ad

Monday, August 31, 2009

"பணம் காய்க்கும் மரம்" !!!!!!



தலைப்பை பார்த்து நிறைய பிடுங்கலாம் என எண்ணி ஓடோடி வந்த நண்பர்கள் எல்லோருக்கும் ஒரு கூலான வணக்கம்.

அதாவது , உண்மையில் இப்படி மரம் உலகத்தில் இருந்தால் உலகத்தில் இப்போது இருக்கின்ற பொருளாதார சிக்கல்களுக்கு ஒரு முற்று புள்ளி வைக்கலாம்.

அது மட்டுமல்லாமல், கட்டாயம் வீட்டுக்கு நாலு மரத்த நாங்க நட்டு நீர் ஊற்றாமலா போயிருவோம்!


அந்த ஏக்கங்கள் எல்லாம் ஒரு புற மிருக்க இப்படியான மரம் உலகத்தில எங்காவது இருக்கா என்று கேட்டு மொக்கை கேள்வி கேட்டவன் என்ற பெருமைக்கு சொந்தக்காரன் ஆக நான் விரும்ப வில்லை .

அப்ப இந்த விஷயம் இப்ப எதுக்கு என்று கேட்டால்தான் முக்கியமான எனது சந்தேகம் முடிவுக்கு வரும் ,,,,,,,

நீங்கள் எல்லோருமே எனக்கு நல்லதொரு தீர்வை பெற்று தருவீர்கள் என்ற நம்பிக்கையில் தான் இரவெல்லாம் தூங்காமல் விழித்திருந்து யோசித்த எனக்கு பலன் கிடைக்கும்.

இப்ப என்னுடைய பிரச்சனைக்கு வருகிறேன்... அதாவது ,


"பணம் மரத்தில் காய்ப்பதில்லை என்று சொல்வது உண்மையானால்,பணம் இருக்கும் வங்கிகளுக்கு மட்டும் ஏன் 'கிளைகள்" இருக்கிறது?!!!!!!!!!!!!"


இந்த கேள்விக்கு மட்டும் விடை சொன்னால் உங்களை கொஞ்சம் கீழே பாருங்க இப்படி பறக்க வைப்பேன்.

Thursday, August 27, 2009

தயவு செய்து இத பார்க்க வேணாம்.

ஒரு தலை காதல் ,இருதலை காதல் கேள்விபட்டிருக்கோம், ஆனால் இது "இரு முக காதல்"........ நீ எங்க போனாலும் விட மாட்டேன் என் பார்வை உன்னை எல்லா பக்கமும் துரத்தி வரும்...
யாருகிட்ட உன் வேலைய காட்டுற ! சும்மா விட்டுருவோமா !

சீ சீ ...போதுண்டா ..... என்ன இது ! பன்றி காய்ச்சலின் உச்ச கட்டமோ?




...................................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


காதலில் கண்கள் பேசி கொள்வது சகஜம் தானே ! அதுதான் வெளிய வந்து பேச போறாங்க ...




இந்தா உரிய இடத்துக்கு போய் சேரு....


காதலை கண்டு கொண்டோம்...

இவர்தான் "லிபோடிக்" டாக்டர்.



என்னவளை கண்டு கொண்டேன் அவள் இவ்வளவு இனிப்பானவளா!


Wednesday, August 26, 2009

உங்களால் முடியும் !!!!! எழுந்து கொள்ளுங்கள்.

இது ஒரு சீரியஸ் மேட்டர் .................
"இளைய பாரதியின்" பட்டின பாலையில் கண்டெடுத்த தத்துவம்.

அனாதையாகும் புகழ்

உங்களின் பிரிய உயிரை
பிரிய மனமின்றி பிரிந்து
சடமாய் சரியும் கணங்கள்.

இதுவரை நீங்கள் காவல்காத்த
உங்களின் புகழ் அனாதையாகும் .
சூதாட்ட விடுதியில் போதையின் உச்சத்தில்
சிவப்பேறிய கண்களுடன் சூதாடும்
முரடர்களிடையே விடப்பட்ட
உங்கள் காதலியை போல .

நீங்கள் நிதமும்
மெருகேற்றி...
பிரகாசிக்க செய்த பெயரை
உங்கள் மரணத்திற்கு பின்
எங்கே ஒளித்து வைப்பீர்கள் ?

