ad

Saturday, September 19, 2009

என்னாத்த சொல்லுறது இத பற்றி.........

காதல்,அழகு,கடவுள்,பணம் ........................

"SShathiesh said...
உங்கள் ஒரு தொடர் விளையாட்டுக்கு அழைத்துள்ளேன். வந்து விளையாடுங்கள்."..............


பிரபா-பிறந்தநாளுக்கு பிறகு மனிதர் சந்தோசமாக இருக்கின்றார். விடலாமா. இதோ அஞ்சல் கோலை கொடுத்துவிட்டேன். எப்புடி?""

இதெல்லாம் நண்பர் சதீஷிடமிருந்து வந்த ஆப்புக்கள் மன்னிக்கவும் அழைப்புக்கள்.
மூன்று மூணுக்கும் ஒரு நான்குக்கும் இனி நம்ம விளக்கங்களை பார்க்கலாமா?
என்ன தெளிவாக
குழப்புறேனா.....

இப்பிடி சூடுங்க
காதல்- 3 எழுத்து அழகு- 3 எழுத்து பணம் - 3 எழுத்து கடவுள்- 4 .
ஓகே இனி விசயத்துக்கு வருவோம் வாங்க....

காதல்.-
"காதல் ஒரு
எளிமையான பாடம்தான்
ஆனால் அதில் - பல பேர்
தோற்று போகிறார்கள்."
இது ஒரு கவிஞனின் பார்வையில் காதல் .

ஆனால் நமக்கு இன்னமும் உத்தியோக பூர்வமாக பூர்வமாக காதல் வரவில்லை என்றால் ,,,, (அடி உதை பின்னிடுவீங்க எனக்கு தெரியும் ...)
அது வேற கதை அதவிடுங்க...
இப்போதைய "காதலர்கள்"... சிலர்
இந்த காதலை சகிக்க முடியாத அளவுக்கு கொண்டு வந்து சேர்த்திருப்பது தான் இப்போது பெரியவங்களுக்கு இருக்கின்ற மிகப்பெரிய கவலை..














என்னசெய்றது காதலை காதலிப்போம். அத்தோடு கொஞ்சம் ......
Before & After Marriage (Love Humor & Jokes? )
Before Marriage


He: Yes. At last. It was so hard to wait.
She: Do you want me to leave?
He: NO! Don't even think about it.She: Do you love me?
He: Of course! Over and over!
She: Have you ever cheated on me?
He: NO! Why are you even asking?
She: Will you kiss me?
He: Every chance I get!
She: Will you hit me?
He: Are you crazy! I'm not that kind of person!
She: Can I trust you?
He: Yes.
She: Darling!




After marriage...
Simply read from bottom to top.



==============================



அழகு...
இதுவரைக்கும் இந்த அழகு ஆண்பாலா ? பெண் பாலா ?என்று எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. இருந்தாலும் அழகு என்றால் என்ன ? என்றால் எல்லோரிடமும் ஒவ்வொரு வித்தியாசமான பதில்கள் இருக்கும் என நம்புகிறேன்.
எமது கண்ணுக்கும் மனதுக்கும் இதம் சேர்கின்ற விசயங்களை அழகானவை என்று சொல்லலாமா? இருக்கலாம். சின்ன வயசிலிருந்து எனக்கு இயற்கையின் மேல் ஓர் அலாதி பிரியம் எனவே தான் கீழே உள்ளவைகளையும் நான் அழகானவை பட்டியலில் சேர்த்துள்ளேன்....













கடவுள் .............




கடவுள் "நம்பிக்கை" இருக்குதோ இல்லையோ அடியேன் காலையில் இவரிடமிருந்து விலகியிருப்பதே இல்லை.....ஆனால் இவர் எப்போதும் நேர்மையான தீர்ப்புகளை வழங்குவதில் கெட்டிக்காரர் ஆனால் இப்போதெல்லாம் இவர் ரொம்ப புசியாகி விட்டாரோ என்னவோ தெரியவில்லை , தீர்ப்புகள் வழங்குவதற்கு கால தாமத மாகிறது .சிலவேளைகளில் "நின்று" வழங்குவாரோ தெரியவில்லை....ஒன்றுமட்டும் உண்மை எல்லோரும் இவருக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதில் ரொம்ப கவனமாக இருப்பவர்களில் அடியேனும் ஒருவன்.
கடவுளிடத்தில் சிலருக்கு நம்பிக்கை இல்லாமல் போகலாம் ,ஆனால் "கடவுள்" மனிதனிடத்தில் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை, என்ற தத்துவத்தை உணர்த்திக்கொண்டே ஒவ்வொரு குழந்தையும் இந்த உலகில் பிறக்கிறது "




பணம்....



