ad

Wednesday, July 29, 2009

இவர் அவரா ??? உங்களுக்கு ஞாபகம் இருக்கா ??

மாப்பு பாப்ப்மையா உமக்க எனக்கா என்று !
நெஞ்சில தில் இருந்தா வா பாக்கலாம்....
தம்பி வுஷ் உம்மட பிரச்சனை தாங்க முடியல ,விரைவாக எதையாவது சொல்லிட்டு போவியா , எனக்கு தலை வலிக்குது ராசா.....
இந்த மீனையே பிடிக்க முடியல இதற்குள்ள நீங்கெல்லாம் நாட்ட பிடிக்க போறீங்களோ....
ஐயோ ஹீ ஹீ ....

Tuesday, July 28, 2009

பதக்கம் வேணுமா??? வாங்க ஜெயிக்கலாம்.


வாழ்கை விளையாட்டு

வாழ்க்கை ஒரு வழுக்கு மரம்!

சில பேர் ஏறுவார்

பல பேர் சறுக்குவார்.


வாழ்க்கை ஒரு நீச்சல் தடாகம்

சில பேர் நீந்துவார்

பல பேர் மூழ்குவார்.


வாழ்க்கை ஒரு தடைதாண்டி ஓட்டம்

சில பேர் ஓடுவார்

பல பேர் இடறுவார்.


வாழ்க்கை ஒரு மல்யுத்தம்

சில பேர் மோதுவார்

பல பேர் விலகுவார்.


வாழ்க்கை ஒரு மரதன் ஓட்டம்

சில பேர் ஓடி முடிப்பார்

பல பேர் ஓடி ஒழிப்பார் .


நன்றி- ஸல்மாநுல் ஹரீஸ்-வாழைச்சேனை

உயர்ந்த உள்ளங்கள்.

யாரு வந்தது முதலில்...??????/
என்ன விட இந்த உலகத்தில் நின்றது யாருமில்ல .......என்குமில்லா.....

யப்பா இத விட எங்காவது பாதுகாப்பான ஹெல்மெட் கிடைக்குமாப்பா !!!!!????
ரொம்ப கூல் இருக்குதையா<<,,,,
மழைக்கால மேகம் ஒன்று "என் வலையில் மாட்டியதே "!
அதற்காகதானே நான் ஸ்கூல் போகவில்லை>>>>>>..ஹீ ஹீ ,,,,,

யார் இந்த கவிஞன்...????


கவிஞன் என்றால்
யாரென கேட்டு
என் மனச்சாட்சி
மல்லுக்கட்டியது!

நான் எழுத்துக்களை செதுக்கும்
சிற்பி என்றும்
உணர்வுகுக்கு
பிரம்மா என்றும் சொன்னேன் !
பேசும் மொழியை
காப்பாற்றும்
காலகிளியும் என்றேன்.

மனச்சாட்சி மறுத்து,,,,,,,
நேரம் தெரியாமல்
சிந்திக்கும்
சிந்தனைப் பித்தன் என்றும்
கண்டதை
எழுதிதள்ளும்
ஞானக் கிறுக்கன் என்றும்
அது சொன்னது!
நான் நிறுத்தி,
இருளிலுள்ள சமூகத்தை
வெளிச்சத்துக்கு கொண்டுவரும்
மின்சாரம் என்றேன்.
கடைசி வரைக்கும்
என் பெயரைக் காப்பாற்றும்
சம்சாரம் என்றேன்!

மீண்டும் மறுத்து ,
என் கழுத்தை அறுத்தது
மனச்சாட்சி....

இடைவிடாமல்
சொன்னேன் நான் !
கவிஞன்......
தேசத்தை அடையாளப்படுத்தும்
முகவரி என்றேன்!
காலத்தை பிரதிபலிக்கும்
கண்ணாடி என்றேன்!
போதாமைக்கு
இன உறவுப்பாலம் அமைக்கும்
சமாதானத் தூதுவன் என்றேன்!

