ad

Friday, December 10, 2010

WikiLeaks ஸும், உங்கள் 'வீட்டு'லீக்ஸ் ஸும்.

இது ஒரு சீரியஸ் பதிவு .
ரகசியமாக அல்லது மறைமுகமாக இருக்கின்ற சில விஷயங்கள்  கசிந்தால்,அவற்றை அறிந்துகொள்ள ஆவலாகத்தான் இருக்கிறது. ஆனால், உரியவர்களுக்குத்தான் அது தூக்கத்தைக்கெடுக்கிறது , அது விக்கி லீக்ஸ்சாக  இருந்தாலும் சரி எங்கள் வீட்டு லீக்ஸ்சாக இருந்தாலும் சரி. ( கூரையில் இருக்கும் லீக்ஸ்(ஒழுக்கு)  யையும் சேர்த்துத்தான் சொல்கிறேன் ஹீ ஹீ. ) .
சரி அது ஒரு புறமிருக்க ,
விக்கி லீக்ஸ் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் தகவல்கள் அனைத்தும்  எல்லோரது புருவங்களையும் பல சென்டி மீட்டர்கள் வரை  உயர்த்துகின்றன என்பது மட்டும் உண்மையான விடயமாகத்தான் இருக்கிறது.
இதன் அடிப்படையில் தான் 'விக்கிலீக்ஸ்' ஹீரோவாகிய அதே வேளை  அகப்பட்ட நாடுகள் ' சீரோ(zero)'' வாகி போயுள்ளன .

விக்கி லீக்ஸ் செய்து கொண்டிருப்பது சரியா? தவறா? என்ற வாக்கெடுப்பு ஒருபக்கம் இருக்க , ஊடக சுதந்திரத்துக்கும்  கருத்து வெளியிடும் உரிமைக்கும்    மதிப்பளிக்கும் எந்தவொரு நாடும் அல்லது தனி மனிதனும் விக்கி லீக்ஸ் இன் அணுகுமுறையானது பிழை என்று வாதிடுவதற்கு தயாராக இருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

ஆனால் விக்கி லீக்ஸ் இன் இந்த நடவடிக்கைகளால் எதிர் காலத்தில் உலக சாமாதானத்து ஏதும் ஆபத்துக்கள் நேருமா என்ற கேள்வியும் இந்த இடத்தில் எழுகிறது , அந்த விடயத்தை இன்னுமொரு சந்தர்ப்பத்தில்  தனியாக ஆராயலாம்.

அதேவேளை விக்கி லீக்ஸ் இன் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பின்னணியில் இருக்கும் காரணம் தான் எண்ண என்று ஒரு முறை நாங்கள் சிந்தித்தால்,...
பல்வேறு விடைகள் எங்களுக்கு கிடைக்கலாம்.
 இன்னுமொரு முக்கியமான விடயம் விக்கி லீக்ஸ் இன் மூலமாக கசிந்த  இந்த விடயங்கள் பொய்யானவை அல்லது திருத்தி கூறப்பட்டவை என்று பெரிதாக எந்த ஒரு நாடும் எதிர்கருத்துக்களை வெளியிட்டதாக அறியவில்லை ( நான் அறிந்த வரைக்கும்) .மாறாக இவ்வாறான கருத்துக்கள் அல்லது ரகசிய ஆவணங்கள் தொடர்ந்தும் வெளியிட பட்டால் எதிர்காலத்தில்  பல்வேறு சிக்கல்கள் தோன்றும் என்றே அச்ச பட்டார்கள். இதிலிருந்து புலப்படுவது என்னவென்றால் ஆவணங்கள் அனைத்தும் உண்மையானவை என்பதை உலக நடப்புக்களை அறிந்து வைத்திருக்கின்ற அனைவரும் ஊகித்துக்கொள்ள கூடியதாக இருக்கும் .
அதேவேளை அமெரிக்காவின் ராஜாங்க தகவல்கள் கசிந்ததற்கு  முக்கிய காரணம் விக்கி லீக்ஸ் இன் நிறுவனர் ஜூலியன் அசாங்கே தான் காரணம் என்று குற்றம் சாட்டப்படுகின்ற அதேவேளை அந்த முக்கியமான ஆவணங்கள் அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் வெளியே வருவது என்பது அவ்வளவு சாத்தியமில்லாத ஒரு விடயம் என்பது உலக நாடுகளுக்கும் தெரியும். ( இதையே இப்பொழுது அவுஸ்திரேலிய  அரசாங்கமும் வலியுறுத்தி நிற்கிறது) .

ஜூலியன் அசாங்கே
 சரி , ஏன் ஜூலியன் அசாங்கே இந்த தகவல்களை பகிரங்கமாக வெளிப்படுத்தினார் ?
அமெரிக்காவுக்கும் இவருக்கும் என்ன பிரச்சனை ?
இந்த தகவல்களை இவருக்கு வழங்கியது யார் ?
இந்த நடவடிக்கைகளால் இவர் சாதிக்க நினைப்பது என்ன? 

என்ற வெளிப்படையான கேள்விகளும் எங்கள் மனதில் எழுகின்ற கேள்விகள் .

ஒருவேளை அமெரிக்க அரசாங்கத்தில் உயர் பதவியில் இருந்த ஒருவர் அல்லது பலர் அமெரிக்காவின் நடவடிக்கலைகள் பிடிக்காமல் இந்த தகவல்களை வெளியில் கசிய விட்டிருக்கலாம் அல்லது பணத்துக்காக தகவல்களை வெளியிட்டிருக்கலாம் .!!!!!!! அவர்கள் யார் என்பதை அமெரிக்கவே கண்டு பிடிக்க வேண்டும்.

இந்த ரகசிய ஆவணகளை கசிய விட்டதன் மூலம் ஜூலியன் அசாங்கே தனக்கான பிரபலத்தை தேட முற்பட்டாரா  !! , இல்லை இந்த தகவல்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று செயட்பட்டாரா??  என்பதும் விடைகாணப்பட வேண்டிய கேள்விகளே..
அது ஒரு புறமிருக்க ,
இப்பொழுது விக்கி லீக்ஸ் நிறுவனர், பெண்களை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தினார் என்ற குற்ற சாட்டின் பேரில் இப்பொழுது கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இவரின் கைது தொடர்பாகவும் சில விடயங்கள் புதினமாகவே இருக்கிறது.
2008 இல் இவர் இந்த குற்றங்களை புரிந்தார் என்று சொல்லபட்டாலும் இவர் ஏன் இதுவரைக்கும் கைது செய்யப்படாமல் இருந்தார் ?? அல்லது சர்வதேச பிடியாணை பிறப்பிக்கபட்ட ஒருவராக இருந்தாரா ? அப்படியானால் சர்வதேச ரீதியாக தேடப்படும் ஒருவர் ஏன் வலிந்து கட்டிக்கொண்டு தனது இருப்பை வெளிக்காட்டப்போகிறார் ? சத்தம் போடாமலே இருந்திருப்பாரே !!!!
ஆகவே இந்த இடத்தில் நிதானமாக சிந்தித்தால் ...இந்த ஆவணங்கள்  கசிய விட்டதன் பின்னர் இவரை கைது செய்வதற்காகவே பொய்யான குற்ற  சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளதா    என்றும் எண்ண தோன்றுகிறது. அதேவேளை ரகசியமாக இருக்கும் சில வங்கிகளின் கணக்கு விபரங்கள் வெளிப்படையாக சொல்லபட்டு அவையும் தடை செய்யப்படுவதாக பகிரங்கமாக அறிவித்தமையானது அசாங்கே யையை எப்படியாவது கைது செய்வது என்ற நோக்கத்தின் பின்னணியே என்று அவருக்கு ஆதரவானவர்கள் சொல்லலாம்.
எது எவ்வாறாக இருந்தாலும் இப்பொழுது  ஜூலியன் அசாங்கே கைது செய்யப்பட்டுள்ளார் . இதற்கு பிறகு விக்கி லீக்ஸ் இன் நடவடிக்கைகள் தொடராது என்று நினைத்த அனைவருக்கும் ஏமாற்றமே கிடைத்தது , காரணம் இப்பொழுதும் கசிவுகள் இருக்கின்றன அதேவேளை இணையத்தினூடான மோதல்களும் இப்பொழுது வலுப்பெற்றிருக்கிறது .அதாவது விக்கி லீக்ஸ் க்கு ஆதரவானவர்களால் இப்பொழுது சில முக்கியமான இணையத்தளங்கள் முடக்கப்பட்டு வருவதாகவும் தகவல் கள் வெளியாகிக்கொண்டே இருக்கிறது.
இந்த நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எவ்வாறான பாதிப்புக்களை ஏற்படுத்த போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

( பதிவிடும் வரைக்கும் நான் அறிந்த கசிந்த விடையங்களை வைத்துகொண்டு கருத்துக்களை சொல்லி இருக்கிறேன், மாற்று கருத்துக்கள் அல்லது புதிய தகவல்கள் கிடைத்தாலும் உங்கள் பின்னூட்டங்களில் சொல்லுங்கள்.

''விக்கி கசிவுகள் கசிய கசிய , எனது கருத்துக்களும் பெருக்கெடுக்கும்'
மீண்டும் சிந்திப்போம்.

Monday, November 22, 2010

ஜெயிலுக்கு போகாமல் தப்பித்தோம்......

