காஸ்மீர் பகுதியில் பொது மக்களின் நடமாட்டத்துக்கு திறந்துவிடப்படாத ஒரு பகுதியில் ஒரு நாள் அதி காலையில் நடைப்பயிற்சியில் ஈடு பட்ட ஒருவரை கைது செய்த பாதுகாப்பு படை வீரனுக்கும் பயிற்சியில் ஈடுபட்டவருக்கும் இடையில் நடந்தத ஒரு சம்பாசனை .
படை வீரர் :- (பயிற்சியில் ஈடு பட்டவரிடம் ) உங்களை நான் கைது செய்கிறேன் .
பயிற்சியில் ஈடுபடுபவர் :- ஏன் ?
படை வீரர் :- நீங்கள் நட மாட கூடாத, வர கூடாத இடத்துக்குள் பிரவேசித்துள்ளீர்கள் .!!
பயிற்சியில் ஈடுபடுபவர் ஐயோ!! இல்லை இது பற்றி நான் அறிந்திருக்கவில்லை , என்னை மன்னித்து, விட்டு விடுங்கள்.
படை வீரர் :-முடியாது நீங்கள் இந்த நாட்டிற்கு பாதகம் விளைவிக்க கூடிய பயங்கர ஆயுதங்களை வைத்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கிறேன், -
பயிற்சியில் ஈடுபடுபவர்;-ஐயோ !!!அப்பிடி ஒண்ணுமே இல்லை சார்'''!
படை வீரர் :-சரி உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த ஏதாவது ஆவணங்கள் வைத்திருக்குறீர்களா ?
பயிற்சியில் ஈடுபடுபவர்:-இல்லை சார் இந்த நடை பயிற்சிக்கு வரும் போது அதெல்லாம் எடுத்து வருவாங்களா ?
படை வீரர் :-இல்லை,, ஆகவே உங்களை கைது செய்கிறேன்
பயிற்சியில் ஈடுபடுபவர்:-ஐயோ சார் நான் இந்த நாட்டின் 'பாராளுமன்ற உறுப்பினர் ''.
படை வீரர் :-அப்பிடியா அப்பிடியென்றால் உங்கள பாராளும்ற உறுப்பினர் அடையாளத்தை உறுதிப்படுத்தும் அடையாள அட்டையை காண்பியுங்கள் , நான் நம்புகிறேன்.
பயிற்சியில் ஈடுபடுபவர்:-இல்லை சார் அதனையும் நான் கொண்டு வரவில்லை..
படை வீரர் :- உங்களை நான் நம்புவதற்கு எந்த விதமான அடையாளத்தையும் நீங்கள் வைத்திருக்க வில்லை ம்ம் என்ன செய்வது ......???......................சரி , நமது தேசிய கீதத்தை பாடுங்கள்.
பயிற்சியில் ஈடுபடுபவர்:-!!!?????? இல்லை சார் அது வும் தெரியாது ..
படை வீரர் :- ம்ம் இப்பொழுது நம்புகிறேன் நீங்கள் இந்த நாட்டின் பாராளு மன்ற உறுப்பினர் தான். நீங்கள் போகலாம். !!!
******* ?????? !!!!!!! ?????? ******
ஹி ஹி ஹி ஹி.... என்ன கொடுமை சார் இது ???
3 comments:
காஸ்மீரை கோல்பேஸ் என மாற்றினாலும் கரு மாறாது என நினைக்கின்றேன்.
//வந்தியத்தேவன் said...
காஸ்மீரை கோல்பேஸ் என மாற்றினாலும் கரு மாறாது என நினைக்கின்றேன்.//
கரு மாறாது , இங்க இருக்குற எங்க 'உரு' மாறிடுமே பாஸ்...
உண்மை நிலை
Post a Comment