ad

Monday, February 22, 2010

வெற்றி பெற்றேன்

கடந்த சனிக்கிழமை நாள் முழுவதும் அடியேனுக்கு ஒரு பயனுள்ள பொழுதாகவே அமைந்திருந்தது ,


பொழுது போக்கு சாதனங்கள் சிலவேளைகளில் வெறுமனே பொழுதை 'போக்கும்' சாதனங்களாக  அமைந்துவிடுவதுமுண்டு அனால் சில சாதனங்கள்  அரிதாக நல்ல பல நிகழ்சிகளை நேயர்களுக்கு தருவதுண்டு அந்த வகையில் அன்றைய தினம் நான் ரசித்த இரண்டு நிகழ்ச்சிகள் பற்றி இந்த பதிவில் மனம்விட்டு பேச போகிறேன்......
 
முதலாவது ......


காலைவேளையில் தேசிய தொலைக்காட்சி (நேத்ரா T.V.) இல் ஒளிபரப்பான "புன்னகை" நிகழ்ச்சி................

இடையிடையே இந்த நிகழ்ச்சியை ரசிக்க சந்தர்ப்பம் கிடைப்பதுண்டு அந்தவகையில் அன்றைய தினம் நிகழ்ச்சியில் பேசப்பட்ட 'சொல் புதிது பொருள் புதிது ' என்ற அம்சத்தினூடாக தாய்மொழி பற்றியும் மொழிகளின் பயன்பாடு பற்றியும் துறைசார்ந்தவர்கள் கலந்து கொண்டு அறிய கிடைக்காத பல அறிய வேண்டிய விடயங்களை பகிர்ந்திருந்தார்கள் அவர்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்  ,அதேவேளை திருகோண மலையிலிருந்து  தொலைபேசி மூலமாக தனது கருத்துக்களை தெரிவித்த பெரியவர் ஒருவர் தொட்டு சென்ற விடயங்களில் என்ன மிகவும் சிந்திக்க வைத்த விடயம், இப்பொழுது ஊடகங்களில் பயன்படுத்தப்படும் மொழி! குறிப்பாக உச்சரிப்பு.

நிச்சயமாக அவர் சொன்ன விடயங்கள் அனைத்தும் மறுக்காமல் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய உண்மைகள்.
 
இப்பொழுது ஒலி , ஒளி ஊடகங்களில் பணி  புரிபவர்கள் ஒரு சிலரது உச்சரிப்பை பற்றி நாட்டில் சச்சரவுகள் உண்டு..... ஆனால் இதை பற்றி கவலைப்படுவதற்கு சிலருக்கு நேரம் இருப்பதில்லையோ தெரியவில்லை . திருத்துவதை சிலர் தங்களை வருத்துவதாக நினைக்கிறார்கள் என்று மூத்த ஊடகவியலார்கள் சொல்ல கேட்டிருக்கிறோம். அவ்வாறு இல்லாமல் சரியான உச்சரிப்புக்களை கற்றுக்கொள்ள முயற்சிக்கலாம் , "பயிற்சியும் முயற்சியும் இருந்தால் இந்த வானத்தின் கீழ் எதுவும் சாத்தியம்"...................................
 

அடுத்த நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு நேரத்தை இதமாக்கிய

வெற்றி வானொலியின் "வெற்றி பெற்றவர்கள் ".
ஊடகத்துறையில் சாதித்த சாதனையாளர்களை அழைத்து வந்து அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு அருமையான நிகழ்ச்சி .


உண்மையில் தனது இரண்டு ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவேற்றி தனது மூன்றாவது ஆண்டிலும் வெற்றி நடைபோட ஆரம்பித்திருக்கும் வெற்றி வானொலிக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

வெற்றி FM வானொலியை ஆரம்பம் முதலே நான் தூரத்திலிருந்து துப்பறிந்து வருகிறேன்,,,,,, அதன் ஒவ்வொரு நகர்வுகளும் சிறப்பானதாக இருக்கிறது அதுமட்டுமல்லாது
" எதை சொல்வது என்பது அறிவு ,
எப்படி சொல்வது என்பது உத்தி"

அந்த உத்தியை நன்றாகவே கற்று வைத்திருக்கிறார் வானொலியின் முகாமையாளர் சகோதரர் லோஷன். அவருக்கும் இந்த இடத்தில் உளங்கனிந்த வாழ்த்துக்கள்.
 
இனி நிகழ்ச்சியின் ஒரு சில பக்கங்கள்...

ஆரம்ப நிகழ்ச்சியே அபாரமாக அருமையாக அமைந்திருந்தது ...

காரணம் அன்றைய தினம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மூத்த              ஒலி
ஒளி பரப்பாளர் செல்வி சற்சொரூபவதி நாதன் (மிஸ் நாதன்).

