
பிறகு என்னங்க சொல்றது கடைசியாக ஒரு பதிவிட்டது செப்டம்பர் மாதம் 11 இல்....
அதற்கு பின் நிறைய விடயங்கள் பதிவிட தாயாராக இருக்கிறது ,அது மட்டுமில்லாமல் நிறைய நண்பர்கள் தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறார்கள் , அவர்களின் அழைப்பை ஏற்று பதிவிடவில்லை ,அதே போல நண்பர்களின் பதிவுகளுக்கு கருத்துரைகள் தெரிவிக்க முடியவில்லை...
இப்படி ஏகப்பட்ட சிக்கல்கள்....
ஏன் ?..ஏன்...ஏன்...? ......
என்று கேட்டால் உங்களுக்கு சிரிப்பு வரும்!
அது ஒன்டுமில்லீங்க கொஞ்ச நாளாக எனது "கி போர்டு " காணாமல் போய் விட்டது !!!!! இதனால் பதிவுகளை டைப் பண்ண முடியவில்லை....
கணனியில் அதிக நேரம் செலவழிப்பதை தடுக்க என் நண்பர்களால் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கைதான் இது !
இப்ப சொல்லுங்க என்மேலே ஏதாவது பிழை இருக்கா? இல்லைதானே !
இப்பதான் கண்டுபிடித்தேன் ( யாருக்கிட்ட...)
இனிமேல் வழமைபோல நம்ம மொக்கைகள் தொடர்ந்து துரத்தும் உங்களை.