ad

Wednesday, March 17, 2010

குழந்தைகளின் கை கால்களை முறிப்பாங்களா...? கடவுளே!



நாங்கெல்லாம் அடுத்தவங்களை நக்கல் , நையாண்டி பண்ணி பேசியே பழக்கப்பட்டவங்க அதில்தான் எங்களுக்கு ஆத்மா திருப்பதி.....

ஆனால் சிலவேளைகளில் எங்களைவிட அத்துறையில் பாண்டித்தியம் பெற்றவங்க கிட்ட போய் பேசி எங்கட மூக்குகளை பல நூறு துண்டுகளாக உடைத்தும் இருக்கிறோம் , அதில் எங்களுக்கெல்லாம் பெரிய கவலையே வாறதில்ல... எல்லாம் பழகி போனதுதானே, பிறகு எதுக்கு வெட்கப்படுவான்.
 
இப்பிடித்தான் இந்த கதைய ஆரம்பிக்க வேணும்......................

பெர்னாட்சவ் வீட்டுக்கு ஒருநாள் ஒரு நகைகள் நையாண்டி கலைகளை சிறப்பாக பயின்ற பெண்மணி வந்திருக்கிறார், வந்தவர் பெர்னட்ஸ்வவின் அறையை பார்த்துவிட்டு ,


" செடி கொடிகள் மீதும் மிருகங்கள் மீதும் நீங்கள் கருணை கொண்டவர் எண்டு பேசுறாங்களே ஆனால் உங்கள் வீட்டில் ஒரு செடி கொடியையோ வளர்ப்பு மிருகங்களையோ காண வில்லையே.... "

என்று நக்கலாக கேட்டிருக்கிறார்.

அதற்கு பெர்னட்சவ் சிரித்துக்கொண்டே ...........

"எனக்கு குழந்தைகளை மிகவும் பிடிக்கும் அதற்காக குழந்தைகளின் கை கால்களை முறித்து தொட்டிகளில் வைக்க முடியுமா? "

என்று கேட்டாராம்.

அதற்கு பிறகு அந்த பெண்மணி தனது மூக்கின் துண்டுகளை நிலத்தில் தேடியதை உங்களுக்கு நான் சொல்ல தேவையில்லை.