நோவாவின் பேழைக்குள்ள ?
கல்வெட்டு மொழிகளிலா ?
பல்கலைக்கழக நூலகங்களின்
தடித்த தத்துவ புத்தகங்களிலா ?
ராஜ கோபுரங்களின் கலச மின்னலிலா?
எங்கே?
எங்கே?

ஒரு ஓவியனின் தூரிகையோ
ஒரு சிற்பியின் உளியோ
ஒரு கவிஞனின் பேனாவோ
ஒரு சங்கீத காரனின் பாடலோ
உங்களை நிறுவி விடாது.

மரண பெருங்கடலுக்கு
அப்பால் விரியும்
சரித்திர மணல் வெளியில்
உங்கள் பெயரை எழுத
உங்கள் சுட்டுவிரலால் மட்டுமே முடியும்.
காற்று கலைக்க முடியாத
சத்தியத்தின்
ஈரப்பதம் உடையது அது.

Monday, August 24, 2009

புல்லரிக்குதையா......உங்க பாசம் .

"எங்கேயும் எப்போதும் எல்லாராலும் போற்றப்படுகின்ற நட்பு "..............
உண்மயான நட்பென்றால் என்ன??? அறிவோம் வாங்க....
======================================
நாட்டை காப்பது போல் உன்னையும் காப்பேன் ,ஆனால் தயவு செய்து பாக்கெட் இனுள் "சூ" போயிடாத!!!!!!!!
இந்த உலகத்தில எவ்வளவோ பார்த்த தாங்கிட்டன் , இப்ப நீயும் ,,,, கடைசிவரைக்கும் வருவாய் என்ற நம்பிக்கையில் நான், ஆனால் தயவு செய்து இடையில் இறங்கி ஓடாத , போலீஸ் காரன் பிடிசிருவான்.
முத்துக்கு பின்னால் குத்தும் நண்பர்களை ,அவர்ளுக்கு தெரியாமல் குத்த வைக்க தான் உன்னை இங்கே வைத்திருக்கிறேன். கவனம், என் காதை கடிக்காதே!!

இந்த பயணத்தில் இனி என்ன நடந்திடுமோ ? எதிகாலம் தெரிந்திடுமோ!
மறக்காமல் ஹெல்மெட் போட்டுக்கோ ராஜா , ஏன்னா உனக்கு தெரியாதே இந்த பைக் ல சரியா brake பிடிக்காது!!!!

உச்சி உச்சி உச்சி...... நான் ஏறப்போரன் உச்சி , 'நேரத்துக்கு சரியா குதிச்சுக்கோ ராஜா .... இல்லன்ன நான் பொறுப்பில்ல.


உனெக்கென்ன நீ பொய் சேந்துட்டாய் இவனுகிட்ட அகப்பட்டது நானல்லவோ !!!!! (நீ ஈராக்கில், நான் எங்கேயோ தெரியாது)

உங்கள நாங்க தனியா விட்டுருவோமா ? நாங்க படுரதேல்லாம் நீங்களும் படவேணும் வாங்க....... போய் வருவோம்.







புத்தம் புதியதடா கொடுத்த முத்தம்....

Thursday, August 20, 2009

இந்திய நாட்டின் பிரிவினைக்கு நேரு காரணமா ?


"ஜஸ்வந்த் சிங் " ...................................................................

ஒரு மூத்த அரசியல் வாதி ,முன்னாள் மத்திய அமைச்சர் ,இந்தியாவின் மிக பெரும் பொறுப்பு வாய்ந்த ஒரு குடிமகன் , கட்சியிலிருந்து நீக்கபட்டுள்ளது என்பது உலக அரங்கில் எவ்வாறு பார்க்கப்படுகிறதோ இல்லையோ ஆனால் இந்தியாவையும் அதன் நேச நாடுகளையும் பொறுத்தவரை முக்கியமான விடயமொன்றாக இருக்குமா என எண்ண தோன்றுகிறது .


