ad

Saturday, September 12, 2009

சந்தோசமாய் சொல்கிறேன்...............

"september 8" இல் ...................................................
உலகத்தில் விடயங்கள் நடந்திருந்தாலும் ஓரிரு தசாப்தங்களுக்கு முன் எனது குடும்பத்திலும் ஒரு மகிழ்ச்சி கரமான நிகழ்வு இடம்பெற்றிருக்கிறது ,

அது வேற ஒன்று மில்லங்க.. அடியேன் இப் பூவுலகில் காலடி பதித்த நாளும் அதுதான் ,இதற்கு முன் அடியேனின் பிறந்தநாள் எப்படியோ போனது அனால் இம்முறை கொஞ்சம் விசேசமாக இருந்தது காரணம் இந்த இணையத்தினூடாக கிடைத்த நண்பர்களின் வாழ்த்துக்கள் ஏராளமாக கிடைத்ததுதான் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வேளையில் ஏராளமான நண்பர்களுக்கு நன்றிகளை சொல்ல வேண்டும் அத்தோடு ஒரு சில நண்பர்களின் வாழ்த்துக்களை சொல்லி மகிழ்ந்த எல்லா நண்பர்களுக்கும் பொதுவான வாழ்த்துக்களை சொன்னாலும் குறிப்பாக .

அன்றைய தினம் அடியேனுக்கு வாழ்த்துக்களை சொன்ன அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகளை சொல்வதோடு வானொலிமூலமாக வாழ்த்துக்களை சொன்ன வெற்றி வானொலியின் முகாமையாளர் லோஷன் அண்ணா மற்றும் தேசிய வானொலியின் அனைத்து சக அறிவிப்பாளர் நண்பர்களுக்கும், பதிவுகள் மூலமாக வாழ்த்துக்களை சிறப்பாக சொன்ன நண்பர்களுக்கும் குறிப்பாக சந்த்ருவின் பக்கம் வாழ்த்துக்களை சொன்னது மட்டுமல்லாமல் "ஊக்கபடுத்தல் விருதும்" தந்து சந்தோஷ படுத்தியது , எனவே நண்பர் சந்த்ருவுக்கும் ,


வாழ்த்துக்களை சொன்ன ஸப்ராஸ், மற்றும் நண்பர் லோகநாதன் ஆகியோருக்கும் , இவர்களது பதிவினூடாகவும் பின்னூட்டத்தில் வாழ்த்துக்களை சொன்ன அனைத்து பதிவுலக பின்னூட்ட எஜமானர்களுக்கும் நன்றிகளை சொல்வதோடு ( தனித்தனியாக பெயர் குறிப்பிட வில்லை கோபிக்க மாட்டீர்கள்...என நம்புகிறேன்).

நிறைய வானொலி நண்பர்கள் தொலைபேசி மூலமாகவும் SMS மூலமாகவும் நேரடியாகவும் வாழ்த்துக்களை தந்தார்கள் அனைவருக்கும் நன்றிகள்.
FACE BOOK இல வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கும் HI5சமூக தளங்களினூடாக வாழ்த்துக்களை தந்த நண்பர்களுக்கும் நன்றிகள் பல கோடி .




இது தவிர அன்றையதினம் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முடியாத நண்பர்கள் கீழே வைத்திருக்கின்ற கேக்கை சாப்பிடலாம் ...... (இது புதுசு.)
அத்தோடு எனக்கு இத்தனை நண்பர்களா? என்று யோசிக்க வைத்து அசத்தி விட்டார்கள் நம்ம நண்பர் கூட்டம்.எனவே மீண்டும் ஒருமுறை எல்லோருக்கும் நன்றிகள் நன்றிகள் நன்றிகள்.






12 comments:

Admin said...

//உலகத்தில் விடயங்கள் நடந்திருந்தாலும் ஓரிரு தசாப்தங்களுக்கு முன் எனது குடும்பத்திலும் ஒரு மகிழ்ச்சி கரமான நிகழ்வு இடம்பெற்றிருக்கிறது ,//



ஆஹா அதென்ன ஓரிரு......... நீங்க கணக்கில கணக்கு விட்டாலும் வயத்துல கணக்கு விடலாமா? நான்கு, ஐந்து தசாப்தங்களுக்கு முன் என்றுதானே வந்திருக்க வேண்டும்.


நீங்க வலைப்பதிவிலும், face book இலும் இரு தசாப்பதங்களுக்கு முன் எடுத்த போட்டோ ஐ போட்டு இருப்பது எனக்கு மட்டும் தானே தெரியும்.

Admin said...

உங்க உண்மையான போட்டோவ அடுத்த பிறந்த நாளுக்கு வெளியிடுறன்.

Prapa said...
This comment has been removed by the author.
Prapa said...

//
சந்ரு said...
உங்க உண்மையான போட்டோவ அடுத்த பிறந்த நாளுக்கு வெளியிடுறன்.//


ஏனையா இந்த கொலை வெறி ???
நம்பாதீங்க சந்ரு சொல்றத நம்பாதீங்க...
நானே 17 முடிஞ்சு 18 வயசாக போயிட்டதே என்று கவலையில இருக்கன் , நல்லா கெளப்புறாங்கையா பீதிய!

Sinthu said...

Sorry for late anna, Wish your very late Happy Birthday wishes....

ஹேமா said...

என்ன பிரபா...இப்பிடி படத்தில கேக் தந்து ஏமாத்திப் போட்டீங்கள்.அடுத்த வருஷமாவது பாக்கலாம்.சந்தோஷமா இருங்கோ.

யோ வொய்ஸ் (யோகா) said...

நானே 17 முடிஞ்சு 18 வயசாக போயிட்டதே என்று கவலையில இருக்கன் , //

அப்ப சந்ரு வேற மாதிரி இல்ல சொன்னாரு...

வால்பையன் said...

எனக்கு இன்னும் கேக் வரலையே!

Muruganandan M.K. said...

காலம் தாழ்ந்தாலும் எனது பிறந்த நாள் வாழ்த்தக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

கேக் சாப்பிட்டேன் சுவையோ சுவை!

நன்றி

SShathiesh-சதீஷ். said...

உங்கள் ஒரு தொடர் விளையாட்டுக்கு அழைத்துள்ளேன். வந்து விளையாடுங்கள்.

Unknown said...

வாழ்த்துக்கள் நண்பரே !

நமக்காக ஒரு பாட்டைப்போடுங்க உங்க நிகழ்ச்சியில் .

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...
This comment has been removed by the author.