிரபலமடையாத காலத்தில் ,
தென்னிந்தியாவில் ரயில வண்டியில் பிரயாணம் செய்து கொண்டிருந்த வேளையில் , அந்த பெட்டியில் இருந்த வெள்ளைக்கார போர் வீரர்கள் துறவிகளை பற்றி படு கேவலமாக பேசிக்கொண்டிருந்தார்களாம் அதற்கு விவேகானந்தர் மறுத்து எதுவுமே பேசவில்லையாம் .

பிறகு கொஞ்சம் தூர ரயில் பிரயாணத்தின் போது சேலம் ஸ்டேஷன் இல் விவேகானந்தர் அதிகாரிகளுடன் ஆங்கிலத்தில் பேசுவதைப்பார்த்து வியப்படைந்த சிப்பாய்கள் ரயில் புறப்பட்டதும் 'உங்களுக்கு நன்றாக ஆங்கிலம் தெரிகிறதே அப்படியிருந்தும் நாங்கள் கூறிய கருத்துக்கள் குறித்து ஏன் எதுவும் பேசவில்லை ' என்று கேட்டார்களாம் .
அதற்கு விவேகனந்தர் "நான் முட்டாள்களை சந்திப்பது இது முதற்தடவையல்ல" என்று பதிலளித்தாராம் .
இதைதான் சொல்றது "நச்"..........

அதற்குபிறகு சிப்பாய்களின் முகம் என்ன ஆயிருக்கும் என அடியேன் சொல்ல தேவையில்லை .

சில அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள்
"முட்டாள்களை சமாளிக்க இலகுவான வழி மௌனமாக இருப்பதுதான் " என்பதையும் இந்த இடத்தில் சொன்னால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன் .