என் வாழ்நாளில் இடம்பெற்ற  ஒரு சுவாரஸ்யமான விடயம் இன்றைய தினம் பதிவாகிறது...
2005 ம் ஆண்டு தமிழ் சிங்கள புதுவருடம் எனக்கு சிரிப்போடுதான் ஆரம்பித்தது.
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் ( தென்றல்)  அறிவிப்பாளராக இணைந்து கொண்டதன் பின்னர்  வந்த முதலாவது தமிழ் சிங்கள புதுவருடத்தை சிறப்பாக வரவேற்க சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை செய்திருந்தோம், ( அந்த வேளையில் தென்றலின் ஒலிபரப்பு 24 மணி நேர சேவையாக இருந்தது) .
இரவு 10 மணியிலிருந்து அதிகாலை  5 மணிவரைக்கும்  நிகழ்ச்சியை படைத்திருந்தோம் . புதுவருடத்திற்கு குடும்பத்தோடு இல்லையென்றாலும் தென்றல் வானொலியில் இணைந்து கொண்ட ஆரம்ப காலத்தில் தொடர்சியாக நிகழ்ச்சிகளை படைப் பதற்கு  கிடைத்த சந்தர்பங்களை சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருந்த காரணத்தால் சந்தோசம் அதிகமாகவே இருந்திருந்தது.

அன்று நிகழ்சிகளோடு இணைந்திருந்த அறிவிப்பாளர்கள் அனுசுஜா ஆனந்தரூபன் ( இப்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார்) ,வைதேகி சர்வானந்தா ( வெற்றி வானொலியில் கடமையாற்றி இப்போது வைதேகி ஸ்ரீபவன் கனடாவில் கால் பதித்திருக்கிறார், இதுக்கு பிறகு கனடா சந்தோசமா இருக்குமா என்னு நீங்க யோசிக்கப்படாது ஹீ ஹீ ), அடுத்தவர் ஷைலானி  மயில்வாகனம் ( தென்றல்) .
அனைவரும் ரொம்ப சிரமபட்டு நிறை விடயங்களை தேடி எடுத்து அன்றைய நாளுக்கு பொருத்தமாக நிகழ்ச்சியை படைத்திருந்தோம்.
திருப்தியோடு காலையில் கலையகத்தை பிரியா ( பிரியதர்ஷினி அம்பிகைபாலன் - இப்போது வசந்தம் தொலைகாட்சியில் கடமையாற்றுகிறார்) மற்றும் கவிதா ( கவிதயாழினி அமலதாஸ்) இருவரிடமும் ஒப்படைத்து விட்டு வெளியேறினோம் .காலை 7 மணி இருக்கும் வீட்டுக்கு செல்வதற்கு  தயாராக இருந்த போது நான் வேற ஒரு வேலை காரணமாக மீண்டும் கலையகத்து செல்ல வேண்டி  இருந்தது...அப்போதுதான் நமக்கு ஆப்பு ஆயத்த மாகியிருக்கிறது...
பொதுவாக எங்களுக்காக அதிகாலை வேளையில் கடமைக்கு வரும்போதும் இரவு நேரங்களில் வீட்டுக்கு செல்லும்போதும்  மட்டுமே கூட்டுத்தபனத்தால் போக்குவரத்து வசதிகள் வழங்கப்படும், மற்ற நேரங்களில் அந்த வசதி இல்லை.   அது மட்டுமல்லாமல் புது வருட தினத்தில் கொழும்பில் ஒரு போக்குவரத்து வாகனத்தை  கண்டு கொள்வதே குதிரைக்கொம்பு.
பாதைக்கு வந்து நீண்ட நேர காத்திருப்புக்கு மத்தியில் ஒரு முச்சக்கர வண்டி வந்து சேர்ந்தது அந்த வண்டியில் நான் ஏறவில்லை என்றால் மற்ற மூன்று பேரும் வீடு போய் சேரலாம்... ( அந்த அளவுக்குத்தான் இட வசதி இருந்தது) அகவே அந்த இடத்தி ஹீரோவாக மாறி அவர்களை வழி அனுப்பி வைத்தேன்....  இன்னுமொரு வாகனம் வாராதா வாராதா என்ற
ஆவலோடு  நீண்ட நேரமாக காத்திருந்தேன் ,
ஹ்ம்ம் பயனில்லை.. அந்த நேரம் நண்பர் மரூஸ் தனது கடமையை முடித்து விட்டு வந்து என்னுடன் சேர்ந்தார் ,, இப்போது கொஞ்சம் நிம்மதி தனியாக இல்லாமல் பேச்சு துணைக்கு இன்னுமொரு நண்பர். இப்பொழுது இருவரும் சேர்ந்து காத்திருக்கிறோம்..சொன்னால் நம்ப மாட்டீர்கள் அந்த நேரத்தில் அந்த வீதியில்
ஒரு வாகனத்தை பார்பதற்கு  எவ்வளவு ஆசையா இருந்தது தெரியுமா?
இரவு முழுவது கண் விழித்ததன் காரணமாக தூக்கம் வேற கண்ணை கட்டியது ,

நாங்கள மருதானைக்கு  செல்ல வேண்டும்  ஆகவே அலுவலகத்துக்கு முன்னால் நின்று கொண்டு (பௌத்தாலோக மாவத்தை) தும்முல்ல சந்தி வழியாக ஒரு வாகனம் வாராதா என்ற எதிர்பார்போடு மூன்று மணித்தியாலங்கள்  அந்த இடத்திலேயே கழிந்தது..

நம்பிக்கை இழக்காமல் இருவரும் காத்திருந்தோம்.(அந்த நேரத்துக்கு நடந்து சென்றிருந்தாலும் மருதனைக்கு சென்றடைந்திருக்கலாம் எண்ண செய்றது தூக்க கலக்கம் வேறு முடியல ) .
எங்கள் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை ,,,, நெஞ்சில பால் வார்த்தது போல் இருந்தது... ஆமாம் தொலைவில் ஒரு பஸ் வண்டி வந்து கொண்டிருந்தது, எப்படியும் அந்த பஸ்ஸில் ஏறிடலாம் என்ற நம்பிக்கையில் காத்துகொண்டிருந்து பஸ் ஓரளவுக்கு எங்களை நெருங்கும் போது நண்பர் மரூஸ் அந்த பஸ் வண்டியை நெருங்கி நிறுத்துவதற்காக கை அசைத்தார் .......
பஸ் வந்தது ... எங்களை நெருங்கியதும் எங்களை தூக்கி வாரி போட்டது !!! ஆமாங்க வந்தது போது போக்குவரத்து பஸ் இல்லங்க.அது ""சிறைக்கைதிகளை ஏற்றி செல்லுகின்ற பஸ் வண்டி""..
அந்த பஸ் ஓட்டுனர் பஸ்ஸை  கொஞ்சம் மெதுவாக செலுத்தி எங்களை பார்த்து ஒரு புன்முறுவல் செய்தார்... அந்த புண் முறுவல்.. '' தம்பிகளா என்னடா உள்ள போக ஆசையா இருக்கா என்னு கேட்டது போலவே இருந்தது" ..
  அம்மாடியோவ் ...வந்த தூக்கம் எங்க போனது என்றே தெரியல ..பிறகும் தொடர்ந்தும் காந்திருந்தோம் பலனில்லை, எண்ண செய்றது நம்ம நடை ராஜ சர்வீஸ் மூலமாக சிரித்துக்கொண்டே வீடு போய் சேர்ந்தோம்.

இப்ப நினைச்சாலும் சிரிப்பு பிச்சுகுதுங்க................( இந்த விடயம் இதுவரைக்கும் எங்கள் அறிவிப்பாளர்கள் யாருக்கும் தெரியாது) .  

Wednesday, November 3, 2010

உங்களுக்கொரு வேலை வச்சிருக்கன்......

பதிவிடாமல் பைத்தியம் பிடிக்கிறது, அதே நேரம் எதை பதிவிடுவதென்று  யோசித்தால் தலை வெடிக்கிறது. எப்படித்தான் இந்த பதிவர்கள் எல்லோரும் ஒவ்வொரு  நாளும் பதிவிடுரான்களோ  தெரியல!!
எனக்கொரு வேலை தாறீங்களா அதாவது .,, எந்த விஷயத்தை பற்றி பதிவிடலாம் என்று சொல்லுங்களன் ப்ளீஸ்.

இதுதான் இன்றைய என் பதிவு...
இதன் மூலமாக ''மிக குறைந்த வசனங்களை  கொண்ட பதிவு'' என்ற பெருமையும் எனக்கு கிடைக்கலாம். என்று எதிர்பார்கிறேன்.
அத்தோட எதை பற்றி பதிவிடலாம் என்று வருபவர்கள் எல்லோரும் சொல்லிட்டுத்தான் போகணும் சொல்லி போட்டன்.

இந்த பதிவுக்கு வாக்களித்து விட்டு போங்க என்று கேட்டால்... பக்கத்துல  ஏதாவது கிடந்தால் அதை தூக்கி என் மூஞ்சி மேலையே வீசுவீங்க என்றும் எனக்கு தெரியும் , ஆகவே நானாக கேட்க வில்லை , (உங்க பெரிய மனசும் எனக்கு தெரியும்.  நீங்க ஒட்டு குத்திட்டுதான் அடுத்த வேலையைப் பார்பீங்க.... )

Wednesday, October 6, 2010

தமிழர்களே.......!!! தமிழுக்கு ஏதாச்சும் நடக்க விடலாமா?

தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத் தமிழ் 
எங்கள் உயிருக்கு நேர்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தமிழர்களின் தாய்மொழி.
தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும் 
தென்னிந்தியாவில் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும், சிங்கப்பூரிலும் அதிக அளவில் பேசப்படும் இம்மொழி, துபாய், மலேசியா, தென்னாபிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயுனியன், டிரினிடாட் போன்ற பல நாடுகளிலும் சிறிய அளவில் பேசப்படுகிறது. ஒரு மொழியை, தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில், தமிழ், பதினெட்டாவது  இடம் தமிழுக்குத்தான். 