ஏளனமாகச் சிரித்துவிட்டு
சொன்னது
என் மனச்சாட்சி ......
எதிர்காலத்தை
எங்கோ தொலைத்துவிட்டு
பத்திரிகைக்குள்ளேயே
காலத்தை கடத்தும்
பைத்தியக்காரன் என்றது!

தினமும் நான் மனச்சாட்சியோடு
தோற்றுத்தான் போகிறேன்.


யாரிந்த கவிஞன் உங்கள் கருத்தோவியங்களையும் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

இந்த கவிதையும் வாழைச்சேனை சல்மானுள்ஹரீஸ் இன் "போதுக்காரநிகளுள் பெரியது " கவிதை தொகுதியில் இருந்து ரசிக்கப்பட்டது .

Monday, July 27, 2009

இது நியாயமா ???.......

கோடை
ஆண்டவன் போடும்
அவசர 'ஹர்த்தால்"
இயற்கை ஏற்படுத்திய
ஊரடங்குசட்டம்!

சூரியனே இங்கு
டயராக எரிக்கப்படுகின்றது!

வாயு தேவனுக்கு
வளிமண்டலம் வரமுடியாத
வழிமறிப்பு!

நாட்டில் "pulukka " கலவரம்
ஆக்கிரமிப்பதால்
மக்கள்
புழுங்கி தவிக்கும்
நிலவரம்....

வருண பகவானின்
ஆறு மாத கால
ஆட்சி கவில்ந்ததினால்
நாட்டிலேட்பட்ட
நிலையிது !!

ஆங்காங்கே
பஸ் வண்டிகளிலும்
கல்லூரி வாசல்களிலும்
கொதியுடன் கூடிய ரகளை !

இருந்தும் அக்னி தேவன்
தொடர்ந்தும்
ரோந்து நடவடிக்கைகளில்.


வாழைச்சேனை " சல்மான் ஹரீஸ்" இன்
"பொது காரணிகளில் பெரியது"
என்னும் கவிதை தொகுதியிலிருந்து ரசிக்கப்பட்டவை.

Sunday, July 26, 2009

என்ன லுக்கு ?????

பட பட பட்டாம்பூச்சி பட பட்க்குது.............
சொர்கமே என்றாலும்......!!! ஹா ஹா...

பறக்கும் (வண்டு) பறக்கும்...........



Saturday, July 25, 2009

சோதனை

"தோல்விகள் வேதனைகள் அல்ல -
ஒரு பொக்கிசத்தை
ஒப்படைக்க முன்
நடத்தப்படும்
சோதனைகள்.


கவிஞர் மனுஷ்ய புத்திரன் கவிதைகளில் ஒன்று ரசித்தேன் ,பகிர்ந்தேன் .

Wednesday, July 22, 2009

மற்றுமொரு "ஆஸ்கார்"


நமக்கு மற்றுமொரு "ஆஸ்கார்" விருதுங்கோ......
டண்டானா.............. டர்ணா ...................
என்ன லுக்கு ?????
அதுதான் ....அதான்பா......

அந்த விருதுதான்.
நம்புங்க சார்.அட என்னங்க நீங்க
இதுவரைக்கும் நம்பவே இல்ல,,,,,,,


இல்லையா பின்ன பதிகின்ற நமக்கு பதிவுலகில் கிடைக்கிற எல்லா விருதுகளும் நமக்கு ஆஸ்கார் தானுங்க. இல்லையா!!!!அண்மையில் நண்பர் சந்ரு வழங்கிய "சுவாரஷ்ய பதிவர் " விருது பற்றித்தான் பேசுறன் என்று இதுக்கு பிறகும் நீங்க கண்டு பிடிக்க இல்ல என்று யாராவது சொல்லுவார்களா சொல்லுங்க...சந்ரு நன்றி ராசா..........விருது கிடைத்தது மகிழ்ச்சி,ஆனால் விருது வழங்குவது அவ்வளவு சுலபமான காரியமில்லைதானே !!!!அதுதான் அடியேன் விருது வழங்கும் வைபவத்தை கொஞ்சம் தாமதமாக அரங்கேற்றலாம் என நினைத்திருக்கிறேன் ,