செய்தி சொல்வதை  இவரிடம் நிறைய பேர் கற்றுக்கொள்ள வேண்டும் சற்சொரூபவதிக்கு பதிலாக இவருக்கு "சொற்"சொரூபவதி என்று வைத்திருக்க வேண்டும் .அந்த அளவுக்கு அழுத்தம் திருத்தமாக செய்திகளை சொல்வார்.(இவரிடமும் அடியேன் பயிற்சி பெற்றது அடியேனின் பாக்கியம்).



செல்வி சற்சொரூபவதி நாதன் (மிஸ் நாதன்). தனது ஏராளமான அனுபவங்களை பகிர்ந்திருந்தார்... ஒரு சில கசப்பான அனுபவங்களையும் இனிப்பாக சொல்லி முடித்தார். அதுமட்டுமல்லாமல் நிறைய தடைகளை தாண்டி அவர் பல சாதனைகளை புரிந்து விருதுகள் பலவற்றையும் பெற்றிருக்கிறார் ,அதுமட்டுமல்லாமல் ஏராளமான சவால்களுக்கு மத்தியில்
1989 தொடக்கம் 1991 வரை ஆங்கில சேவையின் பதில் இயல்நாடக கட்டுப்பாட்டாளராகவும்,பின்னர் செய்தி ஆசிரியராக 1991தொடக்கம் 1993 வரை முறைசாரா கல்விப்பிரிவின் வான் பல்கலைக்கழக பொறுப்பாளராகவும் கடமையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறந்த கால பக்கங்களின் ஈரத்திலிருந்துதான் நிகழ்காலத்துக்கு நீர் கிடைக்கிறது.


எனவே புகழின் உச்சிக்கு போன ஒவ்வொருவரும் நிஜங்களின் நிர்வாண ஊர்வலத்தில் கைகளால் மறைத்து கொள்ளாமல் கலந்து கொள்ள வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்புமாகும்.

எனவே இது போன்ற நிகழ்ச்சிகள் எதிர்காலத்திலும் வரவேற்கப்படும் ,மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சிகளின் உருவாக்கத்தில் பங்கு பற்றிய அனைவரது உழைப்பும் வெற்றி பெற்றுள்ளது என்பது உண்மை. .



   " தன்னம்பிக்கை உள்ளவனே உண்மை சொல்வான்"

                                                                                                                                               கே.பிரபா
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்

Wednesday, January 13, 2010

"தலைவருக்கான " என் பகிரங்க மடல்....



தலைவரே நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் ? உங்களை நான் உடனடியாக சந்திக்க வேண்டும் ...
சந்தர்ப்பம் கிடைக்குமா?
என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை தலைவரே...!
எவ்வளவு காலத்துக்குத்தான் நான் பொறுத்துக்கொள்வது என்மீது மேட்கொள்ள படும் இந்த கண்மூடித்தனமான தாக்குதல்களை ..
இவ்வாறான தொல்லைகள் தொடர்ந்தால் ஒரு ஊடகவியலாளன் என்ற வகையில்  எவ்வாறு என் பணியை செவ்வனே செய்ய முடியும் சொல்லுங்கள்...? இதற்கு நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.
குறிப்பாக இந்த தாக்குதல்கள் அதிகமாக இரவு நேரங்களில் தீவிரப்படுத்தப்படுவதனால் என்னால் நிம்மதியான தூக்கத்தை கூட எதிர்பார்க்க முடியவில்லை... இதனை தொடர்ந்தும் என்னால் அனுமதிக்க முடியாது, எனவே உங்களை உடனடியாக சந்திக்க வேண்டும்.... உங்களால் எனக்கு எதுவுமே செய்ய முடியாதா?

இருந்தாலும் பரவாயில்லை....
நான் துணிந்துவிட்டேன்,
எத்தனை பேர் வந்து தாக்கினாலும் பரவாயில்லை ... தனியாக நின்று எதிர்ப்பது என்று முடிவு செய்து விட்டேன் ....

எச்சரிக்கை விடுக்கிறேன் ......

இனி நீங்கள் என்மீது தாக்குதல் மேட்கொள்ள வரும் சந்தர்ப்பங்களில் கவனமாக இருங்கள் எந்த வேளையிலும் உங்கள்
மீது நச்சு திரவங்கள் விசிறப்படலாம்...
உங்களது நரம்பு மண்டலங்களை தாக்க புகை மண்டலங்கள் உருவாக்கப்படலாம்
இதனை தொடர்ந்து உங்கள் மீது , மின்சார வலைகள் மூலம் தாக்குதல்கள் ஏற்படுத்தப்படலாம் ....

இந்த தாக்குதல்களில் இருந்து முடிந்தால் தப்பித்து கொள்ளுங்கள் ...( இவ்வகையான தாக்குதல்கள்தான் இடம்பெறும் என்று சொல்லிவிட்டு தாக்குதல்கள் நடத்துவது துணிகரமான விடயமாகவே சர்வதேச சமூகம் நோக்கும் என்பதில் எனக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை ).

