ad

Tuesday, July 28, 2009

பதக்கம் வேணுமா??? வாங்க ஜெயிக்கலாம்.


வாழ்கை விளையாட்டு

வாழ்க்கை ஒரு வழுக்கு மரம்!

சில பேர் ஏறுவார்

பல பேர் சறுக்குவார்.


வாழ்க்கை ஒரு நீச்சல் தடாகம்

சில பேர் நீந்துவார்

பல பேர் மூழ்குவார்.


வாழ்க்கை ஒரு தடைதாண்டி ஓட்டம்

சில பேர் ஓடுவார்

பல பேர் இடறுவார்.


வாழ்க்கை ஒரு மல்யுத்தம்

சில பேர் மோதுவார்

பல பேர் விலகுவார்.


வாழ்க்கை ஒரு மரதன் ஓட்டம்

சில பேர் ஓடி முடிப்பார்

பல பேர் ஓடி ஒழிப்பார் .


நன்றி- ஸல்மாநுல் ஹரீஸ்-வாழைச்சேனை

10 comments:

தேவன் மாயம் said...

வாழ்க்கை ஒரு வழுக்கு மரம்!

சில பேர் ஏறுவார்

பல பேர் சறுக்குவார்.//

உண்மைதான்.... எல்லோரும் வாழ்ந்துதானே ஆகணும்!!

Unknown said...

//வாழ்க்கை ஒரு நீச்சல் தடாகம்

சில பேர் நீந்துவார்

பல பேர் மூழ்குவார்.

உண்மைதான்.... எல்லோரும் வாழ்ந்துதானே ஆகணும்!!//

ரொம்ப பிடிச்ச வரிகள்... நீந்தி கரையேருவோம்.

வால்பையன் said...

வாழ்க்கை ஒரு ப்ளாக்!

சிலர் பதிவு எழுதுவார்!
சிலர் பின்னூட்டம் இடுவார்!

Admin said...

நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி பிரபா...

Admin said...

//வால்பையன் said...
வாழ்க்கை ஒரு ப்ளாக்!

சிலர் பதிவு எழுதுவார்!
சிலர் பின்னூட்டம் இடுவார்!//


நல்ல தத்துவம்...

Admin said...

உங்களுக்குரிய பரிசு http://shanthru.blogspot.com/2009/07/blog-post_28.html இங்கே இருக்கிறது வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..

Prapa said...

//உண்மைதான்.... எல்லோரும் வாழ்ந்துதானே ஆகணும்!!//

உண்மைதான் ஐயா என்ன செய்றது,,,,,,

Prapa said...

Mrs.FaizaCader சொன்னது,,,,
//உண்மைதான்.... எல்லோரும் வாழ்ந்துதானே ஆகணும்!!//

ரொம்ப பிடிச்ச வரிகள்... நீந்தி கரையேருவோம்//

கரை சேர்ந்தால் சரி,,,, முதன் முதலாக வந்திருக்கிறீர்கள் உங்களுக்கு அன்பு பரிசு ஒன்று காத்திருக்கிறது....எதிர்பாத்திருங்கள்.

Prapa said...

vaalpaiyan,,,,
//சிலர் பதிவு எழுதுவார்!
சிலர் பின்னூட்டம் இடுவார்!//


என்னவொரு தத்துவமையா,,,,?????

Prapa said...

santhru,,,,,,
நன்றி சந்ரு, இதோ வந்துவிட்டேன்...