ad

Wednesday, September 30, 2009

சுடச் சுட........


நீண்ட நாட்களாக நம்ம கவிதைகளை (சுட்டதுதான்) காணவில்லையே என்றவர்களுக்கு இப்பதான் சுடச் சுட சுட்டு சில கவிதைகள் இதோ............
சுடுவதற்கு ஏற்கனவே சுட்டு வைத்தவர்களுக்கு ரொம்ப நன்றிகள்.
===================

காதல் என்பது
நம் வசத்தில் இல்லை
அது ஒரு வினோதமான நெருப்பு !
பற்ற வைத்தால் பற்றாது
அணைத்தால் அணையாது !
=======================
அவளை ஒரு கண நேரம்
மறந்து விட்டேன்
இறைவா! இந்த பாவத்தை
மன்னித்து விடு.
=============
என் காதலி
பிரிய வேண்டும என்று
பிரார்த்திக்க போகிறேன்
ஏனென்றால்
என் பிரார்த்தனை
எப்போதுமே நிறைவேறுவதில்லை.

======================
காதலில்,
வாழ்வுக்கும் சாவுக்கும்
வித்தியாசமில்லை,
யாரால்
என் உயிர் போகிறதோ
அவளை பார்த்துதான்
உயிர் வாழ்கிறேன்.
=======================
மலர்வனம் பற்றியோ
மதுவை பற்றியோ
பேச்சு வந்தால்
காதலியின் பெயர்
உதட்டில் வந்து விடுகிறது .
========================
இருண்டு போவதுதான்
என் விதி என்றால் !
அவள் கூந்தலாகவோ மச்சமாகவோ
நான் ஆகியிருக்க கூடாதா?!.
====================
அழைப்பதுமில்லை
கதவை தட்டுவதுமில்லை
அவள் நினைவு பெரிய கர்வத்தோடு
இதயத்தில் நுழைகிறது.....!

======================
கவிதைகளை செதுக்கிய சிற்பிகளுக்கு மறக்காமல் நன்றிகளை சொல்லிடுவோமா?.

33 comments:

யோ வொய்ஸ் (யோகா) said...

காதல் வந்திருச்சி ஆசையில் ஓடி வந்தேன்..

க.பாலாசி said...

//என் காதலி
பிரிய வேண்டும என்று
பிரார்த்திக்க போகிறேன்
ஏனென்றால்
என் பிரார்த்தனை
எப்போதுமே நிறைவேறுவதில்லை.//

அருமையான கவிதை...

கடைசி கவிதையும் சூப்பர்...நண்பா....எங்கிருந்து சுட்டீங்க...இதயத்திலிருந்தா?

Prapa said...

// யோ வாய்ஸ் (யோகா) said...
காதல் வந்திருச்சி ஆசையில் ஓடி வந்தேன்..//


வந்திருச்சா .....ஓகே ஓகே.... கலக்குங்க....

Prapa said...

// க.பாலாஜி said...
அருமையான கவிதை...

கடைசி கவிதையும் சூப்பர்...நண்பா....எங்கிருந்து சுட்டீங்க...இதயத்திலிருந்தா?

ஐயோ ஐயோ......
இதயத்திலிருந்தா...!!!

வந்தியத்தேவன் said...

காதலா? ச்சீ நான் பச்சிளம் பாலகன்

Prapa said...

// வந்தியத்தேவன் said...
காதலா? ச்சீ நான் பச்சிளம் பாலகன்//


நாங்க நம்பிட்டோம்.......
milk bottle வருது....!!!!

Kala said...

ஹலோ!ஹலோ!! சுகமா?
பொண்ணுங்க அடுப்பங்கரையில படுகின்ற சூடு
பத்தாதென்று நீங்களும் தேடித்தேடி சுட்டது
பெண்களைத்தான? இருக்கட்டும்!ஓடஓட...சூடு

வைக்க....வத்தி வைக்கின்றேன் உங்க.......