விருதை பெற ஆர்வமுள்ளவர்கள் அடியேனை தொடர்பு கொள்ளலாம் . என்று சொல்லுவேன் என்று பாக்குறீங்களா??அப்பிடியெல்லாம் ,இல்ல இப்பொழுது விருதுகள் தயாராகிறது .........விரைவில் உலக மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் விருதுகள் வழங்கப்படும்.

Sunday, July 19, 2009

எழுத மறந்த கவிதைகள் -(பாகம்-2௦)

எந்த மொழி பேசினாலும்
புரிந்துகொள்ள முடிகிறது...
உன் மௌன மொழியைத்தவிர ....
-----
என் கவிதைகள்உனக்குபிடிக்கும் என்றாய்.
எழுதுவதை
நான் நிறுத்திய பிறகு,,,,,!
--------
என் இதயத்தின்வானொலி நீ....
என் செய்திகளுக்குத்தான்
இடமில்லை என்கிறாய்!
-------
மௌனமாய்-நீஎன்னை
கடந்துசென்ற போதும்-உன் இதயம்
என்னுடன்பேசிக்கொண்டுதான் சென்றது....
-------
காலங்கள்கடந்துசந்தித்தாய்......
உன்னில்எத்தனையோமாற்றங்கள் -
உன்மௌனத்தை தவிர!
------
ஒரு காலத்தில்
என் கவிதைகளை கூடநான்எழுதி வைத்ததில்லை.
நினைவுபடுத்தநீ இருக்கிறாய்என்பதால்....
இன்று-என்
பெயரையேஉனக்கு
ஞாபகபடுத்தவேண்டிஇருக்கிறது!---

புகைக்க போறீங்களா ? அப்ப நான் பொறுப்பில்ல !!!!

அண்மையில் நண்பி ஹேமா (ஹேமலதா ) ஈ மெயில் மூலமாக சில தத்துவங்களை படங்களாக தந்திருந்தார் , அனைத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .
சொன்னால் கேக்கிறீங்களா புகைக்க வேணாம் என்னு, இப்ப பாருங்க என்ன ஆச்சு.......
















இப்ப சொல்லுங்க இனிமேலும் புகை.........??????
உங்கள் கருத்துக்கள் ....
ஹை கூ கவிதை வடிவில் வரட்டும்.

Thursday, July 16, 2009

என்ன ஒரு அற்புதம்....!!!!!!



இந்த புயல் வேக பதிவாளர்களுக்கு மத்தியில் , ஒருநாளைக்கு ஒரு பதிவாவது இடலாம் என யோசித்தால் நேர பிரச்சனை கணனியில் கைவைக்க விடுகிறதில்லை...அப்படியிருந்து இடையிடையே சந்திப்பதில் மகிழ்ச்சி .
அண்மையில் நண்பர் ரவீந்திரன் மெயில் மூலமாக பகிர்ந்து கொண்ட படமொன்றினை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் , நீங்கள் உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.


Monday, July 13, 2009

எழுத மறந்த கவிதைகள்......பாகம்-1


காதல் - ஒரு
எளிமையான பாடம் தான் -ஆனால்
பலபேர் அதில்
தோற்று போகின்றார்கள்...!



நினைவுகள் குழந்தைகள் மாதிரி...
அழுத பின்புதான்உறங்குகின்றன...


உனக்கு என்னைத் தெரியும்
என்றுவார்த்தைகளுக்கு ஒரு கடிதம் எழுது!
அப்போதாவது அவை என்னுடன்
முரண்டு பிடிக்காமல் இருக்கட்டும் !!!!.



