ad

Sunday, July 12, 2009

எது சுத்தமானது??/


இங்கிலாந்தின் பெரும் தலைவரான செர்சிலும் முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் ராதாகிரிஷ்ணனும் ஒரு விருந்துக்கு சென்றார்களாம் ,

வழமைபோல சேர்சில் கரண்டியால் சாப்பிடத்தொடங்கினார் ,

டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களோ தனது கைகளை சுத்தமாக் கழுவிய பின்னர் சாப்பிடதொடங்கியிருக்கிறார்....

இத்தனை அவதானித்த சேர்சில் " என்ன இது???.... இப்படியா சாப்பிடுகிறீர்கள் !!!

கரண்டியால் சாப்பிடுவதுதானே சிறந்தது மட்டுமல்லாது சுகாதாரமானது , கையால் சாப்பிடுவது தவறு " என்றிருக்கிறார்.

இதைகேட்டு சாப்பிட்டு முடித்த ராதாகிருஷ்ணன் அவர்கள் புன்சிரிப்புடன் செர்சிலிடம் " உலகத்திலே கையால் சாப்பிடுவதுதான் சுத்தமானது ,காரணம் ,இதை வேறு யாரும் உபயோகிக்க முடியாதே ".....என்றாராம் .
இதைகேட்ட செர்சிலும் பதிலுக்கு புன்னகை செய்தாராம்.

நீங்க சொல்லுங்க எது சுத்தமானது ???????????


Saturday, July 11, 2009

கிரிக்கெட்டில் புதிய உபகரணங்கள்.....

தலைப்பைபார்த்து அவசர அவசரமாக ஓடி வந்த நண்பர்களே கொஞ்சம் அவசர படாமல் நிதானமாக நின்று வாசிங்க இது நம்ம வழமையான "மொக்க" பதிவுதான்.


அது வேறு ஒன்னுமில்லீங்க .... அடியேன் எப்ப கிரிக்கெட் விளையாட போனாலும் நம்ம விக்கெட் bowled முறையில் தான் அவுட் ஆகிறது வழக்கம் இத்தனை எவ்வாறு தடுப்பது என்ற பல நாள் ஜோசனைக்கு பிறகு உதித்ததுதான் இந்த ஞானம்....!!!!!! அதாவது விக்கெட் விழாத மாதிரி விக்கெட்டை நாட்டினால் சரிதானே !!!!!!! அதுதான் அடியேன் இப்படியான விக்கெட் ஒன்றை தெரிவு செய்தேன் . ( கீழே உள்ள படத்தில் இருப்பது அடியேன் தான் ,இப்ப சொல்லுங்க நம்ம விக்கெட்டை எந்த பந்துவீச்சால்வீழ்த்த முடியும்).



இது தவிர இன்னும் சில நன்மைகளும் உண்டு..........
அதிக பாரமில்லாமல் தயாரிக்கப்பட்ட "மட்டை"இதனால் கஷ்டப்படாமல் அதிக தூரம் தூக்கி ஓடலாம்.
அத்தோடு உடல் குளிர்ச்சியாக இருக்க ஆடைகளும் குறைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் தூசுகளை தடுப்பதற்காக "பிளாஸ்டிக் முன் பாதுகாப்பு பகுதியை கொண்ட தலைகவசம் .
இப்படியான ஏகப்பட்ட நன்மைகளோடு நம்ம புதிய கண்டு பிடிப்பு !!!!!!!!!!

Thursday, July 9, 2009

ஆண்டு நிறைவுகளை கொண்டாடுவோமா?


ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என்பார்கள்.....போகட்டுமே வயதுதானே !என்பவர்களும் இருக்கிறார்கள் , " ஐயோ இன்னுமொரு வருடம் ஓடி போயிடுச்சா " இந்த வருடத்திலாவது ஏதாவது சாதிக்க வேண்டும் "என்று உறுதி மொழி எடுத்துகொள்பவர்களும் இருக்கிறார்கள்.
மேல சும்மா நிகழ்ச்சி முன்னோட்டம்.......

இனி விசயத்துக்கு வருவோம்.
வழமையாக நாங்கள் ஒவ்வொரு வருட நிறைவையும் ஒவ்வோர் பெயர் கொண்டு அழைப்பது வழக்கம். அதில அனேகமானது எல்லோருக்கும் தெரிந்த...

1 -ஆண்டு விழா
25 -வெள்ளி விழா
50- பொன் விழா
100-நூற்றாண்டு விழா .
அனால் ஒவ்வொரு ஆண்டு நிறைவிற்கும் ஒவ்வோர் பெயருண்டு அதைத்தான் இங்கே நாங்கள் அறிந்து கொள்ள போகிறோம்.

இடையிடையே இடைவெளி இருக்கும் தெரிந்தவர்கள் அதனை கண்டு பிடித்து சொல்லுங்கள் இல்லையென்றால் பின்னூட்டத்தில் பார்க்கலாம்.

1வது ஆண்டு நிறைவில் நிறைவில் -காகித விழா
2-பருத்தி விழா
3-தோல் விழா
4-மலர் மற்றும் பழ விழா
5-மர விழா
6-சர்க்கரை /கற்கண்டு/இரும்பு விழா
7-கம்பளி/செம்பு விழா
8-மண் கலச விழா
10-.....................?
11-எக்கு விழா
12-லினன் விழா
13-பின்னால் விழா
14-தந்த விழா
15-.............?
20-பீங்கான் விழா
30-முத்து விழா
40-மாணிக்க விழா
இன்னும் ஏதாவது இருந்தால் சொல்லுங்க.....


Tuesday, July 7, 2009

இவரு மனுசன்யா..