Prapa said...

// Kala said...
ஹலோ!ஹலோ!! சுகமா?
பொண்ணுங்க அடுப்பங்கரையில படுகின்ற சூடு
பத்தாதென்று நீங்களும் தேடித்தேடி சுட்டது
பெண்களைத்தான? இருக்கட்டும்!ஓடஓட...சூடு

வைக்க....வத்தி வைக்கின்றேன் உங்க.......
//
அட கடவுளே ஆரம்பிச்சுட்டாங்க...........
Escapuda prapa...
நல்ல சுகம் .

வால்பையன் said...

//அவளை ஒரு கண நேரம்
மறந்து விட்டேன்
இறைவா! இந்த பாவத்தை
மன்னித்து விடு..//

ஓ இறைவனுக்கு இதுதான் வேலையா!?.

Prapa said...

எல்லாம் ஒரு build up தானே தல , இதல்லாம் கண்டுக்கப்படாது....

Sinthu said...

காதல் என்றால் காதலனை விடக் காதலி அதிகம் வருவது ஏன்?
கவிதித் தொகுப்பு அருமை..

Prapa said...

// Sinthu said...
காதல் என்றால் காதலனை விடக் காதலி அதிகம் வருவது ஏன்?
கவிதித் தொகுப்பு அருமை..//

என்ன செய்றது வருதே......

ARV Loshan said...

நல்லதொரு தொகுப்பு பிரபா..
கவிதை அதுவும் காதல் கவிதைகள் தேடுகிறீர்கள் என்றால்.. தேடியதொன்று கிடைத்துவிட்டது என்று அர்த்தமா? ;)

வாழ்த்துக்கள்..

best for me..
அழைப்பதுமில்லை
கதவை தட்டுவதுமில்லை
அவள் நினைவு பெரிய கர்வத்தோடு
இதயத்தில் நுழைகிறது.....!

Menaga Sathia said...

கவிதைத் தொகுப்பு நல்லாயிருக்கு ப்ரபா!!

விரும்பி said...

சிந்தனையில் சுட்டவற்றை
சுவைபட அடுக்கி
சுடச்சுட தந்தது தனியழகு
சுவைபட சுட்டதை சுவைத்ததில்
சுவையாக உள்ளது - காதல்
ம்....ம்
கணக்க உளறியிட்டனோ!
என்றாலும் அருமை

விரும்பி said...

சிந்தனையில் சுட்டவற்றை
சுவைபட அடுக்கி
சுடச்சுட தந்தது தனியழகு
சுவைபட சுட்டதை சுவைத்ததில்
சுவையாக உள்ளது - காதல்
ம்....ம்
கணக்க உளறியிட்டனோ!
என்றாலும் அருமை

Prapa said...

// LOSHAN said...
நல்லதொரு தொகுப்பு பிரபா..
கவிதை அதுவும் காதல் கவிதைகள் தேடுகிறீர்கள் என்றால்.. தேடியதொன்று கிடைத்துவிட்டது என்று அர்த்தமா? ;)//

"நான் இப்போ ஊரை சுற்றும் காற்று.......(பாடல் ஞாபக இருக்குதானே..)

எனக்கும் ரொம்ப பிடிச்சது..
எல்லோருக்கும் பிடிப்பது மகிழ்ச்சி.

Prapa said...

// Mrs.Menagasathia said...
கவிதைத் தொகுப்பு நல்லாயிருக்கு ப்ரபா!!//


ரொம்ப நன்றி, உங்கள் வருகையால் வனப்பாகிறது என் வலைப்பூ...
அடிக்கடி வாங்க.

Prapa said...

// விரும்பி said...
சிந்தனையில் சுட்டவற்றை
சுவைபட அடுக்கி
சுடச்சுட தந்தது தனியழகு
சுவைபட சுட்டதை சுவைத்ததில்
சுவையாக உள்ளது - காதல்
ம்....ம்
கணக்க உளறியிட்டனோ!
என்றாலும் அருமை//

ரொம்ப சூடாக இருக்கு....
விரும்பி....வாங்க.