எழுத மறந்தது யாரென்று பிறகு சொல்கிறேன்......

Sunday, July 12, 2009

நாங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கபோறம் !! ப்ளீஸ்.





































இதுக்கப்புறமும் அவங்கள நாங்க disturb பண்ண கூடாது உஷ்...........








எது சுத்தமானது??/


இங்கிலாந்தின் பெரும் தலைவரான செர்சிலும் முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் ராதாகிரிஷ்ணனும் ஒரு விருந்துக்கு சென்றார்களாம் ,

வழமைபோல சேர்சில் கரண்டியால் சாப்பிடத்தொடங்கினார் ,

டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களோ தனது கைகளை சுத்தமாக் கழுவிய பின்னர் சாப்பிடதொடங்கியிருக்கிறார்....

இத்தனை அவதானித்த சேர்சில் " என்ன இது???.... இப்படியா சாப்பிடுகிறீர்கள் !!!

கரண்டியால் சாப்பிடுவதுதானே சிறந்தது மட்டுமல்லாது சுகாதாரமானது , கையால் சாப்பிடுவது தவறு " என்றிருக்கிறார்.

இதைகேட்டு சாப்பிட்டு முடித்த ராதாகிருஷ்ணன் அவர்கள் புன்சிரிப்புடன் செர்சிலிடம் " உலகத்திலே கையால் சாப்பிடுவதுதான் சுத்தமானது ,காரணம் ,இதை வேறு யாரும் உபயோகிக்க முடியாதே ".....என்றாராம் .
இதைகேட்ட செர்சிலும் பதிலுக்கு புன்னகை செய்தாராம்.

நீங்க சொல்லுங்க எது சுத்தமானது ???????????


Saturday, July 11, 2009

கிரிக்கெட்டில் புதிய உபகரணங்கள்.....

தலைப்பைபார்த்து அவசர அவசரமாக ஓடி வந்த நண்பர்களே கொஞ்சம் அவசர படாமல் நிதானமாக நின்று வாசிங்க இது நம்ம வழமையான "மொக்க" பதிவுதான்.


அது வேறு ஒன்னுமில்லீங்க .... அடியேன் எப்ப கிரிக்கெட் விளையாட போனாலும் நம்ம விக்கெட் bowled முறையில் தான் அவுட் ஆகிறது வழக்கம் இத்தனை எவ்வாறு தடுப்பது என்ற பல நாள் ஜோசனைக்கு பிறகு உதித்ததுதான் இந்த ஞானம்....!!!!!! அதாவது விக்கெட் விழாத மாதிரி விக்கெட்டை நாட்டினால் சரிதானே !!!!!!! அதுதான் அடியேன் இப்படியான விக்கெட் ஒன்றை தெரிவு செய்தேன் . ( கீழே உள்ள படத்தில் இருப்பது அடியேன் தான் ,இப்ப சொல்லுங்க நம்ம விக்கெட்டை எந்த பந்துவீச்சால்வீழ்த்த முடியும்).



இது தவிர இன்னும் சில நன்மைகளும் உண்டு..........
அதிக பாரமில்லாமல் தயாரிக்கப்பட்ட "மட்டை"இதனால் கஷ்டப்படாமல் அதிக தூரம் தூக்கி ஓடலாம்.
அத்தோடு உடல் குளிர்ச்சியாக இருக்க ஆடைகளும் குறைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் தூசுகளை தடுப்பதற்காக "பிளாஸ்டிக் முன் பாதுகாப்பு பகுதியை கொண்ட தலைகவசம் .
இப்படியான ஏகப்பட்ட நன்மைகளோடு நம்ம புதிய கண்டு பிடிப்பு !!!!!!!!!!

Thursday, July 9, 2009

ஆண்டு நிறைவுகளை கொண்டாடுவோமா?


ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என்பார்கள்.....போகட்டுமே வயதுதானே !என்பவர்களும் இருக்கிறார்கள் , " ஐயோ இன்னுமொரு வருடம் ஓடி போயிடுச்சா " இந்த வருடத்திலாவது ஏதாவது சாதிக்க வேண்டும் "என்று உறுதி மொழி எடுத்துகொள்பவர்களும் இருக்கிறார்கள்.
மேல சும்மா நிகழ்ச்சி முன்னோட்டம்.......

இனி விசயத்துக்கு வருவோம்.
வழமையாக நாங்கள் ஒவ்வொரு வருட நிறைவையும் ஒவ்வோர் பெயர் கொண்டு அழைப்பது வழக்கம். அதில அனேகமானது எல்லோருக்கும் தெரிந்த...

1 -ஆண்டு விழா
25 -வெள்ளி விழா
50- பொன் விழா
100-நூற்றாண்டு விழா .
அனால் ஒவ்வொரு ஆண்டு நிறைவிற்கும் ஒவ்வோர் பெயருண்டு அதைத்தான் இங்கே நாங்கள் அறிந்து கொள்ள போகிறோம்.

இடையிடையே இடைவெளி இருக்கும் தெரிந்தவர்கள் அதனை கண்டு பிடித்து சொல்லுங்கள் இல்லையென்றால் பின்னூட்டத்தில் பார்க்கலாம்.

1வது ஆண்டு நிறைவில் நிறைவில் -காகித விழா
2-பருத்தி விழா
3-தோல் விழா
4-மலர் மற்றும் பழ விழா
5-மர விழா
6-சர்க்கரை /கற்கண்டு/இரும்பு விழா
7-கம்பளி/செம்பு விழா
8-மண் கலச விழா
10-.....................?
11-எக்கு விழா
12-லினன் விழா
13-பின்னால் விழா
14-தந்த விழா
15-.............?
20-பீங்கான் விழா
30-முத்து விழா
40-மாணிக்க விழா
இன்னும் ஏதாவது இருந்தால் சொல்லுங்க.....


Tuesday, July 7, 2009

இவரு மனுசன்யா..


வாழ்கை என்பது எனக்கு ஒரு குறுங்கால
மெழுகுதிரியன்று .
அது நான் தற்போது ஏற்றி நிற்கும்
அழகிய தீப்பந்தம் .
எதிர்கால சந்ததியினருக்கு இத்தனை தரு
முன்னர் முடிந்தளவு பிரகாசத்துடன்
எரிய செய்வது என் விருப்பம்.
--------------------------- ஜோர்ஜ் பெர்நாட்ஸவ் ---------------
இந்த உணர்வு எல்லோருக்கும் இருக்கனுமா இல்லையா??/

இதுதான் கிரிக்கெட்...



சாதிசிட்டாங்கையா நம்ம பசங்க ,,,,,, பாகிஸ்தானுக்கெதிராக காலியில் வைத்து .....


மேலதிக தகவல்களை முழுமையாக நம்ம லோஷன் இப்ப டைப் பண்ணிகொண்டிருக்காரு .................

எனக்கு எப்போது பிறந்த தினம்?? சொல்லுங்க please


இரண்டு நாட்களுக்கு முன்பு எனது வயது 25.
அடுத்த வருடம் எனது 28 வது பிறந்தநாள் வருகிறது ,எனது பிறந்தநாள் ஒரு நாள் மட்டும்தான் வருகிறது ,எனில் நான் பிறந்த திகதி என்ன ?

(கண்டுபிடிச்சா சொல்லுங்க... விளக்கம் தந்தால் இன்னும் நல்லது )

Sunday, July 5, 2009

"சொறி"




கடித்த நுளம்பு ......
சொல்லிவிட்டு போனது
'சொறி'.

எங்கேயோ கேட்டது, இன்னும் மனசில நிக்குது.

Saturday, July 4, 2009

முத்திரை கேள்விகள்.