இதெல்லாம் எல்லோரும் அறிந்த விடயம்தான் ஆனால் தமிழ் மொழிக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்ற கவலையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது, காரணம் உலகெங்கிலும் அதிகமான தமிழர்கள் இருந்தாலும் அநேகமானவர்கள் இப்போது தமிழிலே உரையாடுவதைக் குறைத்துக்கொண்டு  வருகிறார்கள் இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதில் ஒரு சிலவற்றை தவிர்த்துக்கொள்ளலாம். இருந்தும் நாகரிக மோகம் காரணமாக சில வெளிநாடுகளில் உள்ளவர்கள் தமிழை பேச வெட்கப்படுகிறார்கள். 
இந்த போக்கானது தமிழுக்கும் தமிழர்களுக்கும் அவ்வளவு ஆரோக்கியமானதல்ல . இது ஒரு புறமிருக்க எதிர்காலத்தில் தமிழ் மொழி சந்திக்கவிருக்கின்ற இன்னுமொரு முக்கிய பிரச்சனை பற்றியும் இந்த இடத்தில் நாங்கள் பேசித்தான் ஆக வேண்டும் , அதாவது தற்போதைய ஒரு சில  எழுத்தாளர்கள் கையில் எடுத்திருக்கும் ''வட்டாரத்தமிழ்'' வழக்கு..
அதாவது ஒரு மொழியின் வளர்ச்சியானது அந்த மொழியை நேசிக்கின்ற ,சுவாசிக்கின்ற படைப்பாளிகள் அல்லது எழுத்தாளர்களது கையிலே அதிகம் தங்கி  இருக்கிறது. அப்படிப்பட்ட பொறுப்பு வாய்ந்த இடத்தில் இருக்கும் எழுத்தாளர்கள் அண்மைக்காலமாக கையாண்டு வருகின்ற இந்த ''வட்டார வழக்கு'' அவ்வளவு காத்திரமானது என்று சொல்வதற்கில்லை .
அதாவது தமிழை வட்டார வழக்கின் அடிப்படையில் பிரிக்ககூடாது ,அதேவேளை இந்த எழுத்தாளர்கள் தங்களது படைப்புக்களை வட்டார சொற்களை  வைத்துக்கொண்டு தங்களது எண்ணங்களையும் நூல்களையும் வெளியிடக்கூடாது. 
இங்கே மண்வாசனையுடன் வெளிவருகின்ற நூல்களையும் படைப்புக்களையும் பற்றி குறைகூறவில்லை என்பதை கவனித்திருப்பீர்கள் என நம்புகின்றேன். 
  
இந்த போக்கு தொடர்ந்து சென்றால் பல்வேறு சிறப்புக்களை கொண்ட நமது தமிழ் மொழியானது பல் வேறு கூறுகளாக பிரிந்து செல்லக்கூடிய வாய்ப்பு இருக்கிறது அதன் பின்னர் எந்த வட்டாரத்தின் தமிழ் சிறந்த தமிழ் என்ற தேவையில்லாத விவாதங்களும் சண்டைகளும் தலைதூக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது. காலப்போக்கில் தமிழ் மொழி பிழையான மொழி வழக்கை பின்பற்றக்கூடிய அபாயமும் இருக்கிறது.
எனவே தமிழ் சிறக்க பாடுபடும் அன்பான படைப்பாளர் பெருமக்களே உங்கள் படைப்புக்களில் இந்த வட்டார தமிழ் வழக்கை பயன்படுத்துவது தொடர்பாக கொஞ்சம் சிந்தியுங்கள் , தமிழை பிழையில்லாமல் எதிகால சந்ததியினருக்கு விட்டு செல்வோம். 


எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனால் அதைப் பிறர்மேல் விட மாட்டேன்.  
 
''தேமதுரத் தமிழோசை 
உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.'' 

 

Monday, October 4, 2010

பதிவர்கள் அனைவரும் கட்டாயம் பாருங்கள்.

எனக்கு பிடித்த  சில வரவேற்பு பதாதைகள்... 
பதிவர்கள் தங்களின் வலைப்பூக்களுக்கு சூட்டி யுருக்கின்ற சில நாம காரணக்ளும் வரவேற்பு வாசகங்களும்  இங்கே  பதிவாகிறது .
 கண்டிப்பின்றி கனிவோடு பாடம் நடத்தும் வாத்தியாரின் வகுப்புக்கு நீங்களும் ஒரு முறை வந்து பாருங்கள்.... 

---------------------------------------------------------------------------------------------------------------



------------------------------------------------------------------------------------------------------------------------------
 
ஹலோ பிரதர், வந்தமா, படிச்சமா ''கமென்ட் அடிச்சமான்னு இருக்கனும், அதவிட்டுப்புட்டு ஏதாவது எடக்கு பண்ணா, ங்கொக்காமக்கா அப்புறம் கெஜட்ல இருந்து பேர எடுத்துடுவேன் ஆமா! நான் மட்டும் அப்பப்போ ஏதாவது ஏடாகூடம் பண்ணுவேன் முடிஞ்சா பாத்து எஞ்சாய் பண்ணுங்க!
தொழிலதிபர்கள், கூடை வெச்சிருக்கவன், பஞ்சுமுட்டாய் விக்கிறவன், பாலிடிக்ஸ் பண்றவன், கடஞ்சொல்லி பீடி குடிச்சவன் எல்லாம் அப்படியே ஒன் ஸ்டெப் பேக் மேன்!
ஓக்கே...ஆல் யங் கேர்ள்ஸ், ரெடியா? வாங்க பூ மிதிக்கப் போவோம், ஸ்டார்ட் மியூசிக்!''

இப்பிடிதாங்க  மியூசிக் ஸ்டார்ட் பண்ணுது ...  
-=======================================================================
''சாதி, மதம் பார்க்காமல், வரதட்சணை கொடுக்க மாட்டேன்/வாங்க மாட்டேன் என்று திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எனது தளத்தில் இலவச விளம்பரம் தருகிறேன்!, உங்கள் புரோபைலை எனது மெயிலுக்கு அனுப்பலாம் arunero@gmail.கம எவ்ளோ காசு கொடுத்தாலும் சாதிவிளம்பரம் முடியாது!''

எவ்வளவு பரந்த மனசுங்க இவருக்கு,, அது சரி வால் பையன் வால் பையன் என்னு சொல்றாங்களே இவருக்கு வால் இருக்கிறத நான் பாக்கவே இல்லையே நீங்க பார்த்தீங்களா? 
=======================================

இப்படி உங்களை கவர்ந்த விடயங்களையும் சொல்லிட்டு போங்க . இப்பதான் ஆரம்பிச்சிருக்கு ,, இன்னும் தொடரும். 

பதிவர்கள் அனைவரும் கட்டாயம் பாருங்கள். 

Saturday, October 2, 2010

Excuseme, எனக்கொரு டவுட் !! எத வச்சுங்க நம்புறது ???


எத வச்சுங்க நம்புறது ???
எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம், அதாவது திரைப்படங்கள் தயாரிக்கின்ற தாயாரிப்பாளர்களும் சரி ,தயாரிப்பு நிறுவனங்களும் சரி  தங்கள் திரைப்படங்களை விளம்பரம் செய்கின்ற போது ,,

'' அதி கூடிய பொருட்செலவில் உருவாகும் பிரமாண்டமான தமிழ் திரை,
200   கோடி இந்திய ரூபா செலவில் உருவான திரைப்படம்.'' உலக திரைப்பட வரலாற்றில் மிக கூடிய செலவில் உருவாகும் பிரமாண்டம்''.
என்றெல்லாம்  விளம்பரம் செய்வார்கள் .. இவ்வாறான விளம்பரங்களை கேட்கும் போது நிச்சயமாக அந்த திரைப்படத்தில் அப்படி என்னதான் செய்திருக்கிறார்கள் என்று திரைப்படத்தை பார்க்க செல்வோம், ஆனால் அந்த திரைப்படத்தில் அவ்வளவு பெய்ய தொகை செலவு செய்தமாதிரி எதுவுமே தெரியாது...( எல்லா திரைப்படங்களையும் சொல்ல வில்லை)
ஆகவே தயாரிப்பளர்களும் தயாரிப்பு நிறுவனங்களும் சொல்வது போல , உண்மையாக ஒரு திரைப்படத்துக்கு எவ்வளவு தொகைப்பணம் செலவு செய்யப்பட்டுள்ளது என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது, அதற்கு ஏதாவது கணக்கு அறிக்கைகள் காட்டப்படுமா/,அல்லது இதற்கு ஏதாவது சங்களில் பதிவுகள் இருக்கிறதா/? அப்படி எதுவுமே இல்லை என்றால் இவர்கள் சொல்வதை எத வச்சுங்க நம்புறது?

 இந்த சந்தேகமானது சிலவேளைகளில்  எனக்கு சினிமா துறை சம்பந்தமாக போதிய அறிவு  இல்லை என்பதை 
வெளிக்காட்டலாம், சிலவேளை சின்ன புள்ள தனமான வினாவாகவும்  இருக்கலாம்.. எதுவாக இருந்தாலும் , சந்தேகம் என்று வரும் போது அதனை கேட்டு, அறிந்து, தெளிவு பெற்றுக்கொள்ளுவது எனது வழக்கம் , அந்த வகையில் தான் இந்த கேள்வியும் எழுந்தது.
ஏனெனில் தங்களது திரைப்படத்தை பெரிதாக விளம்பர படுத்தி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுக்கொள்வதற்காக தயாரிப்பு நிறுவனங்கள் இந்த உத்தியை கையாளாலாம் இல்லையோ/?
 அதுதான் ஒரே போடாக போட்டு உடைசுட்டன்.

தயவு செய்து தெரிந்தவர்கள் சொல்லிட்டு போங்க.

Thursday, September 30, 2010

அவமானம் திருவள்ளுவருக்குத்தான், உனக்கல்ல.

நீ
நினைப்பதெல்லாம்
நடக்கவில்லையா?
அதற்காக-
நினைப்பதை
நிறுத்தி விடாதே.

நீ
கேட்பதெல்லாம்
கிடைக்கவில்லையா?
அதற்காக கேட்பதையே
நிறுத்தி விடாதே .