காசேதான் கடவுளப்பா ,அந்த கடவுளுக்கும் அது தெரியுமப்பா.....இதுக்கு பிறகு நான் சொல்ல என்ன இருக்கு......
அளவாய் வைத்துக்கொண்டால் அழகாய் இருக்கும் அளவுக்கு மீறினால் அவஸ்தையாய் இருக்கும்.


ஓகே ஓகே.... ஏதோ நம்மால் முடிந்தளவுக்கு தந்திருக்கிறோம் இனி.....நான் மாட்டிக்கொண்டது போல , மாட்டி விடுவது இவர்களை . ( பயப்படாதீங்க இதுதான் தொடர் பதிவு விதி முறை).
வந்து தொடருங்கள்......

லோஷன்

தமிழ்த்துளி (தேவன் மாயம்)

டொன்லி (பதுங்குகுழி )

கலை ராகல

ஞாபகம் இருக்கட்டும் காதல்,அழகு, கடவுள் ,.பணம் .

12 comments:

தேவன் மாயம் said...

காதல்.-
"காதல் ஒரு
எளிமையான பாடம்தான்
ஆனால் அதில் - பல பேர்
தோற்று போகிறார்கள்."
இது ஒரு கவிஞனின் பார்வையில் //

மிகச்சரிதான் !!

தேவன் மாயம் said...

ஒன்றுமட்டும் உண்மை எல்லோரும் இவருக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதில் ரொம்ப கவனமாக இருப்பவர்களில் அடியேனும் ஒருவன்.///

நல்ல பாலிஸி!

Sinthu said...

எப்படி எல்லாம் பண்றீங்கப்பா.... தாங்க முடியல்ல..

சி தயாளன் said...

நன்றி பிரபா...நேரம் கிடைக்கும் பட்சத்தில் பதிவிடுகிறேன் (இப்பவே 3 தொடர் pending ல்)

Ashwinji said...

நன்றி பிரபா,

என் வலைப்பூவை நோட்டமிட்டதிற்கு நன்றி. கடவுள் பற்றிய உங்கள் கோணம் மிக அருமை.

அஷ்வின் ஜி
www.vedantavaibhavam.blogspot.com

Prapa said...

// தேவன் மாயம் said...
ஒன்றுமட்டும் உண்மை எல்லோரும் இவருக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதில் ரொம்ப கவனமாக இருப்பவர்களில் அடியேனும் ஒருவன்.///

நல்ல பாலிஸி!

எல்லாமே உங்க கிட்ட கற்றுக்கொண்டதுதான்..........

Prapa said...

// Sinthu said...
எப்படி எல்லாம் பண்றீங்கப்பா.... தாங்க முடியல்ல..//


எங்களுக்கும் முடியலதான் சிந்து என்ன பண்றது..............

Prapa said...

//
’டொன்’ லீ said...
நன்றி பிரபா...நேரம் கிடைக்கும் பட்சத்தில் பதிவிடுகிறேன் (இப்பவே 3 தொடர் pending ல்)//

ஓகே, நேரம் இருக்கும் போது தொடருங்கள்.....

Prapa said...

// Ashwinji said...
நன்றி பிரபா,

என் வலைப்பூவை நோட்டமிட்டதிற்கு நன்றி. கடவுள் பற்றிய உங்கள் கோணம் மிக அருமை.

அஷ்வின் ஜி
www.vedantavaibhavam.blogspot.com

வருகைக்கு நன்றி, நோட்டம் இல்ல அடிக்கடி அவதானிப்போம்......

வால்பையன் said...

ரைட்டு!

Sinthu said...

என்னத்தை சொல்றது என்று தலைப்பிட்டுவிட்டு
நிறைய சொல்லி இருக்கிறீங்களே, இது நியாயமா?

Prapa said...

// Sinthu said...
என்னத்தை சொல்றது என்று தலைப்பிட்டுவிட்டு
நிறைய சொல்லி இருக்கிறீங்களே, இது நியாயமா?//


எதோ சிந்தையில் உதித்தத சொன்னோமில்ல....