இன்று இரண்டாவது பதிவு......
இதில் இரண்டு கேள்விகள் .
பதிலளியுங்கள் பார்க்கலாம்.!!!

1 வது,

உலகில் எந்த நாட்டில் வெளிநாட்டவர்க்கும்,உள்நாட்டவர்க்கும் வெவ்வேறான முத்திரைகள் வெளியிடப்பட்டது???


2 வது.

தமிழ்.ஆங்கிலம்,சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் பொறிக்கப்பட்ட முதல் முத்திரை எது?


விடைகள் பின்னூட்டத்தில்.

"புத்திமான் பலவான் "

உலகத்தில் எவ்வளவோ வித்தியாசமான அதேவேளை சுவாரஸ்யமான நிகழ்வுகள் காலாகாலமாக நடந்துதான் வந்திருக்கிறது , அதுபோன்று சுவாரஸ்யமான விடயமொன்றை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

1956 melbourn olympic போட்டியில் பழுதூக்கும் போட்டியில் அமெரிக்காவின் penton வேய்க்ட் charles winsi என்பவர் பான்குபர்ர்ர்ரியிருக்கின்ற்றார்.
போட்டி தொடங்குவதற்கு ,15 நிமிடங்களுக்கு தனது உடல் எடையை பார்த்த இவர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார் காரணம் அவரது எடை 200 g கூடுதலாக இருந்திருக்கிறது.
இதனால் தனது உடல் எடையை குறைக்க நினைத்த நம்ம winsi க்கு அற்புதமான யோசனை தோன்றியிருக்கிறது , இதன் படி தனது தலை முடியை மொட்டையடித்து எடையை குறைத்துகொண்டாராம் .அதன் பின் போட்டியில் பங்குபற்றி 342.5kg எடையை தூக்கி உலக சாதனை படைத்திருந்தாராம்.

இப்ப சொல்லுங்க "புத்திமான் பலவான்" இல்லையா????/

Thursday, July 2, 2009

கண்ணில் பட்டதில் சுட்டது.....


கண்ணில் பட்டதில் ,மனசை தொட்டதை சுட்டுவிட்டேன் ...........
சுட்டது கவிஞர் பார்வதி விஜயின் "18 வயசுல..." கவிதை தொகுப்பிலிருந்து....
இப்ப புரிஞ்சிருக்குமே என்னத்த சுட்டோமின்னு.

கடிதத்தில் எச்சில் தொட்டு நீ
ஒட்டிய தபால் தலை
கடிதத்தில் ஒட்டாது
தேன் எப்படி பசையாகும்!

பாகற்காய் கொடியில்-நீ
காய போட்டிருந்த
பாவாடை தாவணியால்
பலகார பட்டியலில் -நான்
பாகட்காயையும் சேர்த்து கொண்டேன்.
தூக்கனான் குருவிகூட்டை
ஆச்சர்யமாய் பார்த்தாய்
உள்ளிருந்த குருவிகள்
உன்னை ஆச்சரியமாய் பார்த்தன ....
அதிசயங்கள் ஒன்றை யொன்று பார்த்து
அதிசயித்துக்கொள்வது
அதிசயமில்லைதானே !
கொலைகருவிகளின் பட்டியலில்
நீ கால்களில் அணிந்திருக்கும்
கொலுசையும் சேர்த்துக்கொள்ளலாம் .

ரொம்ப நேரம்
கண்ணாடி பார்த்துகொண்டிருப்பாய்
உன்னை அடிக்கடி பார்க்கும் உனக்கே
உன்னை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போல்
உள்ளதென்றால்
எப்போதாவது பார்க்கும் எனக்கு
எப்படியிருக்கும்.

சின்ன வயசில் நிறைய
சிலேட்டு குச்சிகளை முழுங்குவேனாம்!
இருபது வயதுகளில்
இப்படியெல்லாம் உன்னைப்பற்றி
எழுதத்தானோ ?

உங்களுக்கும் புடிச்சிருக்கா ?????????