நீ
விதைப்பதெல்லாம் முழைக்கவில்லையா ?
அதற்காக -
விதைப்பதையே நிறுத்தி விடாதே .

உன்-
உழைப்பு உன்னை
உயர்த்தவில்லையா ?
அதற்காக
உழைப்பதை நிறுத்தி விடாதே .

நம்பிக்கைதான்-
வாழ்க்கையை 
நகர்த்திக்கொண்டு போகிறது.

கனி விழாவிடினும்
கல்லெறிவதை நிறுத்தாதே.

''முயற்சி 
மெய் வருத்தக் கூலி தரும்''  

தராவிட்டால்
அவமானம் -
திருவள்ளுவருக்குத்தான்
உனக்கல்ல.  

நன்றி:- 'நிஜ கோவிந்தம்'

Wednesday, September 29, 2010

ஈழமா அல்லது இலங்கையா?

காலையில் ஒரு இணையதளத்தில் செய்தி ஒன்றை வாசித்தேன் ., 
இதுதான் செய்தியின் தலைப்பு .
'' தா'' திரைப்படம் மூலம் அறிமுகமாகும் ஈழத்து இசையமைப்பாளர்.'
கிளிக் பண்ணி வாசித்து பாருங்கள் .


இவர்தான் இசையமைப்பாளர் ஸ்ரீ விஜய், 'தா ' திரைப்படத்தின் 
மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி ., அதே நேரம் இவரின் திறமைக்கு தொடர்ந்தும் களம் அமைத்துக்க் கொடுக்காமல் போயிடுவாங்களோ என்று பயமா இருக்கு. 


காரணம் அண்மையிலே 'தா'  திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இரண்டு பெரிய மனுசங்க ஒண்ணுமில்லாத விஷயத்தை பெரிசு படுத்தி விழாவையே குழப்பியிருக்கிறார்கள். அதாவது , 
 விழாவில் முதலில் பேச வந்த ஆர்.கே.செல்வமணி ஸ்ரீ லங்காவிலிருந்து இங்கு வந்திருக்கும் ஸ்ரீவிஜயின் குரல் உலகமெங்மும் உள்ளவர்களை ஒருங்கினைக்கும் ஒரு குரலாக இருக்கும் என்பது மட்டும் சத்தியம்” என்றார்.


பின்னர் பேசிய  அவரைத் தொடர்ந்து பேசிய பெப்சி தலைவர் வி.சி.குநாதன், “ஆர்.கே.செல்வமணி சொன்னதில் ஒரு சிறு பிழை. ஸ்ரீவிஜய் ஸ்ரீ லங்காவிலிருந்து வரவில்லை. ஈழத்திலிருந்து வந்திருக்கிறார். 


இந்த வாக்குவாதம் தேவையா /? இல்லை தேவையா என்று கேட்கிறேன் .
இவர்கள் இருவருக்கும் அடிப்படை பிரச்சனை என்ன என்று தெரியவில்லை என்று நினைக்கிறேன் என்று இந்த செய்தியை பார்த்த பெரியவர் ஒருவர் பேசியது எனது காதுகளிலும் விழுந்தது. 
அதாவது இந்த இலங்கை, ஈழம் என்பது எல்லாமே இந்த நாட்டின் பெயர்கள் தான் , ஆனால் பிரச்சனை நடந்தது 'தனி தமிழீழத்துக்கு '' தான். ,என்று அந்த மனுஷன் புலம்பிக்கொண்டே போனார். இது தெரியாமல் ஏதோ தங்கள் அக்கறையுள்ளவர்கள் போல் காட்டி நடிக்க இப்போது என்ன அவசியம் வந்தது ? 


அந்த இரண்டு பெயர்கள் மட்டுமல்ல இன்னும் எத்தனையோ பெயர்கள் இலங்கைக்கு இருக்குறது உதாரணமாக ,  இலங்கை, இலங்காபுரி, லங்கா, நாகதீபம், தர்மதீபம், லங்காதுவீபம் (வழங்கிய வடமொழியில்), சின்மோன்டு, சேலான், தப்ரபேன் (கிரேக்கர்களால்), செரெண்டிப் (அராபியர்களால்) உட்பட மற்றும் பல பெயர்களால் அழைக்கப்பட்ட இத்தீவு, பின்னர் குடியேற்றவாத காலம் தொடக்கம் 1972 ஆம் ஆண்டில் இலங்கை ஒரு குடியரசாக அறிவிக்கப்படும் வரை சிலோன் என்று அழைக்கப்பட்டது. (தற்காலத்திலும் சிலசமயங்களில் சிலோன் என்பது பயன்படுத்த படுகிறது).
என்பவற்றைச் சொல்லலாம்.


ஆகவே வெறும் வாய் வீச்சு வல்லவர்களே உண்மையான பிரச்னையை புரிந்து கொண்டு பேசுங்கையா....பேசி பேசியே காலத்தை போக்காமல் பொழப்ப போய் பாருங்க என்று அந்த பெரியவர் சொல்ல சொன்னார். 


ஒரு திறமை படைத்தவர் எந்த நாட்டில் இருந்து வந்தால் என்ன? உங்களுக்கு அவரின் திறமை மீது நம்பிக்கை இருந்தால் சந்தர்ப்பம் வழங்கலாம் இல்லாவிட்டால் உங்க பாட்டுல இருந்துட்டு போங்க... 
 நீங்கள் இப்போது ஆரம்பித்திருக்கின்ற இந்த பிரச்சனையானது இந்த நேரத்தில் தேவை இல்லாத ஒன்று என்றே அநேகமானவர்கள் நம்புவார்கள். 
  உங்கள் ஒன்றுக்கும் உதவாத வாய்த்தர்கத்தினால் அந்த கலைஞனின் திறமைகள் மழுங்கடிக்கப்பட கூடாது. 


எதுவாக இருந்தாலும் புரிஞ்சுகிட்டு போராடுங்கப்பா.. போராடுங்க..!
  நன்றி :-tamilnewscinema.com

Monday, September 27, 2010

பார்க்காதீங்க பார்க்காதீங்க........... ஐயோ சொன்னால் கேட்கமாட்டீங்களே ?


நல்லா கொழுத்து மச்சி , இப்பிடி யாராவது கொழுத்தி விட்டு ரொம்ப நாளாச்சுடா...!
நீ என் 'நண்பேண்டா..'.

இவ்வளவு உயராமா வச்சா போல நாங்க எண்ண பயந்திடுவோமா? சிங்கமுல்ல எந்த லெவலுக்கும்  உயர அடிப்போம்.


டேய் எண்டா இந்த பெல்ட்ட கொஞ்சம் சின்னதா செஞ்சா குறஞ்சாடா போயிடுவீங்க... பய புள்ளையளுக்கு  இன்னும் புத்தி வரமாட்டேங்குது... இப்ப பாரு எவ்வளவு கஷ்டம்.

டேய் மட்டையாகிட்டேன் ஏன்னு நினைகாதீங்கடா , இப்ப ரெஸ்ட் எடுக்கிறன், எந்திருச்சன் என்னு வச்சுக்கோ, என் பேச்ச நானே கேட்கமாட்டான்.
நிம்மதியாக எங்கயாவது தம் அடிக்க விடுரானுகளா? இங்கதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு...
மச்சி நேரம் என்குறது ரொம்ப முக்கியம் , அதுதான் இப்பிடியெல்லாம்! நீங்க யோசிக்கப்படாது  தலைக்கனதுல ஆடுறான் என்னு. சும்மா நாட்டு நடப்புகளையும் அறிஞ்சுக்கணும் பாருங்க.

இரவுல  யாரு நிம்மதியா தூங்க விடுறா...  அதுதான் இங்க கொஞ்ச நேரம் தூங்கலாம் என்னு... ...
.
ஏன்தான் இதுக்கு இப்பிடி பயப்படுறானுகள் என்னே தெரியல... அப்பிடி என்னதான் உள்ள இருக்கு , பார்த்துடுவோம்..
கொஞ்சம் ஓவர் மச்சி............. நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்.
முடிஞ்சா வாங்கடா அடிச்சு பாப்போம்.
இப்பவே ஆரம்பிச்சுடணும் மச்சி... அதுதான் நாட்டுக்கு நல்லது.அப்போதான் சிறந்த   'குடி'மகன் எண்ட பெயரும்  கிடைக்கும்

அட பாவிகளா !!! முன்னுக்கு சரக்கையும் வச்சுட்டு , வாய்க்கு பூட்டும் போட்டு தீங்கலேடா நீங்க நல்லா  இருப்பீங்களா. நாசமா போக...........

Friday, September 24, 2010

இனியும் இது தொடராமல் பார்த்துக்கொள்வோம்............

