ad

Thursday, September 30, 2010

அவமானம் திருவள்ளுவருக்குத்தான், உனக்கல்ல.

நீ
நினைப்பதெல்லாம்
நடக்கவில்லையா?
அதற்காக-
நினைப்பதை
நிறுத்தி விடாதே.

நீ
கேட்பதெல்லாம்
கிடைக்கவில்லையா?
அதற்காக கேட்பதையே
நிறுத்தி விடாதே .

நீ
விதைப்பதெல்லாம் முழைக்கவில்லையா ?
அதற்காக -
விதைப்பதையே நிறுத்தி விடாதே .

உன்-
உழைப்பு உன்னை
உயர்த்தவில்லையா ?
அதற்காக
உழைப்பதை நிறுத்தி விடாதே .

நம்பிக்கைதான்-
வாழ்க்கையை 
நகர்த்திக்கொண்டு போகிறது.

கனி விழாவிடினும்
கல்லெறிவதை நிறுத்தாதே.

''முயற்சி 
மெய் வருத்தக் கூலி தரும்''  

தராவிட்டால்
அவமானம் -
திருவள்ளுவருக்குத்தான்
உனக்கல்ல.  

நன்றி:- 'நிஜ கோவிந்தம்'