மந்திரியான பிறகு -
சொந்த ஊருக்கு வந்தேன்;
பழைய தமிழாசிரியரைப்
பார்க்க நேர்ந்தது.
'ஐயா ! என்னை
உருப்படாதவன்;
உதவாக்கரை;
ஊர்சுத்தி-
என்றெல்லாம்
அப்போது சொன்னீர்களே!
இப்போது
என்ன சொல்கிறீர்கள்
என்றேன்.
தமிழாசிரியர்
தயங்காமல் பேசினார்;
'இப்போதும்
அதையேதான் சொல்கிறேன்'
என்று.
நன்றி '(நிஜகோவிந்தம்)- கவிஞர் வாலி .