எழுபத்தொரு வயதான ஜஸ்வந்த் சிங் எழுதி சமீபத்தில் வெளியிட்ட புத்தகத்தில் (“Jinnah, India-Partition Independence” - written by a senior Bhartia Janta Party (BJP) , முகமது அலி ஜின்னாவைப் பாராட்டியிருப்பதுடன், நாட்டின் பிரிவினைக்கு நேருவும், சர்தார் படேலும்தான் காரணம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதில் முதலாவது விடயம் எவ்வாறாயினும் இரண்டாவது விடயம் சம்பந்தமாகத்தான் அதிகமான சர்ச்சைகள் கிளம்பியிருக்கும் என்று எண்ண தோன்றுகிறது .
"எனவே தான் 'காட்டி கொடுக்கிறாரா?' என்று நண்பர் ஒருவர் கேட்டார்......
இந்த இடத்தில் வரலாறுகளை புரட்டி உண்மையில் என்ன நடந்தது என்பதையும்
இந்த இடத்தில் மிக அவதானமாக சிந்திக்க வேண்டியிருக்கிறது .
எது எவ்வாறாக இருந்தாலும் கட்சிலிருந்து ஜஸ்வந்த் சிங் நீக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் சொல்லும் போது "இந்த முடிவு தனக்கு மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகவும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும், தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்கப் போவதாக ஜஸ்வந்த் சிங் தெரிவித்துள்ளார்.


-அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியில் ஒரு தலைவராக இருந்த ஜின்னா பாகிஸ்தானை தொடங்கப்பட்ட பின் இந்த நாட்டின் தந்தையார் என்றழைக்கப்படுகிறார். இவரின் பிறந்த நாள் பாகிஸ்தானில் ஒரு தேசியத் திருவிழா ஆகும். பாகிஸ்தானின் முதலாம் ஆளுனர் (Governor-General) ஆவார்.

Wednesday, August 19, 2009

Enjoy Each Day !!


First, i was dying to finish my high school and start college
And then i was dying to finish college and start working
Then i was dying to marry and have children
to grow old enogh
so i could go back to work
but then i was dying to retire
And now iam dying......
And suddenly i realized
i forgot to live

please don't let this happen to you
Appreciate your current situation
and enjoy each day
.....old friend


"To make money we lose our helth,
and then to restore our health we lose our money...
We lives as if we are never going to die,
and we die as if we never lived....."

Tuesday, August 18, 2009

வாங்க புதுசா டி குடிப்போம்.

ஒன்னுமில்லீங்க கொஞ்ச புதிய பாத்திரங்கள் வாங்கினோம் , அதைத்தான் உங்களுக்கிட்ட்ட காட்ட வந்திருக்கம், பிறகு நீங்க வாங்கியதை காட்ட இல்லன்னு நீங்க சொல்ல கூடாதே அதுதான் இப்ப காட்டுறம் பிடிச்சிருந்தால் காச தந்து எடுத்துக்குங்க.....


சிங்கமொன்னு புறப்பட்டதே அதுக்கு இப்ப ..........

கண்டேன் எங்கும் பூ முகம்....
நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க....


என்னங்க ஒண்ணுமில்ல சும்மா ஒரு பில்ட் up....


இதையெல்லாம் பார்த்த நம்ம "வாலுவும்" அவரது சகாக்களும் எப்படி சரக்கோட தூங்குறாரு பாருங்க.....


Thursday, August 13, 2009

எந்த கை உங்கள் நம்பிக்"கை" ?


இன்று சர்வதேச "இடது கை பழக்கம் கொண்டவர்கள்" தினம் , காலையிலிருந்து வானொலியிலும் நல்ல விளக்கம் எல்லாம் சொல்லி இப்போ உங்களோடு பதிவினூடாகவும் சில விடயங்களை பகிரலாம் என்று வந்திருக்கோம்.

இப்ப பாருங்க இந்த உலகத்தில் உருவாக்கப்படுகின்ற அதிகமான பொருட்கள் "வலது கை பழக்கம் " கொண்ட அன்பர்களுக்காகவே தயாரிக்கப்படுவதாக சில இடது கை பழக்கம் கொண்டவர்கள் குறைப்பட்டு கொள்வதுண்டு ....

குறிப்பாக சில பொருட்களை சொல்லலாம் ., கத்தரிகோல் ,ஹொக்கி போட்டிகளில் பயன்படுத்து மட்டை , கிட்டார் வாத்திய கருவி,பாடசாலைகளை பயன்படுத்தும் கதிரையுடன் கூடிய மேசை போன்ற விடயங்களை சொல்லலாம் .
இது தவிர இன்னும் ஏராளமான விடயங்களை குறிப்பிடலாம்.

