ad

Sunday, May 31, 2009

ஒரு விடுகதை கவிதையாகிறது .

வழமைபோல நம்ம கவிவேந்தர் மூ. மேத்தா அவர்களின் கவிதைகளில் மூழ்கியிருந்த போது "என்னுடைய போதி மரங்கள் " போதித்த கவிதையொன்று உங்களோடு .......

ஒரு விடுகதை கவிதையாகிறது .

கால்களிலே தைக்காமல்
எங்கள்
கண்களிலே தைக்கின்ற
கடிகார முட்களே !
நீங்கள்
காலத்தின் கால்களோ?

! கடிகாரமே !
பேச்சை நிறுத்தாத
பெரிய மனிதனே !
குதிக்கும் உன்னுடைய
கால்களில் ஒன்று ஏன்
குட்டையாய் இருக்கிறது ?

காலங்கள் தோறும்
இருந்து வருகிற
ஏற்றத் தாழ்வை
எடுத்துக் காட்டவோ ?

பாவம்...
படிக்க எழுதப்
பழகாதவன் நீ!
என்றாலும்
சூரியனை பூமி
சுற்றி வருவதையே
சுருக்கெழுத்தில்
குறிப்பெடுக்கின்றாயே!

உழைத்தால் எப்போதும்
உயரலாம் என்பதற்கு
உதாரணம் நீ தானே ?

நீ
காலச்சக்கரவர்த்தியின்
கணக்குப்பிள்ளையோ ?

கைகளில் உன்னைக்
கட்டி வைத்த மனிதர்களை
உன்றன்
கால்களால் விரட்டுகிறாய் !

ஓயாமல் ஒழியாமல்
உழைகின்றாய்
இருந்தாலும்
வசவுகள் மட்டுமே
உனக்கு
வழங்கப்படுகின்றன !

சுருசுப்பானவர்கள்
உன்னை
'அவசரக் குடுக்கை'
என்று அழைக்கிறார்கள்.

சோம்பேறிகளோ
உன்னைத்
'தள்ளுவண்டி' என்று
எள்ளி நகைக்கிறார்கள்.

அதனால் என்ன ...
கடிகாரமே நீ
கவலைப்படாதே!

உன் பெருமை
ஆகாயம் போலவே
அளக்க முடியாதது !

ஏனென்றால்
வானம் கூட
பூமிப்பெண்
கட்டிகொண்டிருக்கும்
கடிகாரம் தான் .

அதில்
சிதறிவரும் முட்கள்தான்
சூரியனும் சந்திரனும்!

2 comments:

Anonymous said...

நல்ல சுகம்....

இரசிகை said...

metha.. methai thaan:)