ad

Sunday, August 15, 2010

நிச்சயம் வெற்றி உங்கள் பக்கம்.

நங்கள் எங்கள் வாழ்க்கையிலே எங்களை அறியாமலே  எவ்வளவோ தவறுகள் செய்திருப்போம், அதே போல பல்வேறு காரணங்களுக்காக   பல்வேறு சந்தர்பங்களில் துவண்டு போய் மனமுடைந்திருப்போம் அந்த சந்தர்பங்களில் சில மனிதர்கள் மூலமாக நமக்கு ஆறுதல் வார்த்தைகள் அல்லது நம்பிக்கை தரும் வசனங்களை  கேட்டிருப்போம்.இவற்றை  தவிர சில நூல்கள் எங்களை உற்சாக படுத்தி நல்வழி படுத்தி இருக்கும் ,


அந்த வகையில்  எனது  வாழ்க்கையில்  சந்தித்த சில  வைர வரிகள் சிலவற்றை இங்கே பதிவிடுகிறேன், நிச்சயமாக இந்த வரிகள் உங்கள் வாழ்க்கையிலும் ஏதாவது சாதகமான மாற்றங்களை ஏற்ப்படுத்தினால் எனக்கு மட்டில்லா மகிழ்ச்சியாக இருக்கும். படித்து பாருங்கள்.
======================================================
  • வெற்றி உங்கள்  தலைக்குச் செல்ல வேண்டாம், தோல்வி உங்கள் இதயத்துக்குச் செல்ல வேண்டாம்.
  • எவன் ஒருவன்  கடவுளிடமிருந்து காலையில் விலகி ஒடுகிறானோ , அவனால் நாள் பூராகவும் கடவுளை உணர முடிவதில்லை.
  • நாளைக்கு நான் வாழ்வேன் என்று முட்டாள்கள் தான் சொல்லுவார்கள். உண்மையில் இன்று என்பதே தாமதம்மனதாகும் . புத்திசாலிகள் நேற்றே வாழ தொடங்கியிருப்பார்கள்.
  • நற்பண்புகள்  தேனீக்களை  போல  ஒவ்வொரு  மலரிலிருந்தும் தேனைச்க் சேகரிக்கும் , தீய பண்புகள் சிலந்தியைப்போல இனிமையான மலரிலிருந்தும் கூட விசத்தை மட்டுமே உறிஞ்சும். 



  • ஒரு வாலிபன் நேர்மையாக உழைக்காமலேயே பணத்தை அடைவது எப்படி என்று எந்த கணத்தில் உட்கார்ந்து யோசிக்க தொடங்குகிறானோ ,அந்தக் கணத்தில் அவனுடைய இருண்ட வாழ்கை ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம்.



    • எதுவுமே செய்யாமல் சும்மா இருப்பவன் மட்டும் சோம்பேறியல்ல .தன்னால் முடிந்தும் இன்னமும் நல்ல வேலையைச்ச் செய்யாமல் இருப்பவனும் சோம்பேறிதான்.



    • கோபத்துடன் இருக்கும் போது பேசுங்கள் , அப்போதுதான் நீங்கள் வாழ்நாள் முழுவதும் வருத்தப்படும் படியான பேச்சைப் பேசியிருப்பீர்கள்.



    • ஒரு மனிதன் தவறு செய்துவிட்டு ,அதை ஒப்புக்கொள்ள வேண்டாம் என்று முடிவு  செய்து  விட்டால்  உடனே  கோபப்பட தொடக்கி விடுவான். 



    • சரியான விசயங்களை சரியான சமயத்தில் பேசுவது மட்டுமே சிறந்த பேச்சு ஆகாது , உணர்ச்சிவச படக்கூடிய தருணங்களிலும் கூட பேச கூடாததைப் பேசாமல் விட்டு விடுவதும் சிறந்த பேச்சு ஆகும். 



    • யார் நிறைய பேசுகிறார்களோ அவர்கள் அவர்கள் குறைவாகவே யோசிக்கிறார்கள். 



    • பரிசுப்பொருட்களை  மட்டுமே கொடுத்து  நட்பை  விலைக்கு  வாங்காதே . பரிசு பொருட்கள் தீர்ந்து போனவுடன் அவர்களது அன்பும் காணாமல் போய்விடும். 



    • மகத்தான வாய்ப்புக்கள் எல்லோருக்குமே வருகின்றன , ஆனால் அவற்றைச்க் சாதாரண மனிதர்களால் கண்டு கொள்ள முடிவதில்லை. 



    • உங்களது எதிகள் சொல்வதைக் கவனியுங்கள் அவர்களே உங்களது தவறுகளைச்  சரியாக கவனித்துச் சொல்ல கூடியவர்கள். 



    •  மற்றவர்கள் நம்மைப் பாராட்டுவது நாம் இப்போது எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை கட்ட்ருக்கொள்ள அல்ல .எதிர்காலத்தில் எந்த நிலைக்கு உயர வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான். 

    • ஒரு  இளைஞன் தன்னை தான் உருவாக்கி கொள்வதற்கான விதிகள்:

                1.மிக குறைவாக பேச வேண்டும்
                2.அதிகமாக கவனித்து கேட்க வேண்டும்
                3.நிறைய பேர்களின் மத்தியில் இருக்கும் போது  குறைவாகவே           தமது  கருத்துக்களை பிரதி பலிக்க வேண்டும் .
                4.தனது அபிப்பிராயங்களை குறைத்து அடுத்தவர்களுடைய  கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.    



    • தனக்கு நல்லவற்றை செய்துகொள்ளும் ஒருவனை யாரும் சுயநலம் பிடித்தவன் என்று யாரும் சொல்வதில் .மற்றவர்களின் நலத்தை புறக்கணிப்பவனையே சுயநலம் பிடித்தவன் என்று சொல்கின்றோம்.  



    • ஒரு மனிதன் விழாமலே வாழ்த்தான் என்பது பெருமையல்ல , விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை. 


    நீ இறக்கும் போது உனக்காக அழக்கூடியவர்களை உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்.