நீண்ட நாள் ஆதங்கமொன்று  இன்றைய தினம் பதிவாகிறது.
ஊடகத்துறையில் இருப்பவன் என்ற வகையில் இது பற்றி அடிக்கடி சிந்தித்து கவலைப்பட்டிருக்கிறேன், சில சமயங்களில் தாங்க முடியாத கவலையும் வந்திருக்கிறது.
சரி விடயத்துக்கு வருகிறேன்,
வானொலி, தொலைக்காட்சி போன்ற  இலத்திரனியல் ஊடகங்களில் இப்போது  இருக்கின்ற சில அறிவிப்பாளர்களது 'உச்சரிப்பு' காதுகளில் நச்சரிப்பாக இருக்கிறது காரணம் அந்த அளவுக்கு இப்பொழுது அதிகமான உச்சரிப்புப் பிழைகள் எங்கள் காதுகளை பதம் பார்கின்றன இதற்கு என்ன காரணம் என்று யோசிப்பதற்கே கஷ்டமாக இருக்கிறது,

ஊடகங்களில் இந்த உச்சரிப்பு பிழைகள் வருவதற்கும் அது தொடர்ச்சியாக அனுமதிக்கப்படுவதற்கும் என்ன காரணங்கள்?
  • சிறந்த உச்சரிப்பு திறமைகொண்ட அறிவிப்பாளர்களை தேர்ந்தெடுக்க உயர் அதிகாரிகள் தவறி விடுகிறார்களா? 
  • அல்லது அது பிழையான உச்சரிப்புக்கள் என்று அவர்களால் கண்டு கொள்ள முடிவதில்லையா? 
  • அல்லது அவர்களுக்கு சரியான பயிற்சிகள் கொடுக்க திறமை வாய்ந்தவர்கள் கிடைக்க வில்லையா?
இந்த கேள்விகள் என் மனதுள்ளே அடிக்கடி எழுவதுண்டு.
அதேவேளை இந்த உச்சரிப்பு பிழைகளை இப்பொழுது இருக்கின்ற இளம் ஒலி ஒளி பரப்பாளர்கள் நிச்சயம் கவனிக்க வேண்டும், ஏனென்றால் ஊடகங்கள், மக்கள் மத்தியில் பாரிய தாக்கத்தை செலுத்த வல்லன குறிப்பாக கல்வி கற்கும் மாணவர்கள் சில வேளைகளில் அறிவிப்பாளர்களின் உச்சரிப்புகளை கேட்டு,உச்சரிப்புகளை கற்றுக்கொண்ட காலமும் இருந்தது , குறிப்பாக இப்பொழுது இருக்கின்ற பிரபலமான தென்னிந்திய கலைஞர்களில்  அநேகமானவர்கள் தாங்கள்'இலங்கை வானொலியை' கேட்டுத்தான் தமிழ் கற்றோம் என்று பல மேடைகளில் சொல்ல கேட்டிருக்கிறேன்.
எனவே அந்த பொன்னான காலம் மீண்டும் வராது போய்விடும்  போலவே தோன்றுகிறது, காரணம் நாளுக்கு நாள் இந்த உச்சரிப்புப்  பிழையானது அதிகரித்துக்கொண்டே செல்கிறது,. இதில் இன்னுமொரு ஆச்சரியம் என்னவென்றால் புதியவர்கள் மட்டுமல்லாது சில அனுபவம் வாய்ந்த ஒலி ஒளிபரப்பாளர்களும் இதே தவறை விடுவதுதான் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாக இருக்கிறது.
ஒரு சிறந்த நேயரினாலேயே சிறந்த அறிவிப்பாளனாக இருக்க முடியும் எனவே நண்பர்களே முதலில் காதுக்கு வேலை கொடுங்கள் பிறகு வாய்க்கு வேலை வையுங்கள்.
-------------------------------------------------------------..............................

அத்தோடு சிலரது உச்சரிப்புக்கள் தொடர்ச்சியாக  பிழையாக வருவதற்கு சில  காரணங்கள்  இருக்கின்றன .
அதனையும் நீங்கள் கருத்தில் கொள்ளலாம்.

இங்கே சில மருத்துவ உண்மைகள்
 நண்பர்களே ! நாம் பேசும் செயலானது குரல்வளை உட்பட வாயின் பாகங்கள் நாக்கு ,பல் , மூக்கு ஆகியவற்றின் ஒருமித்த செயலாகும்.
குரலில் ஏதேனும் நோய் ஏற்படுவது போல , வாயின் இந்த உறுப்புகளிலும் மூக்கிலும் பல நோய்கள் ஏற்படும் இத்தகைய நோய்கள் ஏற்பட்டால் குரல் பாதிக்கப்படுவது போலவே உச்சரிப்பும் பாதிக்கப்படும் .
டான்சில்ஸ் , சினுடிஸ்,பல்,ஈறு நோய்கள் ,வாய்புண் முதலான வாய் நோய்கள் மற்றும் ப்ராங்டிஸ் முதலிய வாய் மற்றும் மூக்கு சம்பந்த பட்ட நோய்கள் சிலவாகும் .
கிலேப்ட் பிளேட் எனப்படும் மேலண்ண வெடிப்பு சிலருக்கு மூக்குவரை தொடர்ந்திருக்கும் . அதாவது இவர்களது மேலுதடு இரு பிரிவுகளாக இருக்கும் , இப்படி உள்ளவர்கள் பேசுவதற்கு அதிகம் சிரம படுவார்கள்.
ஆனால் மேலே கடைசியாக கூறிய நோய் உட்பட எல்லா  நோய்களுக்கும் சிகிச்சை முறைகள் இல்லாமலில்லை , ஆகவே நம் உச்சரிப்போ குரலோ பாதிக்கப்பட்டிருந்தால் அது நம் பொறுப்பாகவே இருக்க முடியும்.

நாம் பேசுகின்ற போது உச்சரிப்பு சரியாக இல்லாவிட்டால் முதலில் பேச்சில் தெளிவற்று கவர்ச்சி குறைந்து விடும் ,அதேநேரம் நாம் பேசுவது எதிராளிக்கு சரியாக புரியாது இதனால் மீண்டும் சொல்லவேண்டிய நிலை ஏற்படும் இதனால் நேர விரையம் தவிர்க்க முடியாததாகிவிடும். அத்தோடு சேர்ந்து எரிச்சல் தனது திறமையையும் காட்டிவிடும் கடைசியாக எமது காரியம் தோல்வியிலையே போய் முடிந்து விடும்.

பழகினால் கைவராதது எதுவும் இல்லை . உங்கள் உச்சரிப்பு சரியாக இல்லாவிட்டால், அதைப் பயிற்சியின் மூலமோ சிகிச்சையின் மூலமோ சீர் செய்து விட முடியும் . உங்களுக்குச் சில உச்சரிப்புகள் தெரியாவிட்டாலோ, குழப்பமாக இருந்தாலோ , மற்றவர் பேசுவதை கூர்ந்து கவனியுங்கள் . சந்தேகங்கள் விலகும் . பிறகு அதன் படி பயிற்சி எடுங்கள்.
பேச்சு ஒரு மனிதனை , அவன் வாழ்வினை, கல்வியினை, பண்பாட்டினை எதிரொலிக்கும் ஒரு கண்ணாடி . எனவே அந்த பேச்சில் கவனமாக இருங்கள்.
 "வாழ வைப்பதும் வாரி விடுவதும் வாய்தான் ." 
எனது ஆதங்கம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் , உங்களது கருத்துக்களையும் சொல்ல மறக்காதீர்கள்.   
 

Wednesday, September 22, 2010

இஸ்லாம் என்ன சொல்கிறது..?

இஸ்லாம் என்ன சொல்கிறது ?
விளம்பரங்கள் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது , இந்த கேள்வி கடந்த ரமழான் மாதத்தில் எனக்கு ஏற்பட்ட மிகவும் சிக்கலான கேள்வி, இது சிக்கலாகவும் தெளிவில்லாமலும் இருந்தமைக்கு இஸ்லாம் மதத்தை பற்றி நான் முழுமையாக அறிந்திராததும் ஒரு காரணமாக இருக்கலாம்.
சரி ஏன் இந்த சந்தேகம் வந்தது என்றால் கடந்த ரமழான் மாதத்தில் எமது வானொலி ஏராளமான சிறப்பு நிகழ்சிகளை ஒலிபரப்பியிருந்தது...
அத்தனையும் நேயர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றிருந்தது .
இதில் சில நிகழ்சிகள் விளம்பர அனுசரணையோடு ஒலித்திருந்தது .

இந்த அனுசரணையோடு ஒலித்த சில நிகழ்சிகள் சம்பந்தமாக அந்த நேரத்தில் சில இடங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது , அதாவது நிகழ்ச்சிகள் ஒலிப்பதற்கு முன்பும் பின்பும் அந்த நிகழ்ச்சிக்கு அனுசரணை  வழங்கிய நிறுவனங்களின் விளம்பரங்கள்  ஒலிபரப்பாகும், இது வர்த்தக வானொலிகள் பற்றி அறிந்த எல்லோருக்கும் தெரிந்த உண்மை.


அனால் ஒரு சிலரது வாதம் என்னவென்றால் அவ்வாறு இஸ்லாமிய நிகழ்ச்சிகள் ஒலிக்க விடும்போது   விளம்பரங்கள் ஒலிக்க கூடாதாம்!!
அத்தோடு இந்த விடயம் குறித்து விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் எமது வானொலியின் பெயரை குறிப்பிட்டு ஒலிபெருக்கியின் ஊடாக பள்ளிவாசல்களில் கூட தங்களது காட்டமான கருத்துக்களை வெளியிட்டிருந்தார்கள் . கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் இருக்கிறது அதனால் அது பிழை இல்லை ஆனால் இந்த விளம்பரங்கள் விடயத்தில் இஸ்லாம் என்ன சொல்கிறது என்று அந்த நபர்கள்  அறிந்திருக்கிறார்களா என்பதுதான் எங்கள் கேள்வி .
ஏனெனில் பின்னர் நங்கள ஏராளமான  , இஸ்லாமிய மார்க்கம் பற்றி நன்கு அறிந்தவர்கள் பலரிடம் கேட்டறிந்து கொண்டோம் , அவர்கள் அனைவருமே இந்த வானொலி விளம்பரங்கள பற்றி நடுநிலமையான கருத்துக்களையே சொன்னார்கள் .

எனவே இந்த விடயத்தில் அந்த   குற்ற சாட்டுகளை  கூறியவர்கள்  இஸ்லாம்  மதம் என்ன சொல்கிறது என்று முழுமையாக அறிந்திருக்கவில்லை என்றே  எண்ண தோன்றுகிறது .

எனவே நண்பர்களே இந்த விடயத்தில் உங்கள் ஆக்க பூர்வமான கருத்துகளை எதிர்பார்கிறேன். உங்கள் பார்வையில் விளம்பரங்கள் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? என்று உங்கள கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். 




Friday, September 17, 2010

ஆட்கள் தேவை,, உடனடியாக விண்ணப்பியுங்கள்.