வாழ்கை என்பது எனக்கு ஒரு குறுங்கால
மெழுகுதிரியன்று .
அது நான் தற்போது ஏற்றி நிற்கும்
அழகிய தீப்பந்தம் .
எதிர்கால சந்ததியினருக்கு இத்தனை தரு
முன்னர் முடிந்தளவு பிரகாசத்துடன்
எரிய செய்வது என் விருப்பம்.
--------------------------- ஜோர்ஜ் பெர்நாட்ஸவ் ---------------
இந்த உணர்வு எல்லோருக்கும் இருக்கனுமா இல்லையா??/

இதுதான் கிரிக்கெட்...



சாதிசிட்டாங்கையா நம்ம பசங்க ,,,,,, பாகிஸ்தானுக்கெதிராக காலியில் வைத்து .....


மேலதிக தகவல்களை முழுமையாக நம்ம லோஷன் இப்ப டைப் பண்ணிகொண்டிருக்காரு .................

எனக்கு எப்போது பிறந்த தினம்?? சொல்லுங்க please


இரண்டு நாட்களுக்கு முன்பு எனது வயது 25.
அடுத்த வருடம் எனது 28 வது பிறந்தநாள் வருகிறது ,எனது பிறந்தநாள் ஒரு நாள் மட்டும்தான் வருகிறது ,எனில் நான் பிறந்த திகதி என்ன ?

(கண்டுபிடிச்சா சொல்லுங்க... விளக்கம் தந்தால் இன்னும் நல்லது )

Sunday, July 5, 2009

"சொறி"




கடித்த நுளம்பு ......
சொல்லிவிட்டு போனது
'சொறி'.

எங்கேயோ கேட்டது, இன்னும் மனசில நிக்குது.

Saturday, July 4, 2009

முத்திரை கேள்விகள்.


இன்று இரண்டாவது பதிவு......
இதில் இரண்டு கேள்விகள் .
பதிலளியுங்கள் பார்க்கலாம்.!!!

1 வது,

உலகில் எந்த நாட்டில் வெளிநாட்டவர்க்கும்,உள்நாட்டவர்க்கும் வெவ்வேறான முத்திரைகள் வெளியிடப்பட்டது???


2 வது.

தமிழ்.ஆங்கிலம்,சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் பொறிக்கப்பட்ட முதல் முத்திரை எது?


விடைகள் பின்னூட்டத்தில்.

"புத்திமான் பலவான் "

உலகத்தில் எவ்வளவோ வித்தியாசமான அதேவேளை சுவாரஸ்யமான நிகழ்வுகள் காலாகாலமாக நடந்துதான் வந்திருக்கிறது , அதுபோன்று சுவாரஸ்யமான விடயமொன்றை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

1956 melbourn olympic போட்டியில் பழுதூக்கும் போட்டியில் அமெரிக்காவின் penton வேய்க்ட் charles winsi என்பவர் பான்குபர்ர்ர்ரியிருக்கின்ற்றார்.
போட்டி தொடங்குவதற்கு ,15 நிமிடங்களுக்கு தனது உடல் எடையை பார்த்த இவர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார் காரணம் அவரது எடை 200 g கூடுதலாக இருந்திருக்கிறது.
இதனால் தனது உடல் எடையை குறைக்க நினைத்த நம்ம winsi க்கு அற்புதமான யோசனை தோன்றியிருக்கிறது , இதன் படி தனது தலை முடியை மொட்டையடித்து எடையை குறைத்துகொண்டாராம் .அதன் பின் போட்டியில் பங்குபற்றி 342.5kg எடையை தூக்கி உலக சாதனை படைத்திருந்தாராம்.

இப்ப சொல்லுங்க "புத்திமான் பலவான்" இல்லையா????/

Thursday, July 2, 2009

கண்ணில் பட்டதில் சுட்டது.....


கண்ணில் பட்டதில் ,மனசை தொட்டதை சுட்டுவிட்டேன் ...........
சுட்டது கவிஞர் பார்வதி விஜயின் "18 வயசுல..." கவிதை தொகுப்பிலிருந்து....
இப்ப புரிஞ்சிருக்குமே என்னத்த சுட்டோமின்னு.

கடிதத்தில் எச்சில் தொட்டு நீ
ஒட்டிய தபால் தலை
கடிதத்தில் ஒட்டாது
தேன் எப்படி பசையாகும்!

பாகற்காய் கொடியில்-நீ
காய போட்டிருந்த
பாவாடை தாவணியால்
பலகார பட்டியலில் -நான்
பாகட்காயையும் சேர்த்து கொண்டேன்.
தூக்கனான் குருவிகூட்டை
ஆச்சர்யமாய் பார்த்தாய்
உள்ளிருந்த குருவிகள்
உன்னை ஆச்சரியமாய் பார்த்தன ....
அதிசயங்கள் ஒன்றை யொன்று பார்த்து
அதிசயித்துக்கொள்வது
அதிசயமில்லைதானே !
கொலைகருவிகளின் பட்டியலில்
நீ கால்களில் அணிந்திருக்கும்
கொலுசையும் சேர்த்துக்கொள்ளலாம் .

ரொம்ப நேரம்
கண்ணாடி பார்த்துகொண்டிருப்பாய்
உன்னை அடிக்கடி பார்க்கும் உனக்கே
உன்னை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போல்
உள்ளதென்றால்
எப்போதாவது பார்க்கும் எனக்கு
எப்படியிருக்கும்.

சின்ன வயசில் நிறைய
சிலேட்டு குச்சிகளை முழுங்குவேனாம்!
இருபது வயதுகளில்
இப்படியெல்லாம் உன்னைப்பற்றி
எழுதத்தானோ ?

உங்களுக்கும் புடிச்சிருக்கா ?????????