
தலைப்பை பார்த்து நிறைய பிடுங்கலாம் என எண்ணி ஓடோடி வந்த நண்பர்கள் எல்லோருக்கும் ஒரு கூலான வணக்கம்.
அதாவது , உண்மையில் இப்படி மரம் உலகத்தில் இருந்தால் உலகத்தில் இப்போது இருக்கின்ற பொருளாதார சிக்கல்களுக்கு ஒரு முற்று புள்ளி வைக்கலாம்.
அது மட்டுமல்லாமல், கட்டாயம் வீட்டுக்கு நாலு மரத்த நாங்க நட்டு நீர் ஊற்றாமலா போயிருவோம்!
அந்த ஏக்கங்கள் எல்லாம் ஒரு புற மிருக்க இப்படியான மரம் உலகத்தில எங்காவது இருக்கா என்று கேட்டு மொக்கை கேள்வி கேட்டவன் என்ற பெருமைக்கு சொந்தக்காரன் ஆக நான் விரும்ப வில்லை .
அப்ப இந்த விஷயம் இப்ப எதுக்கு என்று கேட்டால்தான் முக்கியமான எனது சந்தேகம் முடிவுக்கு வரும் ,,,,,,,
நீங்கள் எல்லோருமே எனக்கு நல்லதொரு தீர்வை பெற்று தருவீர்கள் என்ற நம்பிக்கையில் தான் இரவெல்லாம் தூங்காமல் விழித்திருந்து யோசித்த எனக்கு பலன் கிடைக்கும்.
இப்ப என்னுடைய பிரச்சனைக்கு வருகிறேன்... அதாவது ,
"பணம் மரத்தில் காய்ப்பதில்லை என்று சொல்வது உண்மையானால்,பணம் இருக்கும் வங்கிகளுக்கு மட்டும் ஏன் 'கிளைகள்" இருக்கிறது?!!!!!!!!!!!!"
இந்த கேள்விக்கு மட்டும் விடை சொன்னால் உங்களை கொஞ்சம் கீழே பாருங்க இப்படி பறக்க வைப்பேன்.