ஆட்கள் தேவை................ மக்கள்ஸ் யாரும் ஓடப்படாது....
விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள்... உடனடியாக விண்ணப்பியுங்கள்.
அனைத்திந்திய இளைய தலைவலி ரசிகர் பேரவையின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க இந்த விளம்பரம் இங்கே பிரசுரிக்கப்படுகிறது. ஆகவே யாரும் ஆக்க்ரோசப்படப்படாது ஓகே.
                 ''இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்'' 

Wednesday, September 15, 2010

'தமிழ்துளி' தேவன் மாயனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

பதிவுலகில் நான் கண்ட பசுமையான உள்ளங்களில் ஒரு உள்ளம்....
பாராபட்சம் இன்றி பாராட்டுக்கள் தெரிவிக்கும் பரந்த மனமுடையவர் .....
கற்பனை உலகில் இவர் ஒரு சகலகலா வல்லவன் ( இது ரொம்ப ஓவர் இல்லை சார்).
440 பதிவர் பெருமக்கள் இவரை தொடர்ந்தும் தொடர்கிறார்கள் (அடியேனும் தான்) .
இவரின் கருத்துரைகள் கிடைக்காதா என்று ஏங்கும் உள்ளங்களில் அடியேனும் ஒருவன்.
தமிழ் பெருங்கடலில் இவர் ஒரு 'தமிழ்துளி '.  
ஆம்  இன்று பதிவர் டாக்டர்  தேவன் மாயம் அவர்களுக்கு  பிறந்த நாள்..............
பதிவுலகம் சார்பாக எமது சந்தோசமான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
 பாருங்கள் மனுஷன் இப்பவும் எதோ சிந்திக்கிறார் ஏதாவது பதிவிடலாம என்றுதான் யோசிப்பார்...
ஏதாவது பதிவிட்டால் போதும் என்று இல்லாமல் , பதிவின் மூலமாக ஏதாவது நல்ல விடயங்களை சொல்லலாமா என்று பொறுப்புடன் சிந்திக்கும் பதிவர் டாக்டர் .
இவரின் மருத்துவ குறிப்புகள் அடங்கிய ஏராளமான பதிவுகள் நிறைய வைத்தியர்களுக்கே உதவியாக இருப்பது இன்னும் இன்னும் சிறப்பாக அமைகிறது.

நான் பதிவெழுத வந்த காலங்களில் எனக்கு கிடைத்த அன்பான நண்பர்களில் வைத்தியரும் ஒருவர் . அப்போதெல்லாம் நான் சிந்திப்பதுண்டு , புதியவர்கள், சிறியவர்கள் என்றெல்லாம் பார்க்காமல்  உடனுக்குடன் தனது கருத்துக்களை தந்து என்னை உற்சாக படுத்திய பெருமகனுக்கு இன்று பிறந்த நாள் , மனதார வாழ்த்துகிறேன் ஐயா உங்களை.....

பதிவர் டாக்டர் தேவன்மயனின் ஒரு சில பதிவுகளை இங்கே தரலாம்

சாப்பிட்ட பின் மாரடைப்பு!

இவர்கள் உறவினர்களா?

 ஏன் நீதிபதி விசாரணை?

கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல்!!

மனைவி/காதலியிடம் அன்பை வளர்க்க (5 )முக்கிய வழிகள்!!-1 

இப்படி எத்தனையோ நல்ல பதிவுகள் என்னால் ரசிக்கப்பட்டவைகள் உண்டு .....

நீங்களும் ஒருமுறை டாக்டர் அவர்களின் பதிவுகளை படித்து பாருங்கள் நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும், .

வைத்தியரே உங்கள் எழுத்து வைத்தியம் இன்னும் பல்லாண்டு காலம் தொடர வேண்டும் என்று வாழ்த்து கின்றோம் .

வாழ்க பல்லாண்டு ........... வாழ்க பல்லாண்டு..... !!!

 











Thursday, September 2, 2010

அப்பிடி செய்தால் அது பிழை இல்லையா? ...............

அப்பிடி செய்தால் அது பிழை இல்லையா? ...............
இந்த கேள்வி நெடு நாளாக என் மனசை போட்டு துருவிக்கொண்டிருக்கின்ற ஒரு கேள்வி
அதாவது நாங்கள் செய்கின்ற ஒரு காரியம் எந்த ஒரு வகையிலும்  வேறு ஒருவரையும் பாதிக்க கூடாது இல்லையா?
அப்பிடி பாதித்தால் அந்த காரியத்தை எவ்வளவு நன்றாக செய்தாலும் அதில் பிரயோசனம் இல்லை.

சரி இனி விசயத்துக்கு வருவோம்..
அண்மையில் இந்திய தொலைக்காட்சியில் ஒரு 'குற்ற செயல்' தொடர்பான நிகழ்ச்சியொன்றை பார்த்துகொண்டிருந்தேன் , மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது...
அந்த நிகழ்ச்சி ஒரு உண்மை சம்பவத்தை இந்த உலகுக்கு வெளிக்காட்டுவது நோக்கமாக இருந்திருக்கலாம். ஆனால் அந்த நிகழ்ச்சி தயாரிப்பில் சில விடயங்களை கவனித்தால் நன்றாக இருக்கும் என எனக்கும் என்னோடு நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த நண்பருக்கும் தோன்றியது.


அதாவது ஒரு குடும்பத்தில் நடந்த ஒரு பிரச்சனை பின்னர் ஒரு கொலையில் முடிந்ததுதான் கவலை . தனது மகள் படிப்பில் கவனம் செலுத்தாமல் சில ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றி திரிவதை தாங்க முடியாத தந்தை தனது கௌரவம் பாதிக்கப்பட போகுதே என்று  அஞ்சி , ஆட்களை அமர்த்தி தனது மகளை  கொலை செய்கிறார். பின்னர் அவரும் அந்த கொலையாளிகளும் மாட்டி கொள்கிறார்கள்.
இந்த சம்பவத்தை உண்மையில் அந்த சம்பவத்தோடு சம்பந்த பட்ட கொலையாளிகளை தொலைக்காட்சியில் காட்டினார்கள் அதே வேளை உயிரிழந்த அந்த இளம் பெண்ணின் இறந்த உடலின் படமும் காட்டப்பட்ட்டது   , பின்னர் நடந்த அந்த உண்மை சம்பவத்தின் சில காட்சிகள் சித்தரிக்கப்பட்ட காட்சிகளாக  காட்டப்பட்டது.
இதன் மூலமாக இந்த சமுதாயத்துக்கு பல விடயங்களை தெளிவுபடுத்துகின்ற அதே வேளை பாதிக்கப்பட்டவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்பது மிகப்பெரிய ஒரு கேள்விக்குறியாகிறது....
தனது மகளின் நடவடிக்களிகள் பிழையான வழியில் இருந்தால் அதனை அந்த மகளுக்கு தெளிவு படுத்த தெரியாமல் தனது கௌரவம் பாதிக்க படும் என்பதற்காக கொலை வரை சென்ற அந்த தந்தையின் மன உணர்வுகளை பற்றி பேசுவதென்றால் இங்கே நிறைய பேசலாம்....  அது ஒரு புறம் இருக்க எனது வாதம் என்னவென்றால் ,, நடந்த அந்த சம்பவத்தை முழுமையாகவே ஒரு சித்தரிக்க பட்ட காட்சிகளாகவே காட்டியிருக்கலாம் அதை விடுத்து பாதிக்க பட்ட அந்த குடும்பத்தை முழுமையாக தொலைக்காட்சியில் காட்டுவதென்பது , அந்த நிகழ்ச்சிக்கென்னவோ, இன்னும்  நம்பகத்தன்மையை  இன்னும் அதிகரிப்பதாகவே   இருக்கும் அதேவேளை அந்த சம்பவத்தோடு தொடர்புபட்டு உயிருடன் இருப்பவர்களுக்கு பெரிய மன தாக்கங்களை ஏற்படுத்தும் இல்லையா??? தவறு செய்வது மனித இயல்பு அதற்காக தவறை மன்னித்து விடவேண்டும் என்றில்லை... மாறாக அவர்கள் ஏன் அந்த தவறை செய்கிறார்கள் என்று யோசித்து அந்த தவறை திருத்த ஏதாவது நடவடிக்கைகளை எடுக்கலாம்.. குறிப்பாக மற்றவர்களது அடிப்படை மனித உரிமைகள் பாதிப்படையாமல பார்த்துக்கொள்ளுவது மிக முக்கியம் .


இது போன்ற ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இந்திய தொலைக்காட்சிகளில்  ஒளிபரப்பாகின்றது , அத்தனையும் காத்திரமான உலகுக்கு தேவையான நல்ல நிகழ்சிகள் அதேவேளை மற்றவர்களின் மனித உரிமைகளும் பாதுகாக்கப்படவேண்டும் இல்லையா?
 அவர்களது அடிப்படை உரிமைகள் பாதிக்குமாறு செய்தால் அது பிழை இல்லையா?
" குற்றம் நடந்தது என்ன ?" என்று கேட்கின்ற அதேவேளை "குற்றம் நடக்காமல் இருக்க என்ன  செய்யலாம்?"" என்று சிந்திப்போம்.

Monday, August 23, 2010

ஏன் இப்படி இருக்கிறாங்களோ தெரியல..!!

ஆமாங்க இவங்கள பார்த்தால் எனக்கு கவலையாதான் இருக்கு, என்ன பன்றது அவங்களும் என்ன செய்வாங்க? அவங்க இயல்பு அப்பிடி.
என்னங்க ரொம்ப குழப்பிட்டனோ?. ஓகே விசயத்துக்கு வரலாம்...