எது எவ்வாறாக இருந்தாலும் இடது கை பழக்கம் கொண்டவர்கள் எதோ ஒரு வகையில் சிறந்தவர்களாக இருப்பதை நான் கண்கூடாக கண்டிருக்கிறேன்.

அனால் மற்றுமொரு செய்தி , இடக்கை பழக்கம் உள்ளவர்களை விட வலக்கை பழக்கம் உள்ளவர்கள் ஒன்பது ஆண்டுகள் கூடுதலாக வாழ்கிறார்களாம்.

இந்த விடயம் ஆராய்ச்சிகள் மூலமாக சொல்லப்பட்டாலும் எந்த அளவுக்கு நடைமுறையில் கண்டிருக்கிறோம் ??????

ஆனால் இப்பொழுது அவுஸ்திரேலியா விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்ர ஒரு விடயத்தின் மூலம் இடது கை பழக்கம் உள்ளவர்கள் பெருமையடைய கூடியதாக உள்ளது.

அதாவது "இடது கை பழக்கம் உள்ளவர்கள் வலது கை பழக்கம் உள்ளவர்களை விட விரைவாக சிந்திக்கிறார்கள்." என்பதே அந்த முடிவு.

ஏனென்றால் இடது கை பழக்கம் உள்ளவர்களால் மூளையின் இரண்டு பாகங்களையும் பயன் படுத்த முடிவதாகவும் ,விரைவாக தகவல் களை மூளைக்கு அனுப்பி பெற முடிவதாகவும் அவர்களுடைய ஆராய்வின் முடிவுகள் சொல்கிறது.

இதனால் இடது கை பழக்கம் உள்ளவர்களால் நுட்பமான் பணிகளையும்,விளையாட்டு போன்ற துறைகளில் அவர்கள் சிறந்து விளங்குவதையும் நாங்கள் அவதானிக்கலாம்,அது மட்டுமன்றி பார்வை சம்பந்தப்பட்ட அதிகமான போட்டிகளில் இடது கை பழக்கம் உள்ளவர்களே அதிகமாக வெற்றிகளை பெற்று கொள்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சி தவிர இன்னுமொரு பெருமை தரக்கூடிய விஷயம், "Stewardesses" என்ற வார்த்தை இடது கையாலேயே டைப் பண்ண வேண்டிய மிக நீளமான வார்த்தை.


இதை அறிந்து தானோ ஜப்பானியர்கள் குழந்தைகளுக்கு இரண்டு கைகளாலும் எழுத கற்று கொடுக்கிறார்களோ தெரியல !!!!

இன்றைய நாளுக்கு பொருத்தமான ஒரு பதிவை இரண்டு கைகளையும் பயன் படுத்தி டைப் பண்ணிய திருப்பதி எனக்கு...........


இப்ப சொல்லுங்க எந்த கை உங்கள் நம்பிக்"கை" ?.

Tuesday, August 11, 2009

என்னடாப்பா வாறதானே!!!!!!!!

என்னடாப்பா எல்லோரும் வார தானே ??? 23 ம் திகதி ஞாயிற்று கிழம காலம்புற 9 மணிக்கு கொழும்பு தமிழ் சங்க வினோதன் மண்டபத்துக்கு வாங்கடாப்பா ....நான் சொல்லி போட்டன் பிறகு சொல்ல இல்ல என்று கவலைபடாதங்கோ.

Thursday, August 6, 2009

என்னங்க பண்ண......


இப்பவெல்லாம் அடிக்கடி பதிவிட முடிவதில்லை ,காரணம் கணினியின் முன் இருந்தால் ஒரே தலையிடி ....கொஞ்ச நேரத்துக்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது,,,,,,, கண்ணுக்கு வேற கஷ்டமாயிருக்கு. பிறந்ததிலிருந்து தொடர்ச்சியாக 12 வருடங்களாக கணினியோடு இடை விடாது இணை பிரியாமல் இருந்தாலோ என்னவோ தெரியல .....


இப்ப நான் என்னங்க பண்ணலாம், பதிவுலகில் இருக்கும் வைத்திய நண்பர்கள் ஆலோசனைகளை தாருங்கள்.