
சொர்கத்தின்
விலாசத்தை போய்
விசாரித்தேன் ,
அவள்தான் சொர்க்கம்
என்பதை
அறிந்துகொள்ளாமல்.!
உன்னுடைய உதடுகள்
உச்சரிக்கும் வரை
நான்
உணர்ந்ததில்லை ...
என்னுடைய பெயர்
இத்தனை அழகாய்
இருக்கிறதென்று!
வீணாக ஏன்
திறந்து வைத்திருக்கிறாய்....
உன் விழி வாசலை...
இதய வீட்டை
பூட்டி
சாவியை
இடுப்பில்
முடிந்து கொண்ட பிறகு.
ஒரு ஜோடி
சிறகுகள்
வேண்டும் என்றேன்
உல்லாசமாக
உன்னோடு
பறப்பதற்கு அல்ல-
தொலைதூரம் போய்
தொலைதூரம் போய்
உன்னை
மறப்பதற்கு....
தேச வரலாற்றில்
இடம்பெறாமல் போன
தியாகிகளைபோல...
ஆயிரக்கணக்கான
இளைஞர்களின் பெயர்கள்
விடுபட்டு விட்டன
உன்- திருமண அழைப்பிதழில்.
நன்றி- கவிவேந்தர்