Admin said...

நல்ல தொகுப்பு பிரபா நீங்களும் காதலில் விழுந்து............... என்று நினைக்கிறேன்.

Unknown said...

அடடா...
நல்லா சுட்டிருக்கிறீங்களே...

எங்கட வீட்ட தோசை சுடுற வேலை இருக்கு... வாறீங்களா?

Prapa said...

// சந்ரு said...
நல்ல தொகுப்பு பிரபா நீங்களும் காதலில் விழுந்து............... என்று நினைக்கிறேன்.//


விழுந்து அடி பட்டதில் பெரிய காயம் , HOSPITALக்கு போய்
இப்பதான் வந்தேன்..........

Prapa said...

// கனககோபி said...
அடடா...
நல்லா சுட்டிருக்கிறீங்களே...

எங்கட வீட்ட தோசை சுடுற வேலை இருக்கு... வாறீங்களா?//

ஐயோ ஜாலி................ உடனே வாறன் ..
சுடச் சுட சுட்டு தாரேன்.

jeyamee said...

ரொம்பவும் அழகான கவிதைகளைத்தான்
சுட்டிருக்கிறீங்க‌.
"அழைப்பதுமில்லை
கதவை தட்டுவதுமில்லை
அவள் நினைவு பெரிய கர்வத்தோடு
இதயத்தில் நுழைகிறது.....!"
மிகவும் அழகான வரிகள்

அன்புடன் அருணா said...

அடடா...
நல்லாவே சுட்டிருக்கிறீங்களே...

Prapa said...

// jeyamee said...
ரொம்பவும் அழகான கவிதைகளைத்தான்
சுட்டிருக்கிறீங்க‌.
மிகவும் அழகான வரிகள்.

இதுதான் இதுதான் தேவை,,,, இப்படி பயப்படாமல் உண்மைய சொல்லவேணும்.....
ரொம்ப நன்றிங்க....

Prapa said...

// அன்புடன் அருணா said...
அடடா...
நல்லாவே சுட்டிருக்கிறீங்களே...//

ரொம்ப நாளாக தேடி தேடி சுட்டதுங்க.....

நிலாமதி said...

தேடித் தேடி சுட்டு இருக்கிறீங்க கவிதைகள் நன்றாக் இருக்கிறது ..முன் ஏற்பாடாக வாழ்த்துக்கள்சொல்லி வைக்கிறேன்.

Prapa said...

//நிலாமதி said...
தேடித் தேடி சுட்டு இருக்கிறீங்க கவிதைகள் நன்றாக் இருக்கிறது ..முன் ஏற்பாடாக வாழ்த்துக்கள்சொல்லி வைக்கிறேன்.//


எதுக்கு இந்த முன் ஏற்பாடு.......... ஹையோ ஹையோ.....
நாங்கெல்லாம் ரொம்ப தெளிவாக இருக்கிறோம் அக்கா.

தமிழ் அஞ்சல் said...

சுட்ட பழம் சுவை கூடியதுதான்!

Prapa said...

//திருப்பூர் மணி Tirupur mani said...
சுட்ட பழம் சுவை கூடியதுதான்!//


சுடுகிறதா மணி, வருகைக்கு ரொம்ப நன்றி , அடிக்கடிவாங்க... சுவைக்கலாம்.

கவிகவிதன் கவிதைகள் said...

என் காதலி
பிரிய வேண்டும என்று
பிரார்த்திக்க போகிறேன்
ஏனென்றால்
என் பிரார்த்தனை
எப்போதுமே நிறைவேறுவதில்லை.

migavum kavarndha varigal....

vaalththukkal !

Anonymous said...

Ealla Kavithai varikalum M.Metha'dda erunthu Suddathuthane? Unmaiya sollunka but Nice & thank u.tc