ad

Wednesday, September 30, 2009

சுடச் சுட........


நீண்ட நாட்களாக நம்ம கவிதைகளை (சுட்டதுதான்) காணவில்லையே என்றவர்களுக்கு இப்பதான் சுடச் சுட சுட்டு சில கவிதைகள் இதோ............
சுடுவதற்கு ஏற்கனவே சுட்டு வைத்தவர்களுக்கு ரொம்ப நன்றிகள்.
===================

காதல் என்பது
நம் வசத்தில் இல்லை
அது ஒரு வினோதமான நெருப்பு !
பற்ற வைத்தால் பற்றாது
அணைத்தால் அணையாது !
=======================
அவளை ஒரு கண நேரம்
மறந்து விட்டேன்
இறைவா! இந்த பாவத்தை
மன்னித்து விடு.
=============
என் காதலி
பிரிய வேண்டும என்று
பிரார்த்திக்க போகிறேன்
ஏனென்றால்
என் பிரார்த்தனை
எப்போதுமே நிறைவேறுவதில்லை.

======================
காதலில்,
வாழ்வுக்கும் சாவுக்கும்
வித்தியாசமில்லை,
யாரால்
என் உயிர் போகிறதோ
அவளை பார்த்துதான்
உயிர் வாழ்கிறேன்.
=======================
மலர்வனம் பற்றியோ
மதுவை பற்றியோ
பேச்சு வந்தால்
காதலியின் பெயர்
உதட்டில் வந்து விடுகிறது .
========================
இருண்டு போவதுதான்
என் விதி என்றால் !
அவள் கூந்தலாகவோ மச்சமாகவோ
நான் ஆகியிருக்க கூடாதா?!.
====================
அழைப்பதுமில்லை
கதவை தட்டுவதுமில்லை
அவள் நினைவு பெரிய கர்வத்தோடு
இதயத்தில் நுழைகிறது.....!

======================
கவிதைகளை செதுக்கிய சிற்பிகளுக்கு மறக்காமல் நன்றிகளை சொல்லிடுவோமா?.