சிலரை பார்த்தால் எப்பவுமே முகத்தை 'உம்' என்றே வைத்து கொண்டிருப்பார்கள் , மருந்துக்கு கூட சிரிக்க  மாட்டார்கள். ஏன் இப்படி  இருக்கிறாங்களோ தெரியல..!!
ஆரோக்கியமான மனிதனிடமிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில்  இயல்பாக வெளிப்படக்கூடிய இந்த சிரிப்பானது எங்கள் மனதையும் உடலையும் வலிமைப்படுத்த கூடியது என்று மருத்துவ உலகம் சொல்கிறது.
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று சொல்வார்கள், இப்படி அடிக்கடி சிரிப்பவர்களுக்கு ஏராளமான பலன்கள் கிடைக்கிறது , ஆனால் இந்த பலன்களும் தேவையில்ல, ஒரு மண்ணும் தேவையில்ல என்று சிலர் எப்போதுமே சோகத்தில் இருப்பது போன்று காட்சி தருவார்கள்.
இதற்கு அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகள் மட்டும் காரணமல்ல அவர்களின் மரபுப்பன்புகளும் தான் காரணம் என்று இப்பொழுது விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள் , ஒருவரின் வாழ்வில் மகிழ்ச்சியை தீர்மானிப்பதில் மரபுப்பன்புகள் ௯௦ சதவீத இடத்தை பிடித்துள்ளதாம்..... ஆகவே சிரிக்காதவர்கள் பற்றி நாங்கள் கோவப்பட நியாயமில்லை போலவே தோன்றுகிறது....

சிரிப்பு எங்களுக்காக கொண்டு வரும் சில நன்மைகள்....
  • சமூகத்துடன் ஒன்றி வாழ இந்த சிரிப்பு எங்களுக்கு உறுதுணை புரிகிறது, பாருங்கள் நகைச்சுவைகளை அள்ளி விடுபவர்களைச்சுற்றி எந்த நேரமும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
  • சிரிக்கும் போது உடலில் 300 தசைகள் அசைகின்றன.இதன் மூலமாக  உடலிலும், மனதிலும் உள்ள அழுத்தங்களும், கவலைகளும் இல்லாமல் செய்யப்படுகிறது . குறிப்பாக முகத்திலுள்ள தசைகளும், நெஞ்சுத் தசைகளும் பலம் பெற்று ஆரோக்கியத்தைத் தருகின்றன.

  • சிரிக்கும் போது ஆழமாக மூச்சை இழுக்க முடிவதால் உடல் கூடிய ஓட்சிசனை  உள்வாங்கிக் கொள்கிறது இதனால் இரத்த ஓட்டம் சீராகி இருதயம் சம்பந்தமான நோய்கள் வருவதை இந்த சிரிப்பு தடுக்கிறது. 
  • சிரிப்பு மனதை வலிமைப்படுத்தி புத்துணர்வுடன் வைத்திருக்கும். எவ்வளவு கடினமான பணிகளை செய்தாலும் புதிய உத்வேகம் கிடைக்கும் வகையில் உடலுக்குள் தூண்டுதலை சிரிப்பு ஏற்படுத்துகிறது.... 

  • தினமும் அரை மணி நேரம் மனம் விட்டுச் சிரித்தால் மாரடைப்பை வருவிக்கும் மன அழுத்த ஓர்மோன்களும், அதன் மூலக்கூறுகளும் பெருமளவு குறைந்து உடல் ஆரோக்கியமடையும். குறிப்பாக சிரிப்பது என்றால் வெறும் உதடுகள் மட்டும் சிரித்தால் போதாது , வாய் விட்டு வயிறு குலுங்க சிரிக்க வேண்டும், .
  (அரைமணி நேரம் சிரிப்பது எப்படி என யோசிப்பவர்களுக்கு, அரைமணி நேரம் சிரிப்பது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. ஏதேனும் ஒரு நகைச்சுவைப் படத்தை பார்க்கலாம், அல்லது நகைச்சுவை நிகழ்சிகளை பார்கலாம்...  )


சிரிக்க சில...............

மீண்டும் வடிவேலு, பார்த்திபன்..

“பார்த்தி.. இது என்ன ரோடுப்பா?”
“தார் ரோடு”

“ம்க்க்ஹும்.. இந்த ரோடு எங்க போகுதுன்னு கேட்டேன்?”
“எங்கேயும் போகலை.. இங்க தான் இருக்கு”

“ம்ம்… சரி.. நான் தெளிவா கேக்கிறேன். இந்த ரோடு எந்த ஊர்களுக்கு நடுவுல இருக்கு?”
“உள்ளூருக்கும் வெளியூருக்கும் நடுவுல இருக்கு.”

“ப்ப்ச்ச்… இந்த தார் ரோட்டுக்குன்னு ஒரு பேரு வச்சிருப்பாய்ங்கல்ல.. அதச் சொல்லுயா..”
“அப்படித் தெளிவா கேளு.. அப்போதானே கரெக்டாச் சொல்ல முடியும்…”

“அதத் தானே தெளிவா மொதல்லருந்து கேட்டுக்கிட்டு இருக்கேன்.”
“என்ன கேட்டே?”

“இது என்ன ரோடு?”
"இது தார் ரோடு."

Tuesday, August 17, 2010

டெங்கு , டிங்கு, சங்கு, கிங்கு .........................

இலங்கை ரசிகர் :- :- அண்ணேய் நம்ம யுவிக்கு
                                       ( யுவராஜ் சிங்க செல்லமா  அப்பிடிதான்
                                        அழைபோமுல்ல........    டெங்கு காய்ச்சலாமே ....

இந்திய ரசிகர்:-      அட சீ யுவிய்கு  இப்பிடி ஆச்சே
                                    நல்லா விளையாடுற பிள்ளையாச்சே ,
                                    இப்ப காய்ச்சல் வந்து படுத்து கிடக்குறானே...     

இலங்கை ரசிகர் :- விடுங்க அண்ண விடுங்க ,,
                                     மைதானத்துல போய் ரெஸ்ட் எடுக்கிறத விட 
                                      பெட் ல ரெஸ்ட் எடுக்கட்டுமே .. ( ஹீ ஹீ ).
  
இந்திய ரசிகர்:-    இன்னைக்கு எப்பிடியும்  போட்டியில 
                                  ஜெயிச்சாகனும்  இல்லன்ன எங்களுக்கு  முதல்
                                   எங்க மானம் கப்பல் ஏறிடும்.  


இலங்கை ரசிகர் :- நாங்க மட்டும் என்ன??
                                     சும்மாவா விட்டுடுவோமா... பார்க்கலாம்.


இந்திய ரசிகர்:-    எல்லாம் சரி இந்த டாஸ் தானே பயமா இருக்குது, 
                                    யாருக்கு விழ போகுதோ........... 
                                   டோஸ் ல ஜெயிச்சா முதல் ல பட்டிங் செய்யலாம்....... 


                   நேரம் :- பி.ப.2.30 (  தம்புள்ள கிரிக்கெட் மைதானம் ) - Toss
Comm:- Srilanka won the toss and elected to bat first. 

இலங்கை ரசிகர் :- ஹீ ஹீ இப்ப என்ன பன்னுவீவ்க இப்ப என்ன பண்ணுவீங்க 
                                                        Sl won the toss and batting 1st.. Yuvi is down with Dengu.. Now MSD is down  with Dingu after the toss?  ஹீ ஹீ ஹீ.


போட்டி  முடிவடைந்த   பின்னர் ..... 

இந்திய ரசிகர்:-      இப்ப என்னங்க சொல்றீங்க டெங்கு, டிங்கு 
                                      என்றெல்லாம் பேசினீங்களே உங்க சங்காவுக்கு 
                                       இப்ப நாங்க ஊதிட்டமுல்ல  சங்கு ...

இலங்கை ரசிகர் :- அதுதாங்க சரி ஏனென்னா..................
                                     இன்னைக்கு உங்க சேவாக் தாங்க  கிங்கு. 
 
இந்திய ரசிகர்:-   உங்க ரண்டிவ் இன்னம் கொஞ்சம் முன்னாடி 
                                   போய் கடைசி  பந்தை வீசிருக்கலாமே ...
                                   நோ போல் போடுறாங்களாம்   நோ போல்..... 
                                   பார்த்தீங்கல்ல எப்பிடி போட்டாலும் 
                                   விரட்டி விரட்டி  அடிப்போம்.... 


இலங்கை ரசிகர் :-நம்ம பசங்க எதை செய்தாலும் கொஞ்சம் 
                                     பெரிசா செய்துதான் பழக்கம் அதுதான் 
                                     இந்த நோ போலும் கொஞ்சம் 
                                     பெரிசா போய்விட்டது போல இருக்கு .. ஹீ ஹீ

இந்திய ரசிகர்:-    ஹீ ஹீ... இதில மட்டும் தான பெரிசா செய்வாங்களா  
                                     இல்ல துடுப்புகளையும்  பெரிசா அகலமா  செய்வாங்களா... ??

இலங்கை ரசிகர்:-  தேவை பட்ட நாங்க விக்கெட்டுகளையும் 
                                    பெரிசாக்குவம்,  பந்தையும் பெரிசாக்குவம்..
                                     ( நாலு பேருக்கு நல்லது நடந்தால் எதுவும் தப்பில்ல...)) 

இந்திய ரசிகர்:-     அது சரி இப்ப எதுக்குங்க   இந்த மல்லு  கட்டுறீங்க 
                                    நீங்க இறுதி போட்டிக்கு வந்தும் தோற்க தானே போறீங்க..??

 இலங்கை ரசிகர்:-  ஒரு ஆசிய போட்டியின் இறுதி போட்டியின் 
                                       முடிவ வச்சு  சின்ன புள்ள தனமா பேசப்படாது ....
                                       ஓவர் நினைப்பு சரிவராது ... பார்க்கலாம் பார்க்கலாம் 
                                       இறுதி போட்டியில யாரு ஜெயிக்கிறது என்னு.... 