எனவே தலைவரே நீங்கள் என்மீது கோபம் கொள்ள கூடாது இவ்வாறான ஆயுதங்களை கையில் எடுத்தமைக்காக....
நான் பலமுறை விலகி விலகி போயிருக்கிறேன் , குறிப்பாக வலைகளுக்குள் என்னை மறைத்துக்கொண்டு பதுங்கி இருக்கிறேன் , அவ்வாறான சன்தரப்பங்களிலுள் என்மீது கண் மூடித்தனமான தாக்குதல்கள் மேட்கொள்ள பட்டதுதான் எனது இந்த முடிவுக்கான காரணம் மன்னித்து விடுங்கள் ...

இவர்களின் தாக்குதல்கள் மூலமாக எனது பெறுமதி வாய்ந்த ஒரு சில குருதி துளிகள் வீணாக்கப்படுவது பற்றி எனக்கு கவலை இல்லை , இவர்களினால் பரப்பப்படும் மிக கொடிய நோய்களான "டெங்கு , மலேரியா .." போன்ற நோய்களுக்குதான் எனக்கு பயமாக இருக்கிறது....


எனவே அன்பின் நுளம்பு ( கொசு) கூட்டத்தின் தலைவரே...!

உங்கள் நுளம்பு சகாக்களிடம் சமாதானமாக பேசி என் மீது கண்மூடித்தனமாக மேட்கொள்ள படும் தாக்குதல்களை நிறுத்த சொல்லுங்கள் .( முடிந்தால் என்னோடு பேச சொல்லுங்கள் , சமாதனம் பேச வருபவர்கள் மீது ஒரு போதும் தாக்குதல்கள் மேட்கொள்ள படமாட்டாது ..)


இல்லை எனின் மேட்சொன்ன அனைத்து தாக்குதல்களும் 'நுளம்பு(௦ கொசு)தீவிரவாதிகள் மீது மேட்கொள்ள படுவதை யாராலும் தடுக்க முடியாது... அது மட்டுமல்ல இந்த நடவடிக்கைகளை எடுக்க தவறும் பட்சத்தில் உங்கள் அத்தனை இருப்பிடங்களையும் தேடிப்பிடித்து அழிக்க நாங்கள் தயாராகவும் உள்ளோம் ,( இதற்கு அமெரிக்க பிரிட்டன் போன்ற நாடுகள் கட்டாயம் நிதி உதவி செய்யும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை).

நுளம்பு (கொசு) கூட்ட தலைவருக்கான என் மடலை தலைவரின் முகவரி தெரிந்தால் யாராவது தபாலில் சேர்த்து விடுங்கள் ப்ளீஸ்.... ( எவ்வளவு காலத்துக்குத்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது...)

Monday, October 26, 2009

"அது " போல வருமா?...

நவீன உலகத்தில் இருந்து கொண்டு இப்பவும் இதை பற்றி பேசினால் "சும்மா போங்க சார் " உங்களுக்கு வேற வேலை இல்ல , இப்ப இருக்கிற பிசிக்கு அதையெல்லாமா தேடிக்கிட்டிருக்க..."எங்களுக்கு எங்க நேரமிருக்கு? என்று என்னை நம்ம தாய்க்குலங்கள் கொஞ்சம் காட்டமாமாக கேட்கலாம்,,,,,

என்ன பண்றது மனசு கேட்குதில்லையே...! மன்னிக்கவும் "நா" கேட்குதில்லையே...!
எத பற்றி பேச வாறம் என்று ஓரளவுக்கு புரிந்திருக்கும்.....
ஆமாங்க இக்காலத்து "நவீன சமையல்" பற்றித்தான் எங்க கவலையெல்லாம்.

இந்த அவசர உலகத்தில் பாஸ்ட் பூட் கலாச்சாரத்தில் இதெல்லாம் நினைக்க எங்க நேரம்.... ஏதோகிடக்கும் நேரத்தில் சட்டு புட்டுன்னு ஏதாவது தயாரித்து விட்டு அதற்கு வாயினுள் நுழையாத மாதிரி ஒரு பேரு வைத்து தந்தால் , அதன் பெயர் போலவே உணவுகளும் வாயினுள் நுழைய மறுக்கிறது....இதனால்தான் இப்பொழுதெல்லாம் சிலர் உண்டும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் போல.....
ஆனால் அந்த காலத்தில் இருந்த கைப்பக்குவம் இப்போதைக்கு இல்ல என்றுதான் நிறைய பெரிசுகள் பேச கேட்டிருக்கிறேன்,,,,, இதற்கு காரணம் அந்த காலத்து சமையல் நிபுணர்களான நம்ம வீட்டுதலைவிகள் பாவித்த உபகரணங்களாகவும் இருக்கலாம்,,,,,,,
உரல் உலக்கையால் குற்றிய நெல்லரிசி சோறு ......
அம்மியில் அரைத்தெடுத்த மலிகைச்சரக்குகள்
மணக்க மணக்க.....சமைக்கும் பக்குவம் இன்னும் நாவுகளில் நயகராவை வரவழைக்கிறது.