இந்திய ரசிகர்:-     நீங்க நிச்சயமா ஜெயிக்க போறதில்ல ,
                                   ஏனென்னா நீங்க இறுதி போட்டிக்கே வர  போறதில்லையே....


ரிங் ரிங் ரிங்  ரிங் ரிங் ரிங் .....................



அட சீ இந்த நேரத்துலையா இந்த அலாரம் அடிக்குறது!!!!  கடைசி வரைக்கும் என்ன பேசியிருபாங்க என்னு தெரியாமலே   போயிட்டுதே.....  ( நேற்று இரவு இலங்கை இந்திய அணிகளின் போட்டி முடிவடைந்த  பின்னர் தூங்கிய பிறகு  நான் கண்ட கனவு தான் இது...) 

Monday, August 16, 2010

மானம் போச்சு......

வந்த இடத்துல இப்பிடியா..? இதெல்லாம் ஒரு நாடா என்று மட்டும்  தயவு செய்து கேட்டுடாதீங்க யுவராஜ் சிங்......... எங்களால தாங்க முடியாது.!
ஆமாங்க இலங்கை வந்திருக்கின்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுவராஜ் சிங் இப்பொழுது 'டெங்கு' காய்ச்சலினால் பாதிக்கபட்டிருக்கிறார். காலையில் செய்தி கேட்கவே கவலையாக இருந்தது .


 "இலங்கையில் இப்பொழுது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
 ஜனவரி மாதம் முதல் இதுவரை 108 பேர் டெங்கு காய்ச்சலுக்கு இறந்துள்ளனர். 7000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்."

டெங்கு காய்ச்சலை பற்றிய தகவலை -மருத்துவர் ப.செல்வராஜன்- சொல்லியிருக்கிறார் கிளிக் பண்ணி பாருங்கள்.

ஏராளமான  மனித  உயிர்களை  காவு  கொள்ளுகின்ற இந்த கொடிய நுளம்பிளிருந்து  அனைவரையும்  பாதுகாக்க  சுகாதார துறை எவ்வளவுதான் முயன்றாலும் அதனை கட்டுபாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை , இதற்கு முக்கிய காரணம் பொதுமக்களின் கவலையீனமே, காரணம் இந்த கொடிய நுளம்புகள் பரவாமல் தடுக்க அதன் உற்பத்தி இடங்களை அழிப்போம் என்று எத்தனை தடவைகள் சொன்னாலும் அதனை பாராமுகமாக இருப்பது , உங்களில்  ஒருவரை காவு கொண்டதன் பின்னர்தான்  விளங்குமோ  தெரியவில்லை.

இதன் மூலமாக எங்களுக்கு மட்டுமில்லாமல் எங்கள் நாட்டுக்கும் இப்பொழுது கெட்ட பெயர் வந்திருக்கிறது,( இதனால மட்டும்தான் கெட்ட பெயர்  வந்திருக்காக்கும் என்று மொக்கையா யோசிக்கமாடீங்க என்று நம்புறன்)  நம்ம  நாட்டில் கிரிக்கெட் விளையாட வந்தவருக்கும் குத்தி தன வரவேற்பை வெற்றிகரமாக வழங்கியிருக்கும் டெங்கு நுளம்பாரை  என்ன என்று சொல்வது , இனி நம்ம நாட்டுக்கு எப்படி வெளிநாடவர்கள் நம்பி வருவார்கள் ...... ''அடேய் எங்கடா  போகிறாய் இலங்கைக்கா ? அங்க போகாதடா அங்க டெங்கு நுளம்பை ரொம்ப பாசமாக வாழ வச்சிருக்காங்கடா  ...'' என்று சொல்ல வச்சுடாதீங்க .... போச்சு மானம் எல்லாமே போச்சு.

எனவே இந்த கொடிய டெங்கு நோயிலிருந்து எம்மையும் எம்மை நம்பி வருகின்ற விருந்தாளிகளையும் பாதுகாக்க வேண்டியது நம் கடமை.

                                  ஒன்று பட்டு  டெங்கை  விரட்டுவோம்.

Sunday, August 15, 2010

நிச்சயம் வெற்றி உங்கள் பக்கம்.

நங்கள் எங்கள் வாழ்க்கையிலே எங்களை அறியாமலே  எவ்வளவோ தவறுகள் செய்திருப்போம், அதே போல பல்வேறு காரணங்களுக்காக   பல்வேறு சந்தர்பங்களில் துவண்டு போய் மனமுடைந்திருப்போம் அந்த சந்தர்பங்களில் சில மனிதர்கள் மூலமாக நமக்கு ஆறுதல் வார்த்தைகள் அல்லது நம்பிக்கை தரும் வசனங்களை  கேட்டிருப்போம்.இவற்றை  தவிர சில நூல்கள் எங்களை உற்சாக படுத்தி நல்வழி படுத்தி இருக்கும் ,


அந்த வகையில்  எனது  வாழ்க்கையில்  சந்தித்த சில  வைர வரிகள் சிலவற்றை இங்கே பதிவிடுகிறேன், நிச்சயமாக இந்த வரிகள் உங்கள் வாழ்க்கையிலும் ஏதாவது சாதகமான மாற்றங்களை ஏற்ப்படுத்தினால் எனக்கு மட்டில்லா மகிழ்ச்சியாக இருக்கும். படித்து பாருங்கள்.
======================================================
  • வெற்றி உங்கள்  தலைக்குச் செல்ல வேண்டாம், தோல்வி உங்கள் இதயத்துக்குச் செல்ல வேண்டாம்.
  • எவன் ஒருவன்  கடவுளிடமிருந்து காலையில் விலகி ஒடுகிறானோ , அவனால் நாள் பூராகவும் கடவுளை உணர முடிவதில்லை.
  • நாளைக்கு நான் வாழ்வேன் என்று முட்டாள்கள் தான் சொல்லுவார்கள். உண்மையில் இன்று என்பதே தாமதம்மனதாகும் . புத்திசாலிகள் நேற்றே வாழ தொடங்கியிருப்பார்கள்.
  • நற்பண்புகள்  தேனீக்களை  போல  ஒவ்வொரு  மலரிலிருந்தும் தேனைச்க் சேகரிக்கும் , தீய பண்புகள் சிலந்தியைப்போல இனிமையான மலரிலிருந்தும் கூட விசத்தை மட்டுமே உறிஞ்சும். 



  • ஒரு வாலிபன் நேர்மையாக உழைக்காமலேயே பணத்தை அடைவது எப்படி என்று எந்த கணத்தில் உட்கார்ந்து யோசிக்க தொடங்குகிறானோ ,அந்தக் கணத்தில் அவனுடைய இருண்ட வாழ்கை ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம்.



    • எதுவுமே செய்யாமல் சும்மா இருப்பவன் மட்டும் சோம்பேறியல்ல .தன்னால் முடிந்தும் இன்னமும் நல்ல வேலையைச்ச் செய்யாமல் இருப்பவனும் சோம்பேறிதான்.



    • கோபத்துடன் இருக்கும் போது பேசுங்கள் , அப்போதுதான் நீங்கள் வாழ்நாள் முழுவதும் வருத்தப்படும் படியான பேச்சைப் பேசியிருப்பீர்கள்.



    • ஒரு மனிதன் தவறு செய்துவிட்டு ,அதை ஒப்புக்கொள்ள வேண்டாம் என்று முடிவு  செய்து  விட்டால்  உடனே  கோபப்பட தொடக்கி விடுவான். 



    • சரியான விசயங்களை சரியான சமயத்தில் பேசுவது மட்டுமே சிறந்த பேச்சு ஆகாது , உணர்ச்சிவச படக்கூடிய தருணங்களிலும் கூட பேச கூடாததைப் பேசாமல் விட்டு விடுவதும் சிறந்த பேச்சு ஆகும். 



    • யார் நிறைய பேசுகிறார்களோ அவர்கள் அவர்கள் குறைவாகவே யோசிக்கிறார்கள். 



    • பரிசுப்பொருட்களை  மட்டுமே கொடுத்து  நட்பை  விலைக்கு  வாங்காதே . பரிசு பொருட்கள் தீர்ந்து போனவுடன் அவர்களது அன்பும் காணாமல் போய்விடும். 



    • மகத்தான வாய்ப்புக்கள் எல்லோருக்குமே வருகின்றன , ஆனால் அவற்றைச்க் சாதாரண மனிதர்களால் கண்டு கொள்ள முடிவதில்லை. 



    • உங்களது எதிகள் சொல்வதைக் கவனியுங்கள் அவர்களே உங்களது தவறுகளைச்  சரியாக கவனித்துச் சொல்ல கூடியவர்கள். 



    •  மற்றவர்கள் நம்மைப் பாராட்டுவது நாம் இப்போது எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை கட்ட்ருக்கொள்ள அல்ல .எதிர்காலத்தில் எந்த நிலைக்கு உயர வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான். 

    • ஒரு  இளைஞன் தன்னை தான் உருவாக்கி கொள்வதற்கான விதிகள்:

                1.மிக குறைவாக பேச வேண்டும்
                2.அதிகமாக கவனித்து கேட்க வேண்டும்
                3.நிறைய பேர்களின் மத்தியில் இருக்கும் போது  குறைவாகவே           தமது  கருத்துக்களை பிரதி பலிக்க வேண்டும் .
                4.தனது அபிப்பிராயங்களை குறைத்து அடுத்தவர்களுடைய  கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.    



    • தனக்கு நல்லவற்றை செய்துகொள்ளும் ஒருவனை யாரும் சுயநலம் பிடித்தவன் என்று யாரும் சொல்வதில் .மற்றவர்களின் நலத்தை புறக்கணிப்பவனையே சுயநலம் பிடித்தவன் என்று சொல்கின்றோம்.  



    • ஒரு மனிதன் விழாமலே வாழ்த்தான் என்பது பெருமையல்ல , விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை. 


    நீ இறக்கும் போது உனக்காக அழக்கூடியவர்களை உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்.