அந்த காலத்து இந்த சமையல் உபகரணங்களை இப்பொழுது காண கூட கிடைப்பதில்லை.....
இருந்தாலும் உரலும் உலக்கையும்,,,
அம்மியும் குழவியும்,
சுளகு
போன்ற பொருட்கள் இன்னும் பாதுகாக்கப்பட வேண்டியவைகளே.....
ஏதோ ஒரு ஆதங்கத்தில் சொல்லி புட்டன் மன்னிச்சுடுங்க தாய்க்குலங்களே.....உங்கள் சமையல்கள் பிரமாதம்........பிரமாதம்....பிரமாதம்.....( மதிய உணவை உறுதிப்படுத்த எடுத்த முன்னெடுப்பு என்று யாரு நினைக்க கூடாது) ....

Saturday, October 17, 2009

கொண்டாட்டமும் , "கொல்லும்"வாட்டமும்.

அக்டோபர் 17 ,
தீமைகள் நீங்கி வாழ்வில் விளக்கேற்றும் இனிய தீபத்திருநாள்,,,,,,
அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.
அதே போல இன்று இன்னுமொரு முக்கியமான நாள் .....
ஆம், "சர்வதேச வறுமை ஒழிப்பு நாள்".
வசந்தங்களை வரவேற்ற வண்ணம் சந்தோசத்தில் மக்கள் ஒரு பக்கம், "வசந்தம்" என்ற சொல்லை மட்டுமே கேட்டிருக்கும், வறுமையில் வாடும் மக்கள் இன்னுமொரு பக்கம். என்ன செய்வது எல்லா விடயங்களுக்கும் இரு பக்கங்கள் இருக்கும் என்பது உண்மை போலதான் இருக்கிறது...

உலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிக்கும் நோக்குடன், ஐக்கிய நாடுகள் சபையானது 1992 ம் ஆண்டு முதல் அக்டோபர் 17 சர்வதேச வறுமைஒழிப்பு தினமாக உத்தியோக பூர்வமாக அறிவித்தது.
ஆனால் பரிதாப கரமாக இன்னும் எம்மால் இந்த அகோர வறுமையை வெல்ல முடியவில்லை....
பொருளாதார மந்தம், குறைந்த உற்பத்தி திறன் போன்றவையே இந்த "வறுமை " குழந்தையை பெற்றேடுக்கின்ற பெற்றோர் ....

இந்த கொடிய வறுமை காரணமாக உலகில், ஒவ்வொரு 3 1/2 நிமிடங்களுக்கு ஒருமுறை , ஒருவர் வறுமை சம்பந்தமான காரணிகளால் உயிரிழக்கிறார்.
அதே நேரம் உலக உணவு திட்டத்தின் (WFP) இன் தரவின் படி , ஒவ்வொரு நாளும் 25,000 பேர் பட்டணி மற்றும் அதனோடு தொடர்பான காரணிகளால் மரணிக்கிறார்கள். என்பது எத்தனை பேருக்கு ஆச்சர்யமான செய்தியாக இருக்குமோ தெரியாது ஆனால், 'காதுக்குள் கோடி நாகங்கள் கொத்துவதுபோல் ' வலிதருகின்ற உண்மையாகும்.

இது தவிர , அண்மைக்கால தரவுகளின் படி , உலக சனத்திஒகையில் 3 பில்லியன் மக்கள் நாளொன்றுக்கு 2.50 அமெரிக்க டாலருக்கும் குறைவான வருமானத்தை பெறுவதோடு 80% க்கும் அதிகமான மக்கள் வருமானம் குறைந்த நாடுகளிலே வாழ்கிறார்கள்.

இதை விட கொடுமை எதிர்கால உலகத்தை கட்டி எழுப்ப வேண்டிய 'சிறுவர்கள்' ஒவ்வொரு வருடமும் இந்த கொடிய வறுமை காரணமாக 25,000 பேர் வரையில் இறக்கிறார்கள்.

இந்த உண்மைகள் எல்லாமே கேட்பதற்கு கூட கஷ்டமாயிருக்கிறது, ஆனால் இதை அனுபவித்தல் எவ்வளவு கொடுமை.

"தங்களை உதைத்து தள்ளும் வாழ்க்கையோடு ஒட்டி கொள்ள இவர்களுக்கு என்ன வழி,?"

வாழ்க்கை இவர்களை முறிக்கப்பார்க்கிறது, வாழ்கையை வளைத்து கொள்ள ஏதாவது வழி இருக்கிறதா? .

முட்களை நிரந்தரமாகவும், ரோஜாக்களை எப்போதாவதும் வெளியிடுகின்ற ரோஜா செடி போலவே , இவர்களுக்கும் உணவு கிடைக்கிறது,

முட்களை எப்போதாவதும், ரோஜாக்களை நிரந்தரமாகவும் பெற்று கொள்ளும் காலம் எப்போது மலரும்,,,..?

உலக பட்டறையில் இவர்களுக்கெதிரான "பட்டினி" அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது, இவர்களுக்கான " உணவு " கவசங்களை தயாரிக்க எத்தனை பேர் தயார்?????

"இவர்களை கட்டுப்பாட்டுக்குள்

வைத்திருக்கும் ,வறுமையால் ,

இவர்கள் தொட்டு பார்க்காத உணவுகள் ஏராளம்.

எனவே, கெட்டுப்போகும் வரை

விட்டு வைக்காமல்,

தட்டுப்பாடோடு இருக்கும் இவர்கள்

தட்டில் இடுவோமா..?"

Tuesday, October 13, 2009

"நடந்த நாடகங்கள்..."


சொர்கத்தின்
விலாசத்தை போய்
விசாரித்தேன் ,
அவள்தான் சொர்க்கம்
என்பதை
அறிந்துகொள்ளாமல்.!



உன்னுடைய உதடுகள்
உச்சரிக்கும் வரை
நான்
உணர்ந்ததில்லை ...
என்னுடைய பெயர்
இத்தனை அழகாய்
இருக்கிறதென்று!

வீணாக ஏன்
திறந்து வைத்திருக்கிறாய்....
உன் விழி வாசலை...
இதய வீட்டை
பூட்டி
சாவியை
இடுப்பில்
முடிந்து கொண்ட பிறகு.


ஒரு ஜோடி
சிறகுகள்
வேண்டும் என்றேன்
உல்லாசமாக
உன்னோடு
பறப்பதற்கு அல்ல-
தொலைதூரம் போய்
உன்னை
மறப்பதற்கு....


தேச வரலாற்றில்

இடம்பெறாமல் போன

தியாகிகளைபோல...
ஆயிரக்கணக்கான
இளைஞர்களின் பெயர்கள்
விடுபட்டு விட்டன
உன்- திருமண அழைப்பிதழில்.


நன்றி- கவிவேந்தர்

Monday, October 5, 2009

அபிரகாம் லிங்கனும் நானும்.....






அபிரகாம் லங்கன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த போது, போர் நடந்துகொண்டிருந்த சமயம்.எட்வின் ஸ்டாண்டட் என்ற அவரது காரியதரிசிக்கு, தனக்கு கீழே ஜெனெரலாக பதவி வகிக்கும் ஒருவர் மீது மிகவும் கோபம். அவர் எடுக்கும் முடிவு ஒன்று கூட சரியாக இருக்காது!.

லிங்கனிடம் சென்று புகார் சொன்னார்,

//"நீங்கள் சொல்வது சரிதான்,அவரை நன்றாக திட்டி ஒரு கடிதம் எழுதிக்கொண்டு வாருங்கள்" என்று லிங்கன் சொன்னார்.
அதன் படி தனது கோபத்தையெல்லாம் கொட்டி ஒருகடிதம் எழுதிக்கொண்டுவந்து லிங்கனிடம் கொடுத்தார் ஸ்டாண்ட்.
படித்து பார்த்த லிங்கன் ,
“நல்லது மிக நன்றாக கடிதம் எழுதியிருக்கிறீர்கள் ” என்று கடிதத்தை கொடுத்தவுடன் ஸ்டாண்ட் திரும்பி செல்ல முனைந்தார் , அந்த வேளையில் லிங்கன்
“ இருங்கள் அந்த கடிதத்தை என்ன செய்ய போகிறீர்கள் ?” என்று கேட்டார் , ‘இன்றே தபாலில் சேர்த்து விடுகிறேன் ,என்று பதில் வந்தது ,
“முட்டாள்தனம் ! என்று லிங்கன் சொல்ல ,.”என்ன தபாலில் சேர்க்க வேண்டாம் என்கிறீர்களா ”!? என்ற ஸ்டாண்ட் இடம் ,
“நான் கூட கோபமாக இருக்கும் பொது இது போலதான் கடிதம் எழுதுவேன் , நம் கோபத்தையெல்லாம் கொட்டியாகி விட்டது .ஆனால் அதை அனுப்ப மாட்டேன் .
அதை தனியாக ஒரு கோப்பில் வைத்து விட்டு ,மறுபடியும் வேறு கடிதம் எழுதுவேன் நீங்களும் அதே போல செய்யுங்கள் ” என்று லிங்கன் சொன்னாராம் .//
இதே போலதான் நானும் இப்பொழுது கோபத்தை கொட்டி தீர்க்கும் வழி முறையாக இதே முறையைத்தான் கையாளுகிறேன் …..

எனவே "லிங்கனும் நானும் " ஒகே தானே ..!
எனவே கோபமானது ஒரு மனிதனை மிக மோசவனாக காட்டும் மிக பெரிய எதிரி ..
இந்த எதிரியை பற்றி அறிஞர்கள் சிலர் ,,,,,
*“ஒரு மனிதன் தவறும் செய்து விட்டு அதை ஒப்புக்கொள்ள தேவையில்லை endru முடிவும் செய்து விட்டால் உடனே கோப பட தொடக்கி விடுகிறான .”
* “ கோபத்துடன் இருக்கும் பொது பேசுங்கள் , அப்போது தான் நீங்கள் வாழ் நாள் முழுவதும் வருத்தப்படும் படியாக ஒரு பேச்சை பேசியிருப்பீர்கள் .”
*“கோபத்தை வெற்றி கொள்வதற்கு ஒரே வழி , அதை தாமதப்படுத்துவதுதான் ”.
யார் வேண்டுமானாலும் கோபக்காரனாக மாறலாம் , அது மிக மிக சுலபம் , ஆனால் சரியான நபரிடம் , சரியான முறையில் சரியான அளவுக்கு ,சரியான நேரத்தில் , சரியான காரணத்துக்காக கோபத்தை வெளிப்படுத்த முடிகிறதா ? என்பதை யோசித்த பின்னர் கோப படுங்கள் , அது சுலபமான காரியமல்ல ……………

Sunday, October 4, 2009

கறுப்பு மஞ்சள் போர்.........

மீண்டும் ஒரு கள போர் ....


ஆம் இது கிரிக்கெட்டில்.

உலகின் தலைசிறந்த முதல் 8 அணிகள் மோதிய (ஐ.சி.சி.,) மினி உலக கிண்ணத்தை கைப்பற்றும் நம்பிக்கையுடனும் கனவுடனும் களமிறங்குகிறது இரண்டு கிரிகெட் சிங்கங்கள் .


ஆனால் இதன் முடிவு 1988 ஜனவரி 22 இல்

M.C.G. இல் கிடைத்தது போல் முடிவுகள் தான் இம் முறையும் கிடைக்குமா என்பதில் சந்தேகமே..... ஆஸ்திரேலியா இறுதியாக இந்த மைதானத்தில் விளையாடிய 10 போட்டிகளில் 6(ஆறு) போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பது அணிக்கு இன்னும் வலு சேர்க்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. அதே நேரம் நியூஸிலாந்து அணியானது கடைசியாக விளையாடிய 5 ஒருநாள் போட்டிகளில் எந்தவொரு போட்டியிலும் வெற்றி ஈட்ட வில்லை என்பது நியூஸிலாந்து ரசிகர்களுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கின்ற விடயமாக இருக்கும், இந்த சுற்று போட்டியில் கூட நியூஸிலாந்து அணி இதே மைதானத்தில் வைத்து தென்னாபிரிக்க அணியிடம் தோல்வி கண்டதும் குறிப்பிட தக்கது.


இது தவிர போட்டியின் முடிவுகளை தீர்மானிக்கின்ற மிகப்பெரிய சக்தியாக மாறி வருகின்ற "மழை" இந்த போட்டியில் எந்தளவுக்கு தாக்கம் செலுத்த போகிறதோ தெரியவில்லை.

இவை ஒரு புறமிருக்க இரண்டு அணிகளினதும் பலம்களையும் ஒரு முறை நாங்கள் கட்டாயம் உற்று நோக்க வேண்டி இருக்கிறது.....


அவுஸ்திரேலியா அணி.....


RT Ponting*, DE Bollinger, CJ Ferguson, NM Hauritz, BW Hilfenhaus, JR Hopes, DJ Hussey, MEK Hussey, MG Johnson, B Lee, TD Paine†, PM Siddle, AC Voges, SR Watson, CL White


இதில் சில வீரர்களை எதிரணி எவ்வாறு குறி வைக்கிறதோ இல்லையோ ரசிகர்கள் குறி வைத்திருப்பார்கள் என்பது வெளிப்படை உண்மை ...அதில் இருவர் கடந்த அறை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை துவம்சம் செய்த இருவர் ... ரிக்கி பாண்டிங் மற்றும் ஷேன் வாட்சன் .





இவர்களோடு , தென் ஆப்ரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) விருதுகள் வழங்கும் விழாவில் கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை அள்ளி சென்ற வேகப்பந்து வீச்சாளர் மிச்சல் ஜான்சன். ( மனுஷன் பயங்கர குசியாக இருக்கிறார்).


இனி நியூஸிலாந்து ....


D Vettori*, S Bond, N Broom, I Butler, B Diamanti, G Elliott, J Franklin, M Guptill, G Hopkins†, B McCullum†, K Mills, I O'Brien, JPatel, AJ Redmond, R Taylor


இந்த அணியில் யார் எந்த நேரத்தில் என்ன செய்வாங்க என்று சொல்லவே முடியாது.... அந்தளவுக்கு எல்லா வீரர்களும் தங்கள் அணிக்கு ஏதாவது பங்களிப்பை செய்ய துடிப்பவர்கள். அதிலும் குறிப்பாக அணித்தலைவர் டேனியல் வெட்டோரி, ஷேன் பாண்டு, ரோஸ் டேய்லோர்...... போன்றோரை குறிப்பிட்டு சொல்லலாம் ...


எனவே சிறந்த இறுதி போட்டி ஒன்றை கிரிக்கெட் ரசிகர்கள் திங்கட்கிழமை மாலை 6 மணிக்கும், GMT 12.30 க்கும் கண்டு ரசிக்ககூடியதாக இருக்கும்....


இருந்தாலும் வெற்றி வாய்ப்புக்கள் ஆஸ்திரேலியாவுக்கே அதிகம் இருப்பது போல தெரிந்தாலும்... "தெரிந்த கிரிக்கெட்டில் தெரியாதது எதுவும் நடக்கலாம்..". பொறுத்திருந்து பாப்போம்.

Wednesday, September 30, 2009

சுடச் சுட........


நீண்ட நாட்களாக நம்ம கவிதைகளை (சுட்டதுதான்) காணவில்லையே என்றவர்களுக்கு இப்பதான் சுடச் சுட சுட்டு சில கவிதைகள் இதோ............
சுடுவதற்கு ஏற்கனவே சுட்டு வைத்தவர்களுக்கு ரொம்ப நன்றிகள்.
===================

காதல் என்பது
நம் வசத்தில் இல்லை
அது ஒரு வினோதமான நெருப்பு !
பற்ற வைத்தால் பற்றாது
அணைத்தால் அணையாது !
=======================
அவளை ஒரு கண நேரம்
மறந்து விட்டேன்
இறைவா! இந்த பாவத்தை
மன்னித்து விடு.
=============
என் காதலி
பிரிய வேண்டும என்று
பிரார்த்திக்க போகிறேன்
ஏனென்றால்
என் பிரார்த்தனை
எப்போதுமே நிறைவேறுவதில்லை.

======================
காதலில்,
வாழ்வுக்கும் சாவுக்கும்
வித்தியாசமில்லை,
யாரால்
என் உயிர் போகிறதோ
அவளை பார்த்துதான்
உயிர் வாழ்கிறேன்.
=======================
மலர்வனம் பற்றியோ
மதுவை பற்றியோ
பேச்சு வந்தால்
காதலியின் பெயர்
உதட்டில் வந்து விடுகிறது .
========================
இருண்டு போவதுதான்
என் விதி என்றால் !
அவள் கூந்தலாகவோ மச்சமாகவோ
நான் ஆகியிருக்க கூடாதா?!.
====================
அழைப்பதுமில்லை
கதவை தட்டுவதுமில்லை
அவள் நினைவு பெரிய கர்வத்தோடு
இதயத்தில் நுழைகிறது.....!

======================
கவிதைகளை செதுக்கிய சிற்பிகளுக்கு மறக்காமல் நன்றிகளை சொல்லிடுவோமா?.

Thursday, September 24, 2009

எதிரிக்கும் இப்படி நடக்ககூடாது ...!


பிறகு என்னங்க சொல்றது கடைசியாக ஒரு பதிவிட்டது செப்டம்பர் மாதம் 11 இல்....

அதற்கு பின் நிறைய விடயங்கள் பதிவிட தாயாராக இருக்கிறது ,அது மட்டுமில்லாமல் நிறைய நண்பர்கள் தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறார்கள் , அவர்களின் அழைப்பை ஏற்று பதிவிடவில்லை ,அதே போல நண்பர்களின் பதிவுகளுக்கு கருத்துரைகள் தெரிவிக்க முடியவில்லை...

இப்படி ஏகப்பட்ட சிக்கல்கள்....

ஏன் ?..ஏன்...ஏன்...? ......

என்று கேட்டால் உங்களுக்கு சிரிப்பு வரும்!

அது ஒன்டுமில்லீங்க கொஞ்ச நாளாக எனது "கி போர்டு " காணாமல் போய் விட்டது !!!!! இதனால் பதிவுகளை டைப் பண்ண முடியவில்லை....

கணனியில் அதிக நேரம் செலவழிப்பதை தடுக்க என் நண்பர்களால் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கைதான் இது !


இப்ப சொல்லுங்க என்மேலே ஏதாவது பிழை இருக்கா? இல்லைதானே !

இப்பதான் கண்டுபிடித்தேன் ( யாருக்கிட்ட...)

இனிமேல் வழமைபோல நம்ம மொக்கைகள் தொடர்ந்து துரத்தும் உங்களை.

Saturday, September 19, 2009

என்னாத்த சொல்லுறது இத பற்றி.........

காதல்,அழகு,கடவுள்,பணம் ........................

"SShathiesh said...
உங்கள் ஒரு தொடர் விளையாட்டுக்கு அழைத்துள்ளேன். வந்து விளையாடுங்கள்."..............


பிரபா-பிறந்தநாளுக்கு பிறகு மனிதர் சந்தோசமாக இருக்கின்றார். விடலாமா. இதோ அஞ்சல் கோலை கொடுத்துவிட்டேன். எப்புடி?""

இதெல்லாம் நண்பர் சதீஷிடமிருந்து வந்த ஆப்புக்கள் மன்னிக்கவும் அழைப்புக்கள்.
மூன்று மூணுக்கும் ஒரு நான்குக்கும் இனி நம்ம விளக்கங்களை பார்க்கலாமா?
என்ன தெளிவாக
குழப்புறேனா.....

இப்பிடி சூடுங்க
காதல்- 3 எழுத்து அழகு- 3 எழுத்து பணம் - 3 எழுத்து கடவுள்- 4 .
ஓகே இனி விசயத்துக்கு வருவோம் வாங்க....

காதல்.-
"காதல் ஒரு
எளிமையான பாடம்தான்
ஆனால் அதில் - பல பேர்
தோற்று போகிறார்கள்."
இது ஒரு கவிஞனின் பார்வையில் காதல் .

ஆனால் நமக்கு இன்னமும் உத்தியோக பூர்வமாக பூர்வமாக காதல் வரவில்லை என்றால் ,,,, (அடி உதை பின்னிடுவீங்க எனக்கு தெரியும் ...)
அது வேற கதை அதவிடுங்க...
இப்போதைய "காதலர்கள்"... சிலர்
இந்த காதலை சகிக்க முடியாத அளவுக்கு கொண்டு வந்து சேர்த்திருப்பது தான் இப்போது பெரியவங்களுக்கு இருக்கின்ற மிகப்பெரிய கவலை..














என்னசெய்றது காதலை காதலிப்போம். அத்தோடு கொஞ்சம் ......
Before & After Marriage (Love Humor & Jokes? )
Before Marriage


He: Yes. At last. It was so hard to wait.
She: Do you want me to leave?
He: NO! Don't even think about it.She: Do you love me?
He: Of course! Over and over!
She: Have you ever cheated on me?
He: NO! Why are you even asking?
She: Will you kiss me?
He: Every chance I get!
She: Will you hit me?
He: Are you crazy! I'm not that kind of person!
She: Can I trust you?
He: Yes.
She: Darling!




After marriage...
Simply read from bottom to top.



==============================



அழகு...
இதுவரைக்கும் இந்த அழகு ஆண்பாலா ? பெண் பாலா ?என்று எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. இருந்தாலும் அழகு என்றால் என்ன ? என்றால் எல்லோரிடமும் ஒவ்வொரு வித்தியாசமான பதில்கள் இருக்கும் என நம்புகிறேன்.
எமது கண்ணுக்கும் மனதுக்கும் இதம் சேர்கின்ற விசயங்களை அழகானவை என்று சொல்லலாமா? இருக்கலாம். சின்ன வயசிலிருந்து எனக்கு இயற்கையின் மேல் ஓர் அலாதி பிரியம் எனவே தான் கீழே உள்ளவைகளையும் நான் அழகானவை பட்டியலில் சேர்த்துள்ளேன்....













கடவுள் .............




கடவுள் "நம்பிக்கை" இருக்குதோ இல்லையோ அடியேன் காலையில் இவரிடமிருந்து விலகியிருப்பதே இல்லை.....ஆனால் இவர் எப்போதும் நேர்மையான தீர்ப்புகளை வழங்குவதில் கெட்டிக்காரர் ஆனால் இப்போதெல்லாம் இவர் ரொம்ப புசியாகி விட்டாரோ என்னவோ தெரியவில்லை , தீர்ப்புகள் வழங்குவதற்கு கால தாமத மாகிறது .சிலவேளைகளில் "நின்று" வழங்குவாரோ தெரியவில்லை....ஒன்றுமட்டும் உண்மை எல்லோரும் இவருக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதில் ரொம்ப கவனமாக இருப்பவர்களில் அடியேனும் ஒருவன்.
கடவுளிடத்தில் சிலருக்கு நம்பிக்கை இல்லாமல் போகலாம் ,ஆனால் "கடவுள்" மனிதனிடத்தில் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை, என்ற தத்துவத்தை உணர்த்திக்கொண்டே ஒவ்வொரு குழந்தையும் இந்த உலகில் பிறக்கிறது "




பணம்....



காசேதான் கடவுளப்பா ,அந்த கடவுளுக்கும் அது தெரியுமப்பா.....இதுக்கு பிறகு நான் சொல்ல என்ன இருக்கு......
அளவாய் வைத்துக்கொண்டால் அழகாய் இருக்கும் அளவுக்கு மீறினால் அவஸ்தையாய் இருக்கும்.


ஓகே ஓகே.... ஏதோ நம்மால் முடிந்தளவுக்கு தந்திருக்கிறோம் இனி.....நான் மாட்டிக்கொண்டது போல , மாட்டி விடுவது இவர்களை . ( பயப்படாதீங்க இதுதான் தொடர் பதிவு விதி முறை).
வந்து தொடருங்கள்......

லோஷன்

தமிழ்த்துளி (தேவன் மாயம்)

டொன்லி (பதுங்குகுழி )

கலை ராகல

ஞாபகம் இருக்கட்டும் காதல்,அழகு, கடவுள